Narendra Modi : அரசின் திட்டங்களில் தாமதம் கூடாது.. தலைவர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தல்!
48th Pragati Meeting Chaired By PM Modi | இந்திய பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் 48வது பிரகதி கூட்டம் நேற்று (ஜூன் 25, 2025) டெல்லியில் நடைபெற்றது. இதில் முக்கிய விவகாரங்கள் மற்றும் திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்ட நிலையில், மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த அதிகாரிகள் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

புதுடெல்லி, ஜூன் 26 : பொதுமக்கள் நலன் (Public Welfare) மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு (Economic Growth) உகந்த திட்டங்களில் ஏற்படும் தாமதம் அரசுக்கு கூடுதல் செலவை ஏற்படுத்துவதுடன், மக்கள் பலன் பெறுவதையும் தடுக்கும் என்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி (Indian Prime Minister Narendra Modi) தெரிவித்துள்ளார். 48வது பிரகதி கூட்டத்தில் (48th Pragati Meeting) பங்கேற்று பேசிய பிரதமர் மோடி இவ்வாறு கூறியுள்ளார். பல மூத்த தலைவர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் பங்கேற்ற இந்த கூட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடி பேசியது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற 48வது பிரகதி கூட்டம்
டெல்லியில் நேற்று (ஜூன் 25, 2026) பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் 48வது பிரகதி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மூத்த தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்ற நிலையில், முக்கிய விவகாரங்கள் மற்றும் திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. சுரங்கம், ரயில்வே, மற்றும் நீர்வளத்துறை ஆகிய துறைகளின் முக்கிய திட்டங்கள் குறித்து பிரதமர் மோடி ஆய்வு செய்தார். அப்போது அது குறித்து பேசி பிரதமர் மோடி, பொருளாதார வளர்ச்சிக்கும் பொது மக்கள் நலனுக்கும் இந்த திட்டம் இன்றி அமையாது. குறிப்பிட்ட காலக்கெடுக்குள் திட்டங்கள் முடிக்க வேண்டும் என ஆலோசனை வழங்கினார்.




மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த அதிகாரிகள் இணைந்து பணியாற்ற வேண்டும் – பிரதமர் மோடி
Chaired the 48th PRAGATI Session earlier this evening. Infrastructure was a key focus, with sectors like mines, railways and water resources being discussed. Reiterated the need for timely completion of projects. Also discussed aspects relating to Prime Minister-Ayushman Bharat…
— Narendra Modi (@narendramodi) June 25, 2025
அது குறித்து தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி இந்த திட்டங்களில் ஏற்படும் தாமதம் என்பது அரசுக்கு கூடுதல் செலவை ஏற்படுத்துவதுடன் உள்கட்டமைப்பு மற்றும் அத்தியாவசிய சேவைகளை மக்கள் பெறுவதில் தாமதம் ஏற்படுத்தும் என்று கூறினார். மேலும், மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்காக மத்திய மாநில அரசு அதிகாரிகள் இணைந்து பணியாற்ற வேண்டும் என்றும் அவர் கூறினார்.
ஆயுஷ்மான் பாரத் சுகாதார உள்கட்டமைப்பு இயக்கம் குறித்து ஆய்வு செய்த பிரதமர் மோடி
இந்த கூட்டத்தின் போது பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் சுகாதார உள்கட்டமைப்பு இயக்கம் குறித்து ஆய்வு செய்த பிரதமர் மோடி, அனைத்து மாநிலங்களும் லட்சிய மாவட்டங்கள், தொலைதூர பழங்குடி மற்றும் எல்லைப் பகுதிகளில் சிறப்பு கவனம் செலுத்தி சுகாதார உள்கட்டமைப்பு மேம்பாட்டை விரிவுபடுத்த வேண்டும் என்று கூறியிருந்தார். மேலும் ஏழைகள், ஒதுக்கப்பட்ட மற்றும் பின்தங்கிய மக்களுக்கும் தரமான சுகாதார வசதி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.