நிறைவடைந்தது இரண்டு வானம் படத்தின் ஷூட்டிங்… விஷ்ணு விஷாலின் நெகிழ்ச்சிப் பதிவு
Irandu Vaanam Movie: தமிழ் சினிமாவில் பல வித்யாசமான படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் நடிகர் விஷ்ணு விஷால். இவரது நடிப்பில் வெளியான பல படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் தற்போது இவரது நடிப்பில் உருவாகியுள்ள இரண்டு வானம் படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்தது.

நடிகர் விஷ்ணு விஷாலின் (Actor Vishnu Vishal) நடிப்பில் உருவாகியுள்ள படத்தின் 150 நாட்கள் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இயக்குநர் ராம் குமார் இந்தப் படத்தை இயக்கி உள்ளார். இவர் முன்னதாக நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான ராட்சசன் படத்தை இயக்கி இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்தப் படத்தில் பிரபல நடிகை மமிதா பைஜூ நாயகியாக நடித்துள்ளார். மேலும் தமிழ் சினிமாவில் பல ஹிட் படங்களை தயாரித்த சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்து உள்ளது. முன்னதாக படத்தின் போஸ்டர் வெளியான போதே படம் வித்யாசமான கதை அம்சத்தை கொண்டுள்ளது தெரியவந்தது. ஃபேண்டசி ரொமாண்டிக் படமாக உருவாகியுள்ள இந்த இரண்டு வானம் படத்திற்கு இசையமைப்பாளர் திபு நினன் தாமஸ் இசையமைத்துள்ளார்.
படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது குறித்து நடிகர் விஷ்ணு விஷால் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது, இரண்டுவானம் படத்தின் கடைசி நாள் இன்று. 150வது நாள் படப்பிடிப்பு. நீங்களும் விரைவில் பெரிய திரையில் உணரக்கூடிய ஒரு அற்புதமான பயணம் இது. இயக்குநர் ராம்குமார் மீண்டும் தனித்துவமான மற்றும் சுவாரஸ்யமான ஒன்றை உருவாக்கியுள்ளார் என்று தெரிவித்துள்ளார்.
நடிகர் விஷ்ணு விஷால் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
Last day of #IranduVaanam…
150th day of shoot…
Its been a journey that you also will get to feel on the big screen soon ….😍🙏@dir_ramkumar has cooked something unique and interesting again…Thank you @SathyaJyothi ⭐ pic.twitter.com/gu8rHE1CEA
— VISHNU VISHAL – VV (@TheVishnuVishal) June 10, 2025
விஷ்ணு விஷாலின் நடிப்பில் கோலிவுட் சினிமாவில் ஹிட் அடித்தப் படங்கள்:
கடந்த 2009-ம் ஆண்டு இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகம் ஆனார் விஷ்ணு விஷால். அறிமுகம் ஆன முதல் படத்திலேயே ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்தை தொடர்ந்து இவரது நடிப்பில் வெளியான குள்ளநரி கூட்டம், நீர் பறவை, முண்டாசுப்பட்டி, ஜீவா, இன்று நேற்று நாளை, மாவீரன் கிட்டு, ராட்சசன்,FIR மற்றும் கட்டா குஸ்தி ஆகிய படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.