19 ஆண்டுகளை நிறைவு செய்தது தனுஷின் திருவிளையாடல் ஆரம்பம் படம்!
19 Years Of Thiruvilaiyaadal Aarambam Movie: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவரது நடிப்பில் முன்னதாக திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றப் படம் திருவிளையாடல் ஆரம்பம். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி தற்போது 19 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவர் தற்போது தொடர்ந்து அழுத்தமான கதைகளில் நடித்து வரும் நிலையில் முன்பு சினிமாவில் நடிக்கத் தொடங்கிய ஆரம்ப காலக்கட்டத்தில் தொடர்ந்து மிகவும் காமெடியான ஜாலியான படங்களிலேயே நடித்து வந்தார். அந்த வகையில் கடந்த 15-ம் தேதி டிசம்பர் மாதம் 2006-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் திருவிளையாடல் ஆரம்பம். இந்தப் படத்தை இயக்குநர் பூபதி பாண்டியன் எழுதி இயக்கி இருந்தார். நடிகர் தனுஷ் இந்தப் படத்தில் நாயகனாக நடித்து இருந்த நிலையில் நடிகை ஸ்ரேயா சரண் நாயகியாக நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படத்தில் இவர்களுடன் இணைந்து நடிகர்கள் பிரகாஷ் ராஜ், கருணாஸ், சரண்யா பொன்வண்ணன், டி.எஸ்.பி.கே.மௌலி, மயில்சாமி, இளவரசு, கிரேஸ் கருணாஸ், காதல் சுகுமார், கார்த்திக் கண்ணையன், வர்ணிகா, மீனா குமாரி, பசி சத்யா, கிருஷ்ணமூர்த்தி, சிங்கமுத்து, பயில்வான் ரங்கநாதன், கடுகு ராமமூர்த்தி என பலர் இந்தப் படத்தில் முன்னணி வேடத்தில் நடித்து இருந்தனர்.
திரையரங்குகளில் வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான ஆர்.கே.புரடெக்ஷன்ஸ் சார்பாக தயாரிப்பாளர் விமலா கீதா தயாரித்து இருந்தார். மேலும் இந்தப் படத்தில் இசையமைப்பாளர் டி. இமான் இசையமைத்து இருந்தார். படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது போல பாடல்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
Also Read… ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியானது ஆரோமலே படம்… விமர்சனம் இதோ!




19 ஆண்டுகளை நிறைவு செய்தது திருவிளையாடல் ஆரம்பம் படம்:
ரொமாண்டிக் காமெடி பாணியில் உருவான இந்தப் படத்தில் மிடில் க்ளாஸ் ஃபேமிலியை சேர்ந்த நடிகர் தனுஷும் மிகப்பெரிய பணக்கார வீட்டு பெண்ணான ஸ்ரேயாவும் காதலிக்கிறார்கள். இவர்களின் காதலுக்கு ஸ்ரேயாவின் அண்ணன் பிரகாஷ் ராஜ் எதிர்ப்பு தெரிவிக்கிறார். இதனைத் தொடர்ந்து அவர் அந்த காதலை பிரிப்பதற்காக பல சதிகளை செய்கிறார். அந்த சதிகளை முறியடித்து தனுஷ் மற்றும் ஸ்ரேயா இருவரும் தங்களது காதலில் ஜெயித்தார்களா இல்லையா என்பதே படத்தின் கதை. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி தற்போது 19 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.
Also Read… Billa: வசூலின் உச்சம்.. வெளியாகி 18 ஆண்டுகளை கடந்த அஜித் குமாரின் பில்லா திரைப்படம்!