மதுரையில் பயங்கரம்.. வீடு புகுந்து பிரபல ரவடி வெட்டிக் கொலை.. ஷாக் பின்னணி!
Madurai Rowdy Murder : மதுரையில் பிரபல ரவுடி வீடு புகுந்து வெட்டிக் கொலை செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொலை செய்யப்பட்டவர் பிரபல ரவடி வெள்ளைக்காளியின் கூட்டாளி என்று தெரியவந்துள்ளது. இந்த கொலை சம்பவம் தொடர்பாக மூன்று போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

மதுரை, ஜூன் 13 : மதுரையில் பிரபல ரவடி மர்ம நபர்களால் வெட்டிக் கொலை (Madurai Rowdy Murder) செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வீடு புகுந்து மர்ம நபர்கள் அவரை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றுள்ளது தெரியவந்துள்ளது. மதுரை மாவட்டம் கரிமேடு பகுதியைச் சேர்ந்த அஜய் பிரசன்ன குமார் (27). இவர் ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டு கடந்த இரு தினங்களுக்கு முன்பு தான் ஜாமீனில் வெளியே வந்துள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில், 2025 ஜூன் 10ஆம் தேதி அஜய் பிரசன்ன குமாரின் நண்பர் தனசேகரனை ஒரு கும்பல் தாக்கியுள்ளது. இதனால், இதுபற்றி கேட்க தனசேகரனை அஜய் குமார் அழைத்து சென்றுள்ளார். அங்கு அந்த கும்பலுக்கு, அஜய் குமாருக்கு வாக்குவாதம் ஏற்பட்டு இருக்கிறது. இதனை அடுத்து, அஜய் குமாரின் வீட்டிற்கு வந்த அந்த கும்பல், அவரது தாயாரை மிரட்டி சென்றுள்ளது.
வீடு புகுந்து ரவுடி வெட்டிக் கொலை
அதாவது, மகனை ஒழுங்காக இருக்க கூறி அந்த கும்பல் மிரட்டி சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், 2025 ஜூன் 11ஆம் தேதியான இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த அஜய் குமாரை, மர்ம நபர்கள் வீட்டிற்குள் நுழைந்து சரமாரியாக வெட்டியுள்ளனர்.
வீட்டின் கதவை உடைத்து அந்த மர்ம கும்பல் இந்த கொடூர செயலை செய்துவிட்டு தப்பிச் சென்றுள்ளது. அதைத் தொடர்ந்து அஜய்குமாரின் தாயார் விட்டிற்கு வந்து பார்த்தபோது, வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டதாக, அஜய்குமார் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். இதனை பார்த்த அதிர்ச்சி அடைந்த அவர், உடனே போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.




இதனை அடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அஜய்குமாரின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் அஜய் குமார் உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர். இதனை அடுத்து, அவரது பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணையை தொடங்கினர். இந்த கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவும் செய்தனர்.
பிரபல ரவுடியின் கூட்டாளி
விசாரணையில் அஜய் குமால் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், அவர் பிரபல ரவடி வெள்ளைக்காளியின் ஆதரவாளாராகவும் இருந்தது தெரியவந்துள்ளது. சிறைக்குள் இருந்தபோதே அஜய் குமாருக்கு மிரட்டல் வந்ததாக அவரது தம்பி கூறியிருக்கிறார். அதாவது, ஜாமீனில் வெளியே வந்தால் கொலை செய்து விடுவோம் என கும்பல் மிரட்டியதாகவும், அந்த கும்பல் தான் தற்போது அஜய் குமாரை கொலை செய்ததாக அவரது சகோதரர் கூறியிருக்கிறார்.
இந்த கொலை தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது தொடர்பாக மதுரை பழக்கடை பகுதியைச் சேர்ந்த சுந்தர், அவரது தம்பி தொத்தா சுந்தர், பாண்டியராஜன் ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொடூர கொலை சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.