Cinema Rewind : நான் சூப்பர் ஹீரோவாக வருவேன் என்று சொன்னவர் – தனுஷ் உருக்கம்
Dhanush Talks About The Director : தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக இருந்து வருபவர் தனுஷ். இவர் தமிழைத் தொடர்ந்து பான் இந்திய மொழிகளில் படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், இவர் முன்னதாக பேசியிருந்த பேட்டி ஒன்றில், தன்னை முதலில் சூர் ஹீரோவாக வருவேன் எனச் சொன்ன இயக்குநர் பற்றிப் பேசியிருந்தார். அது யார் என்பதைப் பற்றி விவரமாகப் பார்க்கலாம்.

தமிழ் சினிமாவை கடந்து பான் இந்திய நாயகனாக இருந்து வருபவர் தனுஷ் (Dhanush) . இவரின் முன்னணி நடிப்பில் தமிழ், தெலுங்கு, மற்றும் இந்தி என பல்வேறு மொழிகளில் படங்கள் வெளியாகி வெற்றி பெற்றிருக்கிறது. அந்த வகையில் நடிகர் தனுஷ் சினிமாவில் நடிகர் மட்டுமில்லாமல், இயக்குநராகவும் படங்களில் பணியாற்றி வருகிறார். இவரின் இயக்கத்தில் இதுவரை 3 படங்கள் வெளியாகியிருக்கிறது. அதில் 2 படங்கள் சூப்பர் ஹிட்டாகியிருக்கிறது. அதைத் தொடர்ந்து 4வது திரைப்படமாக இட்லி கடை (Idly Kadai) என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் அவரே முன்னணி நாயகனாக நடித்திருக்கும் நிலையில், ரிலீசிற்கு தயாராகி வருகிறது. இந்த படத்தினை தொடர்ந்து நடிகர் தனுஷ் அடுத்தடுத்த படங்களில் நடிப்பதற்கும் ஒப்பந்தமாகி வருகிறார். தமிழ் சினிமாவில் கடந்த 2002ம் ஆண்டு வெளியான “துள்ளுவதோ இளமை” (Thulluvadho Ilamai) என்ற படத்தின் மூலம் நடிகராக சினிமாவில் நுழைந்த தனுஷ் , பல விமர்சனங்களைக் கடந்து தற்போது முன்னணி நாயகனாக நடித்துள்ளார்.
அந்த அளவிற்குத் தமிழ் சினிமாவை கடந்து தெலுங்கிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறார் நடிகர் தனுஷ். இந்நிலையில், அவர் முன்னதாக பேசியிருந்த நேர்காணல் ஒன்றில், தன்னை முதலில் சூப்பர் ஹீரோவாக வருவான் என்று வாழ்த்தியவர் இயக்குநர் பாலு மகேந்திராதான் (Director Balu Mahendra), என ஓபனாக கூறியுள்ளார். அவர் பேசியது குறித்து விளக்கமாகப் பார்க்கலாம்.
இயக்குநர் பாலு மகேந்திரா குறித்து தனுஷ் பேச்சு :
அந்த நேர்காணலில் நடிகர் தனுஷ், “துள்ளுவதோ இளமை படத்தை பார்த்துவிட்டு, இவனா ஹீரோ என பலரும் என்னை விமர்சனங்கள் செய்தனர். ஆனால் அந்த படத்தின் ட்ரெய்லரை பார்த்துவிட்டு, “அந்த பையன் நிச்சயமாகப் பெரிய ஸ்டாராக வருவான்” என்று வெற்றிமாறனிடம் கூறியவர் இயக்குநர் பாலு மகேந்திரா சார்தான். என்னுடைய தோற்றத்திற்காகப் பலரும் பலவிதமாக என்னை விமர்சனங்கள் செய்தனர், அப்பவே இயக்குநர் பாலு மகேந்திரா ஒரு நேர்காணலில் கூறியிருந்தார், “தனுஷ் ஒரு பிரென்ச் மாடல், அவர் இந்தியன் லுக் இல்லை இன்டர்நெஷனல் லுக் ” என்று பேசியிருந்தார்.




எனது தோற்றத்திற்கு முதல் பாராட்டு கொடுத்தவர் இயக்குநர் பாலு மகேந்திரா சார்தான். மேலும் அவர் என்னிடம் பல விஷயங்களைக் கூறியிருந்தார். ஒரு டைம், “நீ இன்னும் ஆரம்பிக்கவே இல்லை, ஆனால் நீ எப்படி வரப்போகிறாய் என்பது எனக்குத் தெரியும். எங்கேயோ நீ போவ, நிச்சயமாக ஒரு தேசிய விருதாவது நீ வாங்குவ” என்று பாலு மகேந்திரா சார் என்னிடம் கூறினார். அவர் சொன்னது போல அவர் உதவி இயக்குநர் வெற்றிமாறனின் படத்திற்காகவே தேசிய விருதை வாங்கினேன் என நடிகர் தனுஷ் உண்மையை உடைத்து பேசியிருந்தார். இந்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது .