AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

நடிகர் தனுஷிற்காக கதை எழுதும் கப்புள் ஃப்ரண்ட்லி பட இயக்குநர்

Couple Friendly Director Ashwin Chandrasekhar : சமீப காலமாக தெலுங்கு சினிமாவில் வெளியாகும் சின்ன சின்ன படங்கள் தொடர்ந்து தென்னிந்தியா முழுவதும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. அந்த வகையில் சமீபத்தில் தெலுங்கு சினிமாவில் கப்புள் ஃப்ரண்ட்லி படம் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

நடிகர் தனுஷிற்காக கதை எழுதும் கப்புள் ஃப்ரண்ட்லி பட இயக்குநர்
தனுஷ் மற்றும் அஷ்வின் சந்திரசேகர்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 23 Apr 2026 21:49 PM IST

தெலுங்கு சினிமாவில் கடந்த 2026-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் கப்புள் ஃப்ரண்ட்லி. இந்தப் படத்தை இயக்குநர் அஸ்வின் சந்திரசேகர் எழுதி இயக்கி இருந்தார். மேலும் ரொமாண்டிக் ட்ராமா பாணியில் உருவான இந்தப் படத்தில் நடிகர் சந்தோஷ் சோபன் நாயகனாக நடித்து இருந்த நிலையில் நடிகை மானஸா வாரணாசி நாயகியாக நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர்களுடன் இணைந்து நடிகர்கள் ராஜீவ் கனகலா,
கோபராஜு ரமணா, தீரஜ் ரெட்டி, லிவிங்ஸ்டன், யோகி பாபு, சுனில் ரெட்டி, நரசிம்மா, பார்கவ் ராம், விஜய் வல்லபனேனி, ஸ்ரீரஞ்சனி, பிரமோதினி பம்மி, அஞ்சலி நாயர், ஃபௌஸி, ஹிமா வர்மா, தரணி வி, சாவித்திரி என பலர் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தப் படம் திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படம் தெலுங்கு மொழியில் உருவாகி இருந்தாலும் முழுக்க முழுக்க சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் படமாக்கப்பட்டதால் படம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தின் இயக்குநர் தற்போது நடிகர் தனுஷிற்கு கதை எழுதி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

நடிகர் தனுஷிற்காக கதை எழுதும் கப்புள் ஃப்ரண்ட்லி பட இயக்குநர்:

இயக்குநர் அஷ்வினின் அடுத்த திட்டம் குறித்தும் யுவி கிரியேஷன்ஸ் நிறுவனத்துடன் தீவிரமாகப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. இதற்கு இணையாக, மூத்த தயாரிப்பாளர் ஏ. எம். ரத்னமும், மற்றொரு சாத்தியமான கூட்டு முயற்சி குறித்து இயக்குனருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது. பல தயாரிப்பு நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருவதால், தனது அடுத்த நகர்வை முன்னெடுக்கும் அஷ்வின் சந்திரசேகர் தற்போது ஒரு வலுவான நிலையில் இருப்பதாகத் தெரிகிறது. இவற்றுள் எந்தத் திட்டம் முதலில் செயல்வடிவம் பெறும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read… தமிழகத்தில் ஜன நாயகக் கடமையை ஆற்றிய உச்ச நடிகர்கள்… யார் யார் என்று தெரியுமா?

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… குடிமக்கள் தற்போது குடிகார மக்கள்.. ஓட்டு போட வந்து கொந்தளித்த சிவக்குமார்

Follow Us