AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

இது மிகவும் ஸ்பெஷலான ஒரு வெற்றி… மா இண்டி பங்காரம் பட வெற்றி குறித்து சமந்தா பேச்சு

Samantha Ruth Prabhu Recent Interview | தென்னிந்திய சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வருபவர் நடிகை சமந்தா ரூத் பிரபு. இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சனா ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.

இது மிகவும் ஸ்பெஷலான ஒரு வெற்றி… மா இண்டி பங்காரம் பட வெற்றி குறித்து சமந்தா பேச்சு
மா இண்டி பங்காரம்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 03 Jul 2026 12:36 PM IST

தென்னிந்திய சினிமாவில் பிசியான நடிகையாக வலம் வருகிறார் நடிகை சமந்தா ரூத் பிரபு. இவரது நடிப்பில் தன்னிந்திய மொழிகளில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நீண்ட நாட்களுக்குப் பிறகு நடிகை சமந்தா ரூத் பிரபு கதையின் நாயகியாக நடித்து திரையரங்குகளில் வெளியான படம் மா இண்டி பங்காரம். தெலுங்கு மொழியில் உருவான இந்தப் படம் பான் இந்திய மொழிகளில் திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படம் கடந்த 19-ம் தேதி ஜூன் மாதம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூலிலும் மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்தப் படத்தில் நடிகை சமந்தா ரூத் பிரபு உடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர்.

மேலும் இந்தப் படத்தினை பிரபல தயாரிப்பு நிறுவனமான ட்ரலலா மூவிங் பிக்சர்ஸ் சார்பாக தயாரிப்பாளர்கள் சமந்தா ரூத் பிரபு, ராஜ் நிடிமோரு மற்றும் ஹிமான்க் ரெட்டி துவ்வுரு ஆகியோர் இணைந்து இந்தப் படத்தினை தயாரித்து உள்ளனர். இந்த நிலையில் இந்தப் படத்தின் வெற்றி குறித்து சமந்தா ரூத் பிரபு பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

ஆரம்பத்திலிருந்தே ராஜ் இந்தக் கதையை முழுமையாக நம்பினார்:

இது ஒரு வித்தியாசமான உணர்வைத் தருகிறது. ஒவ்வொரு திரைப்படமும் சிறப்பானதுதான், ஆனால் இது மிகவும் தனிப்பட்ட ரீதியில் நெருக்கமான ஒன்று. இதில் உணர்வுப்பூர்வமான ஈடுபாடு உள்ளது. ஆரம்பத்திலிருந்தே ராஜ் இந்தக் கதையை முழுமையாக நம்பினார். ஒரு எழுத்தாளராகவும், இந்தக் கதைக்களத்தை உருவாக்கியவராகவும் மிகுந்த உறுதியுடன் அவர் இதைச் செதுக்கினார். ஒரு படைப்பை அடிமட்டத்திலிருந்து இணைந்து உருவாக்கும்போது, ​​அதன் வெற்றி அதை நம்பிய அனைவருக்கும் – குறிப்பாகச் சந்தேகங்கள் எழுந்த தருணங்களிலும் அதை நம்பியவர்களுக்கு – உரியதாகிறது.

அதனால், நாங்கள் இந்த வெற்றியை மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகிறோம். இதுவரை பெரிய அளவில் கொண்டாட்டங்கள் எதையும் நாங்கள் நடத்தவில்லை என்றுதான் நினைக்கிறேன்; இப்போதைக்கு இந்த உணர்வை முழுமையாக உள்வாங்கிக்கொண்டு, ரசிகர்களுக்கும் ஒட்டுமொத்தக் குழுவினருக்கும் நன்றி தெரிவித்து வருகிறோம். நன்றியுணர்வு என்பதே மிகப்பெரிய கொண்டாட்டம் என்று நான் கருதுகிறேன். வெற்றி என்பது அற்புதமான ஒன்று; ஆனால், அதே சமயம் நேர்மையான மற்றும் மக்களின் நேரத்தை மதிப்புமிக்கதாக்கும் கதைகளைத் தொடர்ந்து சொல்ல வேண்டிய பொறுப்பும் அதனுடன் வருகிறது. ஒரு தயாரிப்பாளராக, அதுவே எப்போதும் எனது முன்னுரிமையாக இருக்கும்.

Also Read… அரசன் பட ஷூட்டிங் ஸ்பாட்டில் ஜாலியாக இருக்கும் சிம்பு – வைரலாகும் வீடியோ

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… பூஜையுடன் தொடங்கியது துருவ் விக்ரமின் புதுப் படம் – வைரலாகும் போட்டோஸ்

Follow Us