தக் லைஃப் படத்தின் தோல்வி குறித்து மனம் திறந்து பேசிய மணிரத்னம்
Director Maniratnam: இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் தக் லைஃப். மாபெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெறாமல் தோல்வியை சந்தித்தது. இந்த நிலையில் படத்தின் தோல்வி குறித்து இயக்குநர் மணிரத்னம் பேசியது தற்போது வைரலாகி வருகின்றது.

இயக்குநர் மணிரத்னம் (Director Maniratnam) இயக்கத்தில் நடிகர் கமல் ஹாசன் (Actor Kamal Haasan) நடிப்பில் கடந்த ஜூன் மாதம் 5-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் தக் லைஃப். இந்தப் படத்தில் அறிவிப்பு வெளியானதில் இருந்தே ரசிகர்களிடையே மாபெரும் எதிர்பார்ப்பு அதிகரித்தது. அதற்கு காரணம் மணிரத்னம் மற்றும் கமல் ஹாசனின் கூட்டணியில் முன்னதாக வெளியான படம் நாயகன். இந்தப் படத்திற்கு பிறகு சுமார் 37 வருடங்கள் கழித்து மீண்டும் இந்த கூட்டணி அமைந்ததுதான் காரணம். நாயகன் படம் வெளியான போது ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக அந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகும் போது பிறக்காதவர்கள் கூட பின்நாட்களின் அந்தப் படத்தைப் பார்த்து அதற்கு சில்லறைகளை சிதறவிட்டது குறிப்பிடத்தக்கது. கேங்ஸ்டர்ட் படங்களுக்கு தமிழ் சினிமாவில் கல்ட் படமாக நாயகன் படம் இருப்பது குறிப்பிடத்தக்கது.
இப்படி சினிமா ரசிகர்களால் கொண்டாடப்படும் நாயகன் படத்தை கொடுத்த இவர்களின் காம்போ மீண்டு இணைவதை ரசிகர்கள் ஆவளுடன் எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்த நிலையில் இந்த கூட்டணி மீண்டும் தக் லைஃப் படத்தில் இணைந்தது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
ரசிகர்களுக்கு ஏமாற்றத்தைக் கொடுத்த தக் லைஃப் படம்:
தக் லைஃப் படத்தின் வெளியீட்டிற்கு முன்பு நடிகர் கமல் ஹாசன் கன்னட மொழி குறித்து பேசியது கன்னடர்கள் இடையே சர்ச்சையை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து படம் குறிப்பிட்ட நேரத்தில் கர்நாடகாவில் மட்டும் வெளியாகவில்லை. மற்ற மாநிலங்களில் குறிப்பிட்ட நேரத்தில் படம் வெளியாகியும் ரசிகர்களின் கவனத்தைப் பெற தவறிவிட்டது.
நாயகன் படத்தின் மீதான எதிர்பார்ப்புடன் திரையரங்குகளுக்கு தக் லைஃப் படத்தைப் பார்க்க சென்ற ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிச்சமாக அமைந்துள்ளது. இதனால் படம் தோல்வியை சந்தித்தது. மேலும் ரசிகர்களிடையே இருந்து நெகட்டிவான விமர்சனங்களே தொடர்ந்து வெளியாகி வந்தது குறிப்பிடத்தக்கது.
தக் லைஃப் பட தோல்வி குறித்து பேசிய மணிரத்னம்:
இந்த நிலையில் சமீபத்தில் இயக்குநர் மணிரத்னம் அளித்தப் பேட்டி ஒன்றில் தக் லைஃப் படத்தின் தோல்வி குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார். அதில் மணிரத்னம் ரசிகர்கள் நாயகன் போன்ற ஒரு படத்தை எதிர்பார்த்தது குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார். அந்தப் பேட்டியில் மணிரத்னம் பேசியதாவது, “ஒரு படக்குழுவாக நாயகன் மாதிரி ஒன்று இல்லாமல் வித்யாசமான ஒன்றை கொடுக்க விரும்பினோம். ஆனால் அது ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை.
மேலும் நாயகன் மாதிரியான ஒரு படத்தை எதிர்பார்த்த ரசிகர்களிடம் மன்னிப்பு கோருகிறேன். மேலும் நாங்கள் செய்த ஒன்றை திரும்ப செய்ய வேண்டும் என்பது எங்கள் நோக்கம் அல்ல. புதிதாக ஒன்றை ரசிகர்களுக்கு கொடுக்க விரும்பினோம். ஆனால் ரசிகர்கள் படத்தின் மீது அதிகப்படியான எதிர்பார்ப்பை வைத்தார்கள் என்பதைவிட எங்களது கற்பனைகளுக்கு அப்பால் வெகு தொலைவில் ரசிகர்களின் எதிர்பார்ப்பு இருக்கிறது என்று நினைக்கிறேன் என்றும் மணிரத்னம் தெரிவித்துள்ளார். இது தற்போது இணையத்தில் கவனம் பெற்று வருகின்றது.
இணையத்தில் கவனம் பெரும் மணிரத்னம் பேட்டி:
#ManiRatnam in recent articles about #ThugLife:
“For those who were expecting another Nayakan from the two of us, all I can say is we are SORRY. It was never our intention to go back. We wanted to do something completely different. I think more than over-expectation, it was… pic.twitter.com/fnxPECMKwN
— AmuthaBharathi (@CinemaWithAB) June 24, 2025