Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
Ilaiyaraaja

Ilaiyaraaja

இந்திய சினிமா இசையின் அடையாளமாக பார்க்கப்படும் இளையராஜா, தேனி மாவட்டத்தில் உள்ள பண்ணைப்புரம் என்னும் கிராமத்தில் பிறந்தவர். ‘அன்னக்கிளி’ என்னும் தமிழ்ப் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். முதல் படத்திலேயே அவர் வெற்றிகரமான இசையமைப்பாளராகிவிட்டார். முதல் ஐந்தாண்டுகளுக்குள் 100 படங்களுக்கு இசையமைத்துவிட்டார். தமிழ் மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி எனப் பல்வேறு மொழிகளில் இசையமைத்து ஹிட்டடித்தவர் என்ற பெருமையும் இளையராஜாவையே சேரும். இந்திய திரையுலகில் சுமார் அரைநூற்றாண்டாக தனது இசை என்னும் ஆட்சியை நடத்தும் இளையராஜா தமிழ் ரசிகர்களால் ‘இசைஞானி’ என்று அழைக்கப்படுகிறார். ஐந்து தசாப்தங்களுக்கும் மேலாக நீடித்த தனது திரை வாழ்க்கையில் 1000 திரைப்படங்களுக்கு மேல், 7000 பாடல்களுக்கு மேல் இசையமைத்துள்ளார் மேஸ்ட்ரோ இளையராஜா. மேலும் பத்ம பூஷன், மற்றும் பத்ம விபூஷன் மற்றும் சங்கீத நாடக அகாடமிக் விருது என பல விருதுகளை வென்றுள்ளார் இளையராஜா. இவர் தொடர்ந்து திரைப்படங்களுக்கு இசையமைத்தும், இசை கச்சேரிகள் நடத்தியும் வருகிறார்

Read More

இளையராஜா இசையின் மூலம் பெற்ற வருமானம் எவ்வளவு? சோனி மியூசிக் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

Ilaiyaraaja : சோனி மியூசிக் நிறுவனம் தனது பாடல்களை பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில் அதனை மீறி தனது பாடல்களை பயன்படுத்தி வருவதாக இசையமைப்பாளர் இளையராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு விசாரணை அக்டோபர் 22, 2025 அன்று ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அதீத மகிழ்ச்சியின் காரணமாக என்னால் அதிகம் பேச இயலவில்லை – இளையராஜா

Music Director Ilaiyaraaja: தமிழ் சினிமாவில் இசையமைத்து உலக அளவில் ரசிகர்களைப் பெற்றுள்ளவர் இசையமைப்பாளர் இளையராஜா. இவர் தமிழ் சினிமாவில் 50 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வரும் நிலையில் அதற்கு பாராட்டு தெரிவிக்கும் விதமாகவும் சமீபத்தில் சிம்பொனி இசையமைத்து உலக ரசிகர்களை திரும்பிப் பார்க்க வைத்ததற்காகவும் இவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது.

மேடையில் மாறி மாறி கலாய்த்துக்கொண்ட ரஜினிகாந்த் – இளையராஜா… வைரலாகும் வீடியோ

50 Years Of Ilaiyaraja: இசையமைப்பாளர் இளையராஜாவிற்கு நேற்று தமிழக அரசு சார்பாக விழா ஒன்று பிரமாண்டமாக நடத்தப்பட்டது. இந்த விழாவில் கலந்துகொண்ட பிரபலங்கள் இளையராஜா குறித்த சுவாரஸ்ய சம்பவங்களை பகிர்ந்துகொண்டனர். அதில் நடிகர் ரஜினிகாந்த் பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

நான் கண்ணால பாத்த அதிசிய மனிதர் இளையராஜா – ரஜினிகாந்த் புகழாரம்

50 Years of Ilaiyaraaja: இசைத் துறையில் 50 ஆண்டுகளைக் கடந்து என்றும் இசைஞானி என்ற பெருமையுடன் இருப்பவர் இளையராஜா. இவருக்கு தமிழக அரசு சார்பில் இன்று விழா ஒன்று பிரமாண்டமாக நடத்தப்படது. இந்த விழாவில் கலந்துகொண்ட நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர் குறித்து வெகுவாகப் பாராட்டிப் பேசியுள்ளார்.

ரூ.8 கோடி வைர கிரீடத்துடன் இளையராஜா.. அம்மன் கோயிலுக்கு சிறப்பு காணிக்கை!

Ilaiyarajaa: இளையராஜா, தனது சினிமா பயணத்தின் 50 ஆண்டுகளை எட்டியதையொட்டி, இளையராஜா கர்நாடக மாநிலம் கொல்லூரில் உள்ள மூகாம்பிகை தேவிக்கும் வீரபத்ர சுவாமிக்கும் 8 கோடி ரூபாய் மதிப்புள்ள வைரக் கிரீடம், வைர மாலை மற்றும் தங்க வாளைக் காணிக்கையாக செலுத்தினார்.

குட் பேட் அக்லி படத்தில் இளையராஜா பாடல்களை பயன்படுத்த இடைக்கால தடை – சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Good Bad Ugly: நடிகர் அஜித் குமார் நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் குட் பேட் அக்லி. இந்தப் படத்தில் இசையமைப்பாளர் இளையராஜாவின் பாடல்களை அனுமதி இன்றி பயன்படுத்தியதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் நீதிமன்றம் அதிரடி உத்தரவை அளித்துள்ளது.

Vanitha Vijayakumar : கார்த்திக் ராஜா எனது சிறந்த நண்பர்.. விமர்சனங்களுக்கு வனிதா விஜயகுமார் விளக்கம்!

Vanitha Vijayakumar Clarifies Ilayaraja Controversy : நடிகர் விஜயகுமாரின் மகள்தான் நடிகை வனிதா விஜயகுமார். இந்நிலையில் சமீபத்தில் இளையராஜா, தன்மீது தொடர்ந்த வழக்கு குறித்து பேட்டி ஒன்றில் வனிதா விஜயகுமார் பேசியிருந்தார். அது மக்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. அதற்கு தனது எக்ஸ் பக்கத்தில் வனிதா விளக்கம் அளித்துள்ளார்.

அவர் மருமகளா போக வேண்டியது.. இளையராஜாவை விமர்சித்த வனிதா!

இசையமைப்பாளர் இளையராஜா, தனது பாடலை அனுமதியின்றி "மிஸஸ் அண்ட் மிஸ்டர்" படத்தில் பயன்படுத்தியதாக வனிதா விஜயகுமார் மீது வழக்கு தொடர்ந்தார். இதற்கு பதிலளித்த வனிதா, இளையராஜாவை நேரில் சந்தித்து ஆசீர்வாதம் பெற்றதாகவும், பாடலின் உரிமை தொடர்பாக அனுமதி பெற்றதாகவும் கூறியுள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மூன்றாவது தலைமுறையாக இசைத் துறையில் இணைந்த இளையராஜா பேரன்!

Ilayaraja Grandson Yatheeswar Raja: சினிமாவில் நடிப்புத் துறையில் வாரிசுகள் தொடந்து அறிமுகம் ஆகி வருவது போல தற்போது இசைத் துறையிலும் வாரிசுகள் தொடர்ந்து அறிமுகம் ஆகி வருகின்றது. அந்த வகையில் இசைஞானி இளையராஜாவின் பேரன் தற்போது பக்தி பாடல் ஆல்பம் ஒன்றை வெளியிட்டு இசைத்துறையில் அறிமுகம் ஆகியுள்ளார்.

நேற்று இல்லை நாளை இல்லை எப்பவும் நீ ராஜா… இளையராஜாவிற்கு இன்று பிறந்த நாள்

Music Director Ilaiyaraaja: ரசிகர்களால் இசை ஞானி என்று அன்புடன் அழைக்கப்படுபவர் இசையமைப்பாளர் இளையராஜா. இவர் தமிழ் சினிமா மட்டும் இன்றி தென்னிந்திய சினிமா ரசிகர்களிடையே அதிகம் பிடித்தமான இசையமைப்பாளராக உள்ளார். இந்த நிலையின் இன்று பிறந்த நாள் கொண்டாடும் இளையராஜாவிற்கு பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

50வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இளையராஜா – பாராட்டு விழா நடக்குமா?

49 Years Of Ilaiyaraaja : இசைஞானி இளையராஜா அறிமுகமான அன்னக்கிளி திரைப்படம் 49 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறது. அதாவது திரையுலகில் இசையமைப்பாளர் இளையராஜா 50வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார். இதனையடுத்து அவருக்கு தமிழ் திரையுலகினர் சார்பில் பாராட்டு விழா நடத்த வேண்டும் என்பது அனைவரது கோரிக்கையாக இருக்கிறது.

Karthik Subbaraj : இளையராஜா பயோபிக் நான் பண்ணியிருக்கவேண்டியது ஆனால்.. கார்த்திக் சுப்பராஜ் பேச்சு!

Karthik Subbaraj About Ilayaraja Biopic Movie : தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக இருந்து வருபவர் கார்த்திக் சுப்பராஜ். இவர் தமிழ் சினிமாவில், ஹிட் படங்களைக் கொடுத்திருக்கிறார். இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் தனுஷுடன் இளையராஜா பயோபிக் எடுக்கவேண்டியதை பற்றிக் கூறியுள்ளார்.

Ilaiyaraaja: என் சம்பளத்தை வச்சிகோங்க.. தேசியப் பாதுகாப்பு நிதிக்கு இளையராஜா நன்கொடை!

Ilaiyaraaja Generous Donation : கோலிவுட் சினிமாவில் புகழ்மிக்க இசையமைப்பாளராக இருந்து வருபவர் இளையராஜா. இவர் தற்போது இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே போர் நிலவி வரும் நிலையில், தேசிய பாதுகாப்பு நிதிக்கு நன்கொடை வழங்கவுள்ளதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தனது கான்சர்ட் மற்றும் ஒரு மாத சம்பளத்தை இந்தியத் தேசியப் பாதுகாப்பு நிதிக்குக் கொடுக்கவுள்ளதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இன்னும் 20 ஆண்டுகள் ஆட்சி.. பிரதமர் மோடியை புகழ்ந்து தள்ளிய இசையமைப்பாளர் இளையராஜா!

Music Director Ilaiyaraaja: சமீபத்தில் ஏப்ரல் மாதம் 10-ம் தேதி 2025-ம் ஆண்டு இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடிப்பில் வெளியான படம் குட் பேட் அக்லி. இந்தப் படத்தில் இளையராஜா இசையமைத்த 3 பாடல்களை அனுமதி இன்றி பயன்படுத்தியதாக அவர் காப்பி ரைட்ஸ் வழக்கு தொடர்ந்தது குறிப்பிடத்தக்கது.

மூகாம்பிகை தான் எல்லாம்.. இளையராஜாவின் ஆன்மிக அனுபவம்!

இசைஞானி இளையராஜா 1974ல் மைசூரில் இசைக்கச்சேரிக்குச் சென்றபோது ஏற்பட்ட கடுமையான காய்ச்சலில் இருந்து மூகாம்பிகை அம்மனின் அருளால் மீண்டதையும், கோயிலில் நடந்த அதிசயமான நிகழ்வுகளையும் நேர்காணலில் ஒன்றில் தெரிவித்துள்ளார். மூகாம்பிகை அம்மன் தனது சன்னதியில் என்னைப் பாட வைத்ததாகவும் அவர் கூறியுள்ளார்.