Aamir Khan: ‘நான் ரஜினியின் பெரிய ரசிகன்’ – நடிகர் ஆமீர்கான் பெருமிதம்!
Aamir Khan Talks About Rajinikanth : பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் அமீர்கான். இவர் சினிமாவில் நடிகராக மட்டுமில்லாமல் தயாரிப்பாளராகவும் இருந்து வருகிறார். சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய அவர் கூலி படத்தில் ரஜினியுடன் பணியாற்றியதைப் பற்றிப் பேசியிருக்கிறார், அதை பற்றி விளக்கமாக பார்க்கலாம்.

பான் இந்திய சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் அமீர்கான் (Aamir Khan) . இவரின் நடிப்பில் பல வெற்றி மற்றும் விருது வென்ற படங்கள் எண்ணிலடங்காதது இருக்கிறது. நடிகராக மட்டுமில்லாமல் இவர் மேலும் படங்களைத் தயாரிப்பதிலும் மற்றும் இயக்குவதில் ஆர்வம் காட்டிவருகிறார். இவர் மேலும் நடிகர் ரஜினிகாந்த்தின் (Rajinikanth) கூலி (Coolie) படத்தில் கேமியோ தோற்றத்தில் ( Cameo Role) நடித்திருக்கிறார். நடிகர் ரஜினிகாந்த்தின் நடிப்பில் மிக்க பிரம்மாண்ட திரைப்படமாக உருவாகியிருப்பது கூலி. இந்த படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். இந்த படத்தில் ரஜினியுடன் நாகார்ஜுனா (Nagarjuna), உபேந்திர ராவ், சத்யராஜ் மற்றும் பாலிவுட் நடிகர் அமீர்கான் உட்பட பான் இந்திய நடிகர்கள் பலரும் இப்படத்தில் இணைந்து நடித்திருக்கின்றனர். இப்படத்தின் ஷூட்டிங் முழுமையாக நிறைவடைந்த நிலையில், வரும் 2025, ஆகஸ்ட் 14ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாகவுள்ளது.
இந்நிலையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய அமீர்கான் இந்த படத்தில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மற்றும் நடிகர் ரஜினிகாந்துடன் பணியாற்றியது குறித்தும் , ரஜினியின் மிகப்பெரிய ரசிகன் என்பது குறித்தும் அமீர்கான் கூறியிருக்கிறார். மேலும் இயக்குநர் லோகேஷ் கனகராஜுடன் படத்தில் இணைவது பற்றியும் பேசியிருக்கிறார், அது குறித்துப் பார்க்கலாம்.
நடிகர் அமீர்கான் கூலி படத்தில் நடித்தது குறித்து பேச்சு :
சமீபத்தில் இந்தி தனியார் சேனலில் நடந்த நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்ட நடிகர் அமீர்கானிடம், ரசிகர் ஒருவர் லோகேஷ் கனகராஜுடன் படத்தில் நடிக்கவும், மேலும் எப்போது தென்னிந்தியப் படங்களில் நாயகனாக நடிக்கவிருக்கிறீர்கள் என்று கேட்டிருந்தார். அதற்குப் பதில் கொடுத்த நடிகர் அமீர்கான், “ஆமாம் நான் லோகேஷ் கனகராஜின் கூலி படத்தில் கேமியோ ரோலில் நடித்திருக்கிறேன். மேலும் அந்த படத்தில் எனது கதாபாத்திரமும் நன்றாக இருக்கும், நான் நடித்திருந்தது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. மேலும் நான் ஒரு தீவிர ரஜினி ரசிகன், எனக்கு ரஜினி சார் மீது எனக்கு நிறைய அன்பும் மற்றும் மரியாதையும் இருக்கிறது.
நான் முதலில் படத்தின் கதையைக் கேட்கவே இல்லை, என்னிடம் லோகேஷ் கனகராஜ் வந்து ரஜினி சாரின் கூலி படத்தில் கேமியோ ரோலில் நடிக்கவேண்டும் என்று கேட்டார். உடனே நானும் ஓகே என்று கூறிவிட்டேன். அவர் என்னிடம் கதை சொல்வதற்கு முன்னே நான் ஓகே என்று சொல்லிவிட்டேன். மேலும் நானும் லோகேஷ் கனகராஜின் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறேன். அநேகமாக அந்த படத்தின் ஷூட்டிங் அடுத்த 2026ம் ஆண்டு ஆரம்பிக்கும் , அந்த படத்தின் ஸ்கிரிப்ட் வேலைகள் நடக்கிறது அது முடிந்ததும் ஷூட்டிங்தான்” என்று நடிகர் அமீர்கான் கூறியிருக்கிறார்.
நடிகர் அமீர்கான் பேசிய வீடியோ :
#AamirKhan Recent
– I did not even hear the script, When #LokeshKanagaraj told me that #Rajinikanth film is #Coolie.
– You want to do cameo ?
I said DONE.pic.twitter.com/jpp9ATDfT2— Movie Tamil (@MovieTamil4) June 12, 2025
நடிகர் அமீர்கான் தமிழ் மற்றும் இந்தி மொழியை மையமாகக் கொண்டு விரைவில் படத்தில் இயக்குநர் லோகேஷ் கனகராஜுடன் இணையவுள்ளதாகக் கூறியிருக்கிறார். இந்த படம் நடிகர் சூர்யா நடிக்கவிருந்த இரும்புக்கை மாயாவி திரைப்படமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. லோகேஷ் கனகராஜுடன் 2 படங்களில் நடிக்கவிருப்பதாகக் கூறப்படும் நிலையில், இது குறித்த தகவல்கள் விரைவாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.