வைரமுத்து நல்ல கவிஞர்… ஆனால் நல்ல மனிதர் இல்லை – கடுமையாக பேசிய கங்கை அமரன்
Gangai Amaran: கோலிவுட் சினிமாவில் பிரபல பாடலாசிரியராக இருந்தவர் கவிஞர் வைரமுத்து. இவர் மீது பாடகி சின்மயி தன்னிடம் தவறாக நடந்துகொண்டதாக புகார் தெரிவித்த பிறகு தொடர்ந்து பலரும் வைரமுத்து மீது குற்றம் சாட்டினர். இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கங்கை அமரன் வைரமுத்து பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

பிரபல இசையமைப்பாளரும் பாடகருமான கங்கை அமரன் (Gangai Amaran) சமீபத்தில் பேட்டி ஒன்றில் பாடலாசிரியர் வைரமுத்து (Vairamuthu) குறித்து பேசியது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. அந்தப் பேட்டியில் கங்கை அமரன் சின்மயிக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக வைரமுத்துவை மிகவும் கடுமையகா தாக்கி பேசியிருந்தார். அந்தப் பேட்டியில் பாடகி சின்மையி இருந்த போது பேசிய கங்கை அமரன் ஏன் மா வைரமுத்து மீது குற்றச்சாட்டு வைக்கிற? அவரு ரொம்ப நல்ல மனுசன் நீ இப்படி சொல்லாமா என்று சர்காஸ்டிகாக பேசுகிறார். தொடர்ந்து பேசிய அவர் வைரமுத்து நல்ல கவிஞர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் அவர் நல்ல மனிதர் கிடையாது என்று தெரிவித்தார். மேலும் நாங்கள் எல்லாரும் நண்பர்கள் தான் என்றாலும் நண்பன் தவறு செய்தால் அவரது தவறுகளை சுட்டிக்காட்டாமல் இருக்க முடியாது என்றும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய கங்கை அமரன் ஒரு பெண் தனக்கு நடந்த அநியாயத்தை வெளிபடையாக பேசும் போது அவருக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்றே நான் நினைப்பேன். சின்மயி மிகவும் கஷ்டப்பட்டே பாடகியாக ஆனார். அவர் தனக்கு ஏற்பட்ட துன்புறுத்தல்களை வெளிப்படையாக பேசிய பிறகு இந்த சமூகத்தில் நிறைய சவால்களை எதிர்கொண்டார். அவருக்கு ஆதரவாக நான் எப்போதும் இருப்பேன் என்றும் தெரிவித்து இருந்தார்.




இணையத்தில் வைரலாகும் கங்கை அமரனின் பேச்சு:
கங்கை அமரனுக்கும் வைரமுத்துக்கும் என்ன வாய்க்கா தகராறா?
ஆனா இத்தன வருசத்துக்கு பிறகு சின்மயிக்கு ஒரு ஓப்பன் சப்போர்ட் கிடைச்சு இருக்கு. 👏🏾👏🏾👏🏾 pic.twitter.com/9iKIG0kACK
— αмαяαη (@leochordia) June 10, 2025
வைரமுத்து மீது பாலியல் ரீதியாக குற்றச்சாட்டு வைத்த சின்மயி:
கடந்த 2018-ம் ஆண்டு பிரபல பாடகி சின்மயி பிரபல பாடலாசிரியர் வைரமுத்து மீது பாலியல் ரீதியான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இது தமிழ் சினிமா மட்டும் இன்றி ஒட்டுமொத்த இந்திய சின்மா துறையையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. #MeToo என்ற ஹேக்ஸ்டேக் இணையத்தில் வைரலாகி திரைத்துறை மட்டும் இன்றி பல துறைகளில் பெண்கள் தாங்கள் சந்தித்த பாலியல் ரீதியான துன்புறத்தல்கள் குறித்து வெளிப்படையாக பேசத் தொடங்கினர்.
மேலும் பாடகி சின்மயி போல திரைத் துறையில் உள்ள பல பெண்களும் வைரமுத்துவிற்கு எதிராக தங்களது கருத்துகளை முன்வைத்தனர். அதில் குறிப்பாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் சகோதரியும் இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷின் தாயுமான ஏ.ஆர்.ரைஹானா வைரமுத்து மீதான குற்றச்சாட்டை உறுதி செய்யு வகையில் பேட்டி ஒன்றில் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
பாடகி சின்மயி இன்ஸ்டாகிராம் பதிவு:
View this post on Instagram
தமிழ் திரைத்துறையில் தடை செய்யப்பட்ட சின்மயி:
இந்த #MeToo சர்ச்சை தமிழ் திரைத்துறையில் பூதாகரமாக கிளம்பியதைத் தொடர்ந்து பாடகி சின்மயி தமிழ் திரைத்துறையில் டப்பிங் பேசவும் பின்னணி பாடல் பாடவும் தடை விதிக்கப்பட்டது. இதற்கு வேறு வேறு காரணங்கள் தெரிவிக்கப்பட்டாலும் முக்கிய காரணம் வைரமுத்து மீது அவர் குற்றம் சாட்டியதுதான் என்பது அனைவருக்கும் புரிந்த ஒன்றே.
தமிழ் திரைத் துறையில் தடை செய்யப்பட்ட பாடகி சின்மயி தெலுங்கு சினிமாவில் முழுவதுமாக கவனம் செலுத்தத் தொடங்கினார். இந்த நிலையில் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான தக் லைஃப் படத்தில் முத்த மலை பாடலை தெலுங்கு மற்றும் இந்தி வெர்ஷனில் இவர் பாடியுள்ளார்.
ஆனால் தமிழில் பாடகி தீ தான் இந்தப் பாடலை பாடியிருந்தார். தக் லைஃப் படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு தீ வரமுடியாத காரணத்தால் இசை வெளியீட்டு விழாவில் பாடகி சின்மயி முத்த மழைப் பாடலை பாடினார். அது இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து ஏன் சின்மயி தமிழில் பாடவில்லை என்று ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பத் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.