Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
Rajinikanth

Rajinikanth

இந்திய திரையுலகில் கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாக உச்ச நட்சத்திரமாக இருந்து வருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரின் இயக்கத்தில் கடந்த 1975 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியான அபூர்வ ராகங்கள் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் ரஜினிகாந்த். அந்தப் படத்தில் துவக்க காட்சியிலேயே ஒரு கேட்டை திறந்து உள்ளே நுழைவார் ரஜினிகாந்த், மறைமுகமாக தமிழ் ரசிகர்கள் மனதின் உள்ளேயும் நுழைந்து சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கிறார். தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, ஆங்கிலம் என 170 படங்களுக்கும் மேல் நடித்திருக்கிறார். ஆட்டோ டிரைவர், டாக்ஸி டிரைவர், மெக்கானிக், பால்காரர் என எளிய மக்களின் வேடங்களை தனக்கே உரிய ஸ்டைலில் கையாண்டு ரசிகர்களின் மனங்களைக் கவர்ந்தார். ஆரம்பகால படங்களான முள்ளும் மலரும் ஆறிலிருந்து அறுபது வரை உள்ளிட்ட படங்களில் தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தினார். தற்போது 70 வயதைக் கடந்த பின்னும் அதே எனர்ஜியுடன் திரையில் தோன்றி ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் மகிழ்விக்க கூடிய படங்களை செய்து வருகிறார். இன்னும் அவரது கால்ஷீட்டுக்காக இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும் போட்டிபோட்டு காத்திருக்கின்றனர். ரஜினிகாந்த் தொடர்பான அத்தனை செய்திகளையும் நாம் காணலாம்.

Read More

ஜெயிலர் 2 படத்திற்கு பிறகு ரஜினிகாந்தை இயக்கும் பிரபல இயக்குநர்? இணையத்தை கலக்கும் தகவல்

Super Star Rajinikanth: கூலி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இயக்குநர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ஜெயிலர் 2 படத்தில் பிசியாக நடித்து வருகிறார். இந்தப் படத்தை தொடர்ந்து அவர் பிரபல இயக்குநர் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Rajinikanth: 3வது முறையாக இணையும் ரஜினிகாந்த் – நெல்சன் கூட்டணி!

Nelson Dilipkumar And Rajinikanth Team Up: தமிழ் சினிமாவில் பிரபல நாயகனாக தற்போதுவரை இருந்து வருபவர் ரஜினிகாந்த். இவரின் முன்னணி நடிப்பில் ஜெயிலர் 2 படமானது மிக பிரம்மாண்டமாக தயாராகிவருகிறது. இந்நிலையில், இந்த படத்தை அடுத்ததாக ரஜினிகாந்த் மற்றும் நெல்சன் திலீப்குமார் கூட்டணி மீண்டும் இணைவதாக தகவல்கள் வைரலாகிவருகிறது. அது குறித்து தெளிவாக பார்க்கலாம்.

Dhruv Vikram: ரஜினிகாந்த் இன்னும் உச்சத்தில் இருக்க காரணம் அதுதான்- ரஜினிகாந்த் குறித்துப் பேசிய துருவ் விக்ரம்!

Dhruv Vikram About Rajinikanth: சினிமாவில் வளர்ந்துவரும் நடிகர்களில் ஒருவராக இருந்துவருபவர் துருவ் விக்ரம். இவரின் நடிப்பில் பைசன் படமானது விரைவில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய துருவ் விக்ரம், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஒப்பற்ற திறமையை பற்றியும் மற்றும் அவரை புகழ்ந்து பேசியுள்ளார்.

ரஜினிகாந்த் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் – சென்னையில் பரபரப்பு சம்பவம்

Bomb Threat at Rajinikanth’s Home : சென்னை போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்த்தின் வீட்டுக்கு மர்ம நபர் இமெயில் மூலம் வெடி குண்டு மிரட்டல் விடுத்தார். இந்த சம்பவம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் காவல்துறையினரின் சோதனையில் அது வெறும் புரளி என தெரியவந்தது.

ஆன்மீக சுற்றுழா சென்றுள்ள ரஜினிகாந்த் – இணையத்தில் வைரலாகும் போட்டோஸ்

Super Star Rajinikanth: சினிமாவில் தொடர்ந்து பிசியாக நடித்து வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வருடத்திற்கு ஒரு முறையாவது ஆன்மீக சுற்றுழா பயணம் செல்வது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு அவர் இமையமலைக்கு ஆன்மீக சுற்றுழா பயணம் சென்றுள்ளார். அங்கு அவர் ரசிகர்களுடன் எடுத்தப் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

Rajinikanth: இமயமலைக்கு ஆன்மீக பயணம் சென்ற ரஜினிகாந்த்.. எளிமையான உடையில் இருக்கும் புகைப்படங்கள் வைரல்!

Rajinikanth In Himalayas: இந்திய சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் சினிமாவை தொடர்ந்து ஆன்மிகத்திலும் ஆர்வம் காட்டிவருகிறார். அந்த வகையில் இவர் தனது நண்பர்களுடன் ஆன்மிக பயணமாக இமயமலைக்கு செல்வது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகிவருகிறது.

Nelson Dilipkumar: ஜெயிலர் 2 பற்றி பேசி பில்டப் செய்ய விரும்பல.. நெல்சன் திலிப்குமார் அதிரடி!

Nelson Dilipkumar About Jailer 2: தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநர்களில் ஒருவர்தான் நெல்சன் திலீப்குமார். இவர் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 படத்தை இயக்கிவருகிறார். இப்படத்தை பற்றி அப்டேட் கேட்டவர்களுக்கு, தெளிவுபடுத்தும் விதமாக நெல்சன் திலீப்குமார் பதிலளித்துள்ளார்.

இவன் பேரை சொன்னதும் பெருமை சொன்னதும் கடலும் கடலும் கைதட்டும் – 15 ஆண்டுகளை நிறைவு செய்தது எந்திரன் படம்!

15 Years Of Enthiran: நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றப் படம் எந்திரன். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி இன்றுடன் 15 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இதனைக் கொண்டாடும் விதமாக படக்குழு வெளியிட்ட போஸ்ட் ரசிகர்களிடையே வைரலாகி வருகின்றது.

ஜெயிலர் 2 படத்தின் ரிலீஸ் எப்போது? தேதியை சொன்ன சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

Jailer 2 Movie: நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் இறுதியாக கூலி படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்ற நிலையில் அடுத்ததாக அவர் தற்போது ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் ஜெயிலர் 2 படத்தின் ரிலீஸ் தேதியை ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

திரைத்துறையில் 50 ஆண்டுகளை கடந்த ரஜினிகாந்த் – மனிதன் படத்தை ரீ ரிலீஸ் செய்யும் படக்குழு

Rajinikanths Manithan Movie: சினிமாவில் 50 ஆண்டுகளைக் கடந்து தற்போதும் சூப்பர் ஸ்டாராக வலம் வருகிறார் நடிகர் ரஜினிகாந்த். இவரது பொன்விழா ஆண்டை கொண்டாடும் விதமாக மனிதன் படத்தை மீண்டு திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இது தொடர்பான அப்டேட் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

நவராத்திரி கொலுவில் ரஜினி போஸ்டர்கள்.. திரும்பி பார்க்க வைத்த மதுரை ரசிகர்!

தமிழ் மாதமான புரட்டாசியில் வரும் நவராத்திரி பண்டிகையின் போது, ​​சிறப்பு பூஜைகள் செய்யப்படும் கோயில்களில் கொலு பொம்மைகளைக் காட்சிப்படுத்துவதும் வழக்கம். இந்தநிலையில், மதுரை திருமங்கலம் பகுதியைச் சேர்ந்த கார்த்திக், தனது அலுவலகத்தில் ரஜினிகாந்துக்கு ஒரு கோயில் கட்டியிருந்தார். இந்த ஆண்டு நவராத்திரிக்காக, ரஜினிகாந்த் நடித்த 230 படங்களின் படங்களைக் காட்சிப்படுத்தியுள்ளார். தற்போது, இதன் வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Rajinikanth : கதை.. இயக்குநர்.. கேரக்டர்.. கமல்ஹாசனுடன் சேர்ந்து நடிப்பது குறித்து பேசிய ரஜினிகாந்த்!

Actor Rajinikanth: நடிகர் ரஜினிகாந்த் 70 வயதைக் கடந்த பிறகும் விறுவிறுப்பாக அடுதடுத்தப் படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் தற்போது ஜெயிலர் 2 படத்தில் விறுவிறுப்பாக நடித்து வரும் நிலையில் அடுத்ததாக கமல் ஹாசன் உடன் இணைந்து நடிக்கும் படம் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.

Rajinikanth Speech : அரை பாட்டில் பீர்.. மேடையில் கலாய்த்த ரஜினி.. ஷாக்கான இளையராஜா!

இசைஞானி இளையராஜாவுக்கு நேற்று தமிழக அரசு சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. இதில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்டவர்களும் பல அரசியல், சினிமா பிரபலங்களும் கலந்து கொண்டனர். அப்போது பேசிய இளையராஜா ஜானி பட அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். அப்போது குறிக்கிட்ட ரஜினி, பீர் குடித்துவிட்டு இளையராஜா கிசுகிசு பேசியதாக கலாய்த்து தள்ளினார்.

மேடையில் மாறி மாறி கலாய்த்துக்கொண்ட ரஜினிகாந்த் – இளையராஜா… வைரலாகும் வீடியோ

50 Years Of Ilaiyaraja: இசையமைப்பாளர் இளையராஜாவிற்கு நேற்று தமிழக அரசு சார்பாக விழா ஒன்று பிரமாண்டமாக நடத்தப்பட்டது. இந்த விழாவில் கலந்துகொண்ட பிரபலங்கள் இளையராஜா குறித்த சுவாரஸ்ய சம்பவங்களை பகிர்ந்துகொண்டனர். அதில் நடிகர் ரஜினிகாந்த் பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

நான் கண்ணால பாத்த அதிசிய மனிதர் இளையராஜா – ரஜினிகாந்த் புகழாரம்

50 Years of Ilaiyaraaja: இசைத் துறையில் 50 ஆண்டுகளைக் கடந்து என்றும் இசைஞானி என்ற பெருமையுடன் இருப்பவர் இளையராஜா. இவருக்கு தமிழக அரசு சார்பில் இன்று விழா ஒன்று பிரமாண்டமாக நடத்தப்படது. இந்த விழாவில் கலந்துகொண்ட நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர் குறித்து வெகுவாகப் பாராட்டிப் பேசியுள்ளார்.