Mouth Care: 2 வாரங்களுக்கு மேல் வாயில் புண்.. வாய்ப் புற்றுநோயின் அறிகுறியா?
Mouth Cancer Symptoms: மருத்துவர்களின் கூற்றுப்படி, புகையிலை வைப்பவர்கள், புகைபிடிப்பவர்கள், மது அருந்துபவர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். வாயில் ஒரு புண் அல்லது வடு இரண்டு வாரங்களுக்குள் குணமாகவில்லை என்றால், அல்லது அது வளரத் தொடங்கினால், அதை உடனடியாகச் சரிபார்க்க வேண்டும்.
கோடை காலமாக இருந்தாலும் சரி, குளிர் காலமாக (Winter) இருந்தாலும் சரி பலருக்கும் வாயில் புண்கள், வெள்ளை அல்லது சிவப்பு புள்ளிகள் போன்ற பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். இதை பெரும்பாலும் மக்கள் உடல் சூட்டினால் ஏற்படுகிறது என்று நினைக்கிறார்கள். அதன்படி, வலி குறைவாகவும் சிறியதாகவும் இருப்பதால், இதை லேசாக எடுத்துக் கொள்கிறோம். வாய் புண்களுக்கு பல காரணங்களால் வரலாம். இருப்பினும், இது 2 வாரங்களுக்கு மேல் நீடித்தால், நீங்கள் அதை ஒருபோதும் புறக்கணிக்கக்கூடாது என்று சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர். மன அழுத்தம் (Mental Pressure), பல் பிரச்சனைகள் அல்லது ஒரு எளிய தொற்று காரணமாக வாய் புண்கள் ஏற்படலாம். மருத்துவர்களின் கூற்றுப்படி, வாய் புண்கள் 2 வாரங்களுக்குள் குணமடையவில்லை என்றால், அவை வாய் புற்றுநோயின் ஆரம்ப எச்சரிக்கை அறிகுறியாக இருக்கலாம். சரியான விழிப்புணர்வு இல்லாதது தாமதமாக கண்டறிதலுக்கு வழிவகுக்கும். எனவே சிறிய வாய் புண்கள் எவ்வாறு புற்றுநோயின் எச்சரிக்கை அறிகுறியாக மாறும் என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.
ALSO READ: காரணமே இல்லாமல் எலும்பு வலி, சோர்வா..? பிரச்சனைக்கு இதுவே காரணம்..!
வாய்வழி புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகள்:
வாய்வழி புற்றுநோயின் ஆரம்ப கட்டங்களில், அதன் அறிகுறிகள் பெரும்பாலும் லேசானவை. உண்மையில், குணமடையாத வாய் புண்கள் வெள்ளை அல்லது சிவப்பு புள்ளிகள், லேசான வலி அல்லது எரிதல் போன்ற அறிகுறிகளை ஏற்படுத்துகின்றன. இவை பெரும்பாலும் புறக்கணிக்கப்படுகின்றன. புகையிலை வைத்தல், புகைபிடித்தல் மற்றும் மது அருந்துதல் போன்ற பழக்கவழக்கங்களை மேற்கொள்கிறோம். அதனால்தான் புற்றுநோய் வளர்ந்து தீவிர பிரச்சனையாக மாறுகிறது.




யார் கவனமாக இருக்க வேண்டும்?
மருத்துவர்களின் கூற்றுப்படி, புகையிலை வைப்பவர்கள், புகைபிடிப்பவர்கள், மது அருந்துபவர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். வாயில் ஒரு புண் அல்லது வடு இரண்டு வாரங்களுக்குள் குணமாகவில்லை என்றால், அல்லது அது வளரத் தொடங்கினால், அதை உடனடியாகச் சரிபார்க்க வேண்டும். வாய்ப் புண்கள் பல வடிவங்களில் வரலாம். அவை பொதுவாக ஒன்று முதல் 2 வாரங்களுக்குள் குணமாகும் சிறிய, வலிமிகுந்த கொப்புளங்களை உள்ளடக்கும். மற்றொரு வகையில் வெள்ளை, வலை போன்ற புள்ளிகள் அல்லது எரிச்சலை ஏற்படுத்தும் புண்கள் மற்றும் இரத்தம் வரும் சிவப்புப் புள்ளிகள் மிகவும் ஆபத்தானவை என்று கூறப்படுகிறது.
எப்போது ஆபத்தானது?
வாய்ப் புண்கள் பெரும்பாலும் அதிர்ச்சி, மன அழுத்தம், வைட்டமின் குறைபாடுகள் அல்லது தொற்றுகளால் ஏற்படுகின்றன. 2 வாரங்களுக்கு மேல் நீடிக்கும் புண்கள் வாய்ப் புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம். லுகோபிளாக்கியா மற்றும் எரித்ரோபிளாக்கியா ஆகியவை புற்றுநோய்க்கு முந்தையதாகக் கருதப்படுகின்றன. சில புண்கள் சர்க்கரை நோய் போன்றவை தொடர்புடையதாக இருக்கலாம்.
ALSO READ: பெண்களிடையே அதிகரிக்கும் PCOS பிரச்சனை.. காரணம் என்ன..?
மருத்துவரை எப்போது பார்க்க வேண்டும்..?
வாய் புண்கள் அல்லது புண்கள் மீண்டும் மீண்டும் வந்தால், வலி இருந்தால் அல்லது நீண்ட நேரம் நீடித்தால் மருத்துவரைப் பார்ப்பது முக்கியம். குறிப்பாக புண்கள் இரண்டு வாரங்களுக்கு மேல் குணமடையவில்லை என்றால், வாயில் கட்டி, இரத்தம், தொடர்ந்து வலி, விழுங்குவதில், மெல்லுவதில் அல்லது பேசுவதில் சிரமம், கழுத்தில் நிணநீர் முனைகள் வீங்கி இருந்தால், உடனடியாக மருத்துவரைப் பார்க்க வேண்டும்.