Dangeti Jahnavi : நாசாவுக்கு செல்லும் முதல் இந்திய பெண்.. 2029-ல் விண்வெளி பயணம்!
First Indian Woman to Go NASA | ஆந்திர பிரதேசத்தை சேர்ந்த டங்கேட்டி ஜானவி என்ற இளம் பெண், நாசா விண்வெளி பயண திட்டத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம் நாசாவுக்கு செல்லும் முதல் மற்றும் இளம் விண்வெளி வீரராக அவர் விளங்குகிறார். இதன் காரணமாக அவருக்கு பார்ராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

ஆந்திரா, ஜூன் 24 : ஆந்திர பிரதேசம் (Andhra Pradesh) மாநிலம், கோதாவரி மாவட்டத்தில் உள்ள பலகொள்ளு பகுதியை சேர்ந்த டங்கேட்டி ஜானவி என்ற இளம் பெண் நாசாவுக்கு (NASA – National Aeronautics and Space Administration) செல்ல தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம் நாசாவுக்கு செல்லும் முதல் இந்திய பெண்ணாக ஜானவி உள்ளார். இவர் நாசாவில் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், 2029 ஆம் ஆண்டு விண்வெளிக்கு பயணம் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக ஜானவிக்கு பாரட்டுக்கள் குவிந்து வருகின்றன. இந்த நிலையில், யார் இந்த டங்கேட்டி ஜானவி, அவர் நாசாவில் தேர்வு செய்யப்பட்டது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
நாசாவுக்கு தேர்வு செய்யப்பட்ட முதல் இந்திய பெண்
ஆந்திர பிரதேச மாநிலம், கோதாவரி மாவட்டத்தில் உள்ள பலகொள்ளு பகுதியை சேர்ந்த டங்கேட்டி ஜானவி என்ற இளம் பெண். இவர் Titan’s Orbital Port Space Station-க்கு செல்ல தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன் காரணமாக அவர் 2029 ஆம் ஆண்டு விண்வெளிக்கு செல்ல உள்ளதாக கூறப்படுகிறது. ஜானவி சிறு வயது முதலே விண்வெளி ஆராய்ச்சி மீது ஆர்வமாக இருந்த நிலையில், தனது திறமையின் காரணமாக இந்த இடத்தை பிடித்துள்ளார். ஜானவி Space Island-ன் புவியியல் பயிற்சிக்கு தேர்வு செய்யப்பட்ட முதல் பெண்ணாக இருப்பது மட்டுமன்றி, முதல் வெளிநாட்டு விண்வெளி ஆராய்ச்சியாளராகவும் உள்ளார்.




இந்தியாவுக்கு பெருமை சேர்த்த டங்கேட்டி ஜானவி
Congratulations to Dangeti Jahnavi from Palakollu on being selected as an astronaut!
Her journey—from West Godavari to NASA’s international air & space programme—is a testament to the talent and determination of young Indians.
Wishing her the very best for the upcoming mission… pic.twitter.com/Dwc977zdd3— Lokesh Nara (@naralokesh) June 23, 2025
யார் இந்த டங்கேட்டி ஜானவி?
ஜானவி STEM கல்வி மற்றும் விண்வெளி குறித்து மிகவும் ஆர்வம் கொண்ட இளம் பெண். இவர் இஸ்ரோவில் (ISRO – Indian Space Research Organization) என்ஐடி (NIT – National Institute of Technology) உள்ளிட்ட கல்வி நிலையங்களில் மாணவர்கள் மத்தியில் உரையாற்றியுள்ளார். அவர் தொடர்ச்சியாக விண்வெளி ஆராய்ச்சி குறித்த பணிகள், கருத்தரங்கங்களில் ஈடுபட்டு வருகிறார். இதன் காரணமாக அவர் தனது இளம் வயதிலேயே பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.