Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

காலையில் செய்யும் இந்த 5 தவறுகள் சர்க்கரை அளவை அதிகரிக்கும் – தவிர்ப்பது எப்படி?

Blood Sugar Daily Tips : நம் நாள் முழுவதும் எப்படியிருக்கும் என்பதை காலையில் நாம் செய்யும் பழக்கங்கள் தீர்மானிக்கின்றன. குறிப்பாக நீரிழிவு பாதிப்பு உள்ளவர்கள், காலை நேரத்தில் செய்யும் தவறுகள் சர்க்கரை அளவை அதிகரிக்கும். இந்த கட்டுரையில் சர்க்கரை உயர்வை அதிகரிக்கும் தவறுகள் மற்றும் தவிர்ப்பது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

காலையில் செய்யும் இந்த 5 தவறுகள் சர்க்கரை அளவை அதிகரிக்கும் – தவிர்ப்பது எப்படி?
மாதிரி புகைப்படம்
karthikeyan-s
Karthikeyan S | Published: 29 Jun 2025 21:25 PM

இன்றைய காலகட்டத்தில் மக்களை குறிப்பாக இளைஞர்களை அதிகம் பாதிக்கும் பிரச்னைகளில் ஒன்றாக இருந்து வருகிறது நீரிழிவு நோய் (Diabetic). ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான மக்கள் இந்த பிரச்னையால் பாதிக்கப்பட்டு வருகின்றனர், மேலும் எந்த அறிகுறிகளும் இல்லாமல் கூட இரத்த சர்க்கரை (Blood Sugar) அளவு மக்களை பாதிக்கும். குறிப்பாக டைப் 2 நீரிழிவு நோயில், வாழ்க்கை முறை மற்றும் தினசரி பழக்கவழக்கங்கள் பெரும் பங்கு வகிக்கின்றன. சிறியதாகத் தோன்றும் சில காலைப் பழக்கங்கள் உங்கள் சர்க்கரை அளவை அதிகரிக்க மிகப்பெரிய காரணமாக மாறும் என்று மருத்துவர்களும் சுகாதார நிபுணர்களும் கூறுகிறார்கள்.

காலை உணவு நாள் முழுவதும் உடலுக்கு ஆற்றலைத் தருவதோடு, இரத்த சர்க்கரை அளவை சீராக வைத்திருக்க உதவுகிறது. அதில் அதிக கார்போஹைட்ரேட்டுகள் அல்லது பிரட், பிஸ்கட் போன்ற பதப்படுத்தப்பட்ட சர்க்கரை சேர்க்கப்பட்ட உணவுகள் இருந்தால், அது உங்கள் நீரிழிவு நோயை மோசமாக்கும். இதற்கு பதிலாக, நீங்கள் ஓட்ஸ், பாசிப்பருப்பு, முட்டை, கஞ்சி, மற்றும் சர்க்கரை இல்லாத கிரீன் டீ அல்லது எலுமிச்சைப் பழம் போன்றவற்றை எடுத்துக்கொள்ளலாம்.  உடலின் வளர்சிதை மாற்றத்திற்கு காலை நேரம் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. இந்த நேரத்தில் தவறான உணவை எடுத்துக்கொண்டால், அது நாள் முழுவதும் இரத்த சர்க்கரை அளவைப் பாதிக்கும்.

சர்க்கரை அளவை அதிகரிக்கும் சில பொதுவான தவறுகள்

காலையில் எழுந்தவுடன் தண்ணீர் குடிக்காமல் டீ அல்லது காபி குடிப்பது, காலை உணவைத் தவிர்ப்பது அல்லது தாமதமாக சாப்பிடுவது, நீண்ட நேரம் பசியுடன் இருப்பது, உடல் செயல்பாடுகளைச் செய்யாமல் இருப்பது போன்ற பழக்கவழக்கங்கள் அனைத்தும் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கின்றன.

டெல்லி எய்ம்ஸ்-ல் உள்ள நாளமில்லா சுரப்பியியல் துறையைச் சேர்ந்த டாக்டர் நிகில் டாண்டன் கூறுகையில், மக்கள் காலையில் முதல் பானமாக சர்க்கரை அதிகம் சேர்க்கப்பட்ட டீ அல்லது காபியை அருந்துகிறார்கள். இந்தப் பழக்கம் காலையில் வெறும் வயிற்றில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகிறது. மேலும் இரத்த குளுக்கோஸ் அளவை திடீரென அதிகரிக்கக்கூடும். இது தவிர, காலை உணவைத் தாமதப்படுதமாக சாப்பிடுபவர்களுக்கு அல்லது அதை முற்றிலுமாகத் தவிர்ப்பவர்களுக்கு, அவர்களின் உடலில் இன்சுலின் அளவு சமநிலையற்றதாக மாறத் தொடங்குகிறது. இது சர்க்கரை அளவு அதிகாகவோ அல்லது திடீரெனவும் குறையும் அபாயத்தையோ அதிகரிக்கிறது.

உங்கள் நாளை எப்படி தொடங்குவது?

இந்தத் தவறுகளைத் தவிர்க்க, உங்கள் காலையை சரியான வழக்கத்துடன் தொடங்குவது மிக முக்கியம். நீங்கள் எழுந்தவுடன் வெதுவெதுப்பான நீரைக் குடிப்பது, அதிகாலையில் ஆரோக்கியமான காலை உணவை உட்கொள்வது, ஸ்மார்ட்போன் பார்க்கும் நேரத்தை தவிர்த்து, குறைந்தது 20-30 நிமிடங்களுக்கு உடற்பயிற்சி மேற்கொள்வது போன்றவை உங்களை சர்க்கரை நோய் அபாயத்தில் இருந்து பாதுகாக்கும்.