Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

‘கூட்டணி ஆட்சி தான்’ தேமுதிகவின் புது கணக்கு.. பிரேமலதா விஜயகாந்த் பரபரப்பு பேச்சு!

Premalatha Vijayakanth : தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் கருத்துக்கு தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த வரவேற்பு அளித்துள்ளார். மேலும், தமிழகத்திலும் கூட்டணி ஆட்சி நடந்தால் நல்லது என்றும் அது தான் தேமுதிகவின் நிலைபாடு என்றும் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.

‘கூட்டணி ஆட்சி தான்’ தேமுதிகவின் புது கணக்கு.. பிரேமலதா விஜயகாந்த் பரபரப்பு பேச்சு!
பிரேமலதா விஜயகாந்த்
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 29 Jun 2025 12:42 PM

சென்னை, ஜூன் 29 : தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் (Amit Shah) கருத்துக்கு பிரேமலதா விஜயகாந்த் (Premalatha Vijayakanth) வரவேற்பு அளித்துள்ளார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், ” தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்பது வரவேற்கத்தக்கது. இன்று பல மாநிலங்களில் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. அது சாத்தியமானது.   ஒரே கட்சியிடம் ஆட்சி அதிகாரம் இருக்க வேண்டியதில்லை. தமிழகத்திலும் கூட்டணி ஆட்சி நடந்தால் நல்லது. தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்பது தான் தேமுதிகவின் நிலைபாடு. தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சி என கூறியுள்ளனர். மாநில கட்சி தலைமையில் ஆட்சி அமைந்தால் நல்லது” என கூறியுள்ளார்.

‘கூட்டணி ஆட்சி தான்’

2026 சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே உள்ளது. இதனால், தமிழகத்தில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. மேலும், கூட்டணி பேச்சுவார்த்தைகளும் நடந்து வருகிறது.  இதற்கிடையில், திமுக கூட்டணி வலுவாக இருக்கும் நிலையில், சமீபத்தில் அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைத்தது.

கூட்டணி அமைத்தாலும், அதில் பல குழப்பங்கள் நீடித்து வருகிறது. அதாவது, முதல்வர் வேட்பாளர், கூட்டணி ஆட்சி, அதிமுக ஆட்சி என பல குழப்பங்கள்  இருந்து வருகிறது. இதுகுறித்து அண்மையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா  பேசிய கருத்து விவாதப் பொருளாக மாறி உள்ளது. அதாவது, தமிழகத்தில் கூட்ட ஆட்சி  என்றும் அதிமுவினரே முதல்வர் வேட்பாளர் என கூறியுள்ளார்.

இதில், எடப்பாடி பழனிசாமி பெயரை அவர்  தவிர்த்தது பேசும் பொருளாக மாறியுள்ளது. இதில், தமிழகத்தில் அதிமுக ஆட்சி தான் என எடப்பாடி பழனிசாமி கூறி வருகிறார். ஆனால், அமித் ஷா உள்ளிட்ட பாஜக தலைவர்கள் கூட்டணி ஆட்சி என திட்டவட்டமாக கூறி வருகின்றனர். இந்த சூழலில், தேமுதிகவின் நிலைப்பாடு குறித்து அக்கட்சி பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.

பிரேமலதா விஜயகாந்த் பேச்சு

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா விஜயகாந்த்,  தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்பது தான் தேமுதிகவின் நிலைப்பாடு என கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், ” தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யை கூட்டணிக்கு அழைக்கிறார்கள்.

ஒரு கட்சி என்றால் அழைக்கா தான் செய்வார்கள். கூட்டணி பலமாக இருப்பதற்கா அழைப்பார்கள். இதற்கான முடிவை விஜய் தான் எடுக்க வேண்டும். எங்களது கூட்டணி நிலைப்பாடு குறித்து 2026 ஜனவரி மாதம் அறிவிக்கிறோம்” என தெரிவித்தார்.

மேலும், சென்னையில் நடந்த காங்கிரஸ் நிகழ்ச்சியில் தேமுதிக பொருளாளர் சதிஷ் பங்கேற்றது ஏன் என கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த பிரேமலதா விஜயகாந்த், “நண்பர்கள் என்ற அடிப்படையில் அழைப்பிதழ் கொடுத்ததால் சதிஷ் பங்கேற்றுள்ளார். இந்த விழாவுக்கும் கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை. நண்பர்கள் என முறையில் கலந்து கொண்டாரே தவிற கூட்டணிக்கு தொடர்பு இல்லை” என தெரிவித்தார்.