’நீ அழகா இல்ல’ ஆத்திரத்தில் கணவரை ஏரித்துக் கொன்ற மனைவி.. பகீர் வாக்குமூலம்!
Krishnagiri Murder : கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கணவரை பெட்ரோல் ஊற்றி மனைவி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தன்னை அழகாக இல்லை என்றும் தொடர்ந்து துன்புறுத்தி வந்ததால், கணவரை கொலை செய்ததாக மனைவி வாக்குமூலம் அளித்துள்ளார். இதனை அடுத்து, அவரை கைது செய்யப்பட்டுள்ளார்.

கிருஷ்ணகிரி, ஜூன் 14 : கிருஷ்ணகிரியில் கணவரை மனைவி ஏரிந்து கொலை செய்த சம்பவம் (Krishnagiri Murder) பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தன்னை கணவர் அழகாக இல்லை என்று கூறி துன்புறுத்தி வந்தால், அவரை கொலை செய்ததாக அந்த பெண் பரபரப்பான வாக்குமூலத்தை அளித்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த ரங்கசாமி (47). இவரது மனைவி கவிதா (44). இந்த தம்பதிக்கு திருமணமாக 22 ஆண்டுகள் ஆகுகிறது. இந்த தம்பதிக்கு இரண்டு மகள்களும், ஒரு மகனும் உள்ளார். இதில், ஒரு மகளுக்கு திருமணம் நடந்த நிலையில், மற்றொரு மகளும், மகனும் கல்லூரியில் படித்து வருகின்றனர். இந்த நிலையில், 2025 ஜூன் 9ஆ தேதி இரவு ரங்கசாமியை அவரது மனைவி கவிதா பெட்ரோல் ஊற்றி ஏரிந்து கொலை செய்துள்ளார். இதனை அடுத்து, அங்கிருத்து தப்பிச் சென்றிருக்கிறார். ரங்கசாமியின் அலறல் சத்தத்தை கேட்ட அக்கம் பக்கத்தினர் உடனே ரங்கசாமியை கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
கணவரை ஏரித்துக் கொன்ற மனைவி
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில், 2025 ஜூன் 11ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனை அடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், பெண் கவிதாவையும் போலீசார் தேடி வந்த நிலையில், அவரை 2025 ஜூன் 13ஆம் தேதி திருப்பதியில் கைது செய்யப்பட்டார். இதனை அடுத்து, அவரிடம் போலீசாரிடம் விசாரணை நடத்தியதில் அதிர்ச்சியூட்டும் வாக்குமூலத்தை அளித்தார்.




அதாவது, தனது ரங்கசாமி திருமணத்திற்கு மீறிய மூன்று ஆண்டுகள் இருந்ததாகவும், இதனால், தங்களுக்குள் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளதாகவும் அவர் வாக்குமூலம் அளித்துள்ளார். மேலும், காரிமங்கலத்தை சேர்ந்த மஞ்சுளாவுடன் ரங்கசாமிக்கு பழக்கம் ஏற்பட்டு, தன்னுடைய 80 சவரன் நகை, பணத்தை அவரிடம் கொடுத்துள்ளார்.
அதிர்ச்சி வாக்குமூலம்
மேலும், நிலத்தை விற்று அதில் வந்த பணத்தை கொடுத்துள்ளார். ஒரு கட்டத்தில் கணவர் சரியாக வீட்டிற்கு வருவதில்லை. மது அருந்திவிட்டு மூன்று மாதத்திற்கு ஒருமுறை வீட்டிற்கு வருவார். மேலும், தன்னை தகாத வார்த்தைகளால் பேசி தன்னை துன்புறுத்தி இருக்கிறார்.
மேலும், அழகாக இல்லை என்றும் தன்னை தாக்கி வந்துள்ளதாக கவிதா வாக்குமூலம் அளித்துள்ளார். 2025 ஜூன் 9ஆம் தேதியும் தன்னை ரங்கசாமி வீட்டின் மாடியில் அடித்து துன்புறுத்தினார். பின்னர், போதையில் தூக்கிக் கொண்டிருந்த ரங்கசாமி மீது, பெட்ரோல் ஊற்றி தீ வைத்து ஏரித்துவிட்டு தப்பிச் சென்றதாக கவிதா வாக்குமூலம் அளித்துள்ளார். இதனை அடுத்து, அந்த பெண்ணை கைது செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.