கழிவறையில் இப்படியா? நீதிமன்ற விசாரணைக்கு ஆஜரான இளைஞர்.. ஸ்டன் ஆன நீதிபதி!
Viral Video Gujarat High Court : கழிவறையில் இருந்தபடியே ஒருவர் நீதிமன்ற இணையவழி விசாரணைக்கு ஆஜரானது அங்கிருக்கும் நீதிபதி, வழக்கறிஞர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குஜராத் உயர் நீதிமன்றத்தில் நடைபெற்ற இணையவழி விசாரணையில் அரங்கேறியுள்ளது. இது சம்பந்தமான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

குஜராத், ஜூன் 27 : குஜராத் உயர் நீதிமன்றத்தில் நடந்த இணையவழி விசாரணையில் ஒருவர் கழிவறையில் அமர்ந்தபடியே பங்கேற்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. நாட்டிடல் தொழில்நுட்பங்கள் வளர்ந்து கொண்டே இருக்கிறது. அனைத்து துறைகளில் தொழில்நுட்பங்கள் வளர்ச்சி கண்டு வருகிறது. குறிப்பாக நீதிமன்றம் வரை அனைத்தும் மாறிவிட்டது. விசாரணை கூட, தற்போது இணையவழியில் நடந்து வருகிறது. கொரோனா காலத்திற்கு பிறகு, இணையவழி விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது. இதனால், வழக்கு தொடர்பாக விசாரணைக்கு இருக்கும் இடத்தில் இருந்தே சம்பந்தப்பட்ட நபர்கள் வீடியோ மீட்டிங்கில் கலந்து கொள்ளலாம். இந்த நிலையில், குஜராத் நீதிமன்றத்தில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.
இளைஞர் செய்த செயல் பலரையும் முகம் சுழிக்க வைத்தது என்றே சொல்லலாம். அதாவது, கழிவறையில் இருந்தபடியே, ஒருவர் விசாரணைக்கு இணையவழியில் இணைந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குஜராத் உயர் நீதிமன்றத்தில் 2025 ஜூன் 20ஆம் தேதி நடந்தள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.




முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்வது தொடர்பான வழக்கில், அந்த நபர் பிரதிவாதியாக ஆஜரானார். அந்த நபர் ஒரு குற்றவியல் வழக்கில் புகார் அளித்தவர் மற்றும் இந்த விசாரணையில் முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்ய வேண்டும் என்று மனுவை தாக்குதல் செய்தார். பின்னர், இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்தது.
வீடியோ வைரல்
A video showing a man attending Gujarat High Court virtual proceedings while seated on a toilet and apparently relieving himself has gone viral on the social media.
Read full story: https://t.co/FbendKMD2M #GujaratHighCourt #VirtualHearings #VideoConferencehearing… pic.twitter.com/spyxMiptiO
— Bar and Bench (@barandbench) June 27, 2025
இந்த விசாரணையின்போது தான், அந்த நபர் வீடியோ மீட்டிங்கில் கழிவறையில் இருந்தப்படி இணைந்துள்ளார். சமத் பேட்டரி என்ற பெயரில் வீடியோ மீட்டிங்கில் இணைந்த அந்த நபர், வீட்டில் இருந்த கழிவறையில் அமர்ந்திருந்தார். சிறிது நேரம் கழிவறையில் இருந்தப்படியே விசாரணையில் ஆஜாரானார்.
பின்னர், இறுதியில் தன்னைத்தானே துடைத்துக் கொண்டு, கழிவறையை விட்டு வெளியேறியது வீடியோவில் பதிவாகி இருக்கிறது. இணையவழி விசாரணையின்போது இதுபோன்று நடப்பது முதல்முறையல்ல. 2025 ஏப்ரல் மாதம் குஜராத் உயர் நீதிமன்ற இணையவழி விசாரணையில் ஒருவர் சிகரெட் புகைத்துக் கொண்டே ஆஜரானார். இதனை அடுத்து, அவருக்கு ரூ.50,000 அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.