Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

இளைஞரின் மலக்குடலில் துப்பாக்கி குண்டு…மருத்துவமனையை அலரவிட்ட சம்பவம்…முழு விவரம் என்ன!

Explosives Found In France: பிரான்ஸ் நாட்டில் 24 வயது இளைஞரின் மலக்குடலில் இருந்து அறுவை சிகிச்சை மூலம் வெடி பொருள் மீட்கப்பட்டது. இதனால், அந்த இளைஞரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொள்ள இருப்பதாகவும், ஆயுத தடை சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இளைஞரின் மலக்குடலில் துப்பாக்கி குண்டு…மருத்துவமனையை அலரவிட்ட சம்பவம்…முழு விவரம் என்ன!
பிரான்ஸில் இளைஞரின் மலக்குடலில் வெடி பொருள்
Gowtham Kannan
Gowtham Kannan | Published: 04 Feb 2026 13:08 PM IST

பிரான்ஸ் நாட்டில் 24 வயது இளைஞரின் மலக்குடலில் 8 அங்குல நீளமுள்ள ஒரு மர்ம பொருள் கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அந்த மர்ம பொருளானது கடந்த 20- ஆம் நூற்றாண்டில் முதலாம் உலகப் போரின் போது பயன்படுத்தப்பட்ட பீரங்கி வகை குண்டு என்று கூறப்படுகிறது. இந்த வகையான குண்டுகள் அங்கு எப்படி வந்தன என்பது மர்மமாக உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். முதலாம் உலகப் போரின் இறுதிக் கட்டங்களில் இம்பீரியல் ஜெர்மன் ராணுவத்தால் 37 மி.மீ. பித்தளை மற்றும் செம்பு ஓடு பயன்படுத்தப்பட்டிருந்தது. இத்தகைய குண்டுகள் பெருமளவில் உற்பத்தி செய்யப்பட்டு மேற்கு முன்னிலையில் பிரிட்டிஷ் மற்றும் பிரெஞ்சு படைகளுக்கு எதிராக பயன்படுத்தப்பட்டன. பல குண்டுகளில் தேதி குறிப்பிடப்பட்டிருந்தன. தற்போது கூட ஐரோப்பிய முழுவதும் ஆண்டுதோறும் இரும்புகள் பருமுதல் செய்யும் போது இது போன்ற வெடிக்காத குண்டுகள் பெரும்பாலும் கண்டெடுக்கப்படுகின்றன.

மருத்துவமனையை அலரவிட்ட சம்பவம்

அவை குறிப்பாக விவசாய நிலங்கள் மற்றும் கட்டுமானம் நடைபெறும் இடங்களில் காணப்படுகிறது. இந்த சம்பவம் துலூஸில் உள்ள ஒரு மருத்துவமனையில் ஒரு பெரிய அவசர நடவடிக்கையை மேற்கொள்ள வைத்தது. அப்போது, இந்த சாதனம் வெடித்து சிதறும் என்ற அச்சமும் எழுந்தது. அந்த இளைஞருக்கு மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சையின் போது, மருத்துவமனை ஊழியர்கள் கடந்த 1918 ஆம் ஆண்டுக்கு முந்தைய ஓட்டைகளை கண்டுபிடித்தனர்.

மேலும் படிக்க: 10 மாத குழந்தையின் உடலில் 600 முறை ஊசியால் குத்திய கொடூர தாய்.. சீனாவில் பகீர் சம்பவம்!

வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் சோதனை

பின்னர், இது தொடர்பாக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு மருத்துவமனையில் சில பகுதிகள் காலி செய்யப்பட்டன. மேலும், போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் மற்றும் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் உடனடியாக சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் அந்த சாதனத்தை ஆய்வு செய்தனர். இதைத் தொடர்ந்து, அந்த சாதனம் பாதுகாப்பாக செயலிழக்கப்பட்டதாக வெடிகுண்டு நிபுணர்கள் தெரிவித்தனர்.

போலீசாரின் விசாரணை வளையத்தில் இளைஞர்

அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட இளைஞருக்கு தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், விரைவில் அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொள்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டது. மேலும், ஏ வகை வெளி மருந்துகளை சட்டவிராதமாக பயன்படுத்தியதற்காக நடவடிக்கை எடுப்பதற்கு வழக்கறிஞர்கள் பரிசீலனை செய்து வருகின்றனர்.

பிரான்ஸ் நாட்டில் ஆயுத சட்டத்தின் கீழ் நடவடிக்கை

பிரான்ஸ் நாட்டில் வெடி பொருள்கள் உள்ளிட்டவை வைத்திருந்தால் அங்கு ஆயுத சட்டங்களின் கீழ் கடுமையான நடவடிக்கை மேற்கொள்வது வழக்கமாகும். அதன்படி, அந்த இளைஞர் மீது குற்றம் சாட்டப்படலாம் என்று கூறப்படுகிறது. அந்த இளைஞர் தனது மலக்குடலில் அந்த குண்டை சொருகி இருந்ததாக போலீசார் வட்டாரம் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க: சிம் கார்டுகளில் இருந்து தங்கத்தை பிரித்தெடுத்த சீன நபர்… பழைய சிம் கார்டுகளுக்கு அதிகரித்த மவுசு!