Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

முட்புதரில் சடலமாக கிடந்த பச்சிளம் குழந்தை.. தாய் செய்த கொடூரம்.. சென்னையில் அதிர்ச்சி!

Chennai Infant Murdered By Mother : சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் பச்சிளம் குழந்தை கொலை செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பெற்ற தாயே மாடியில் இருந்து தூக்கி வீசி குழந்தையை கொன்றது விசாரணையில் தெரியவந்துள்ளது. குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் மன உளைச்சலில் இருந்த பெண், இவ்வாறு செய்ததாக போலீசார் கூறியுள்ளனர்.

முட்புதரில்  சடலமாக கிடந்த பச்சிளம் குழந்தை.. தாய் செய்த கொடூரம்.. சென்னையில் அதிர்ச்சி!
மாதிரிப்படம்
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 11 Jun 2025 08:59 AM

சென்னை, ஜூன் 11 : சென்னையில் பிறந்த 43 நாட்களே ஆன பெண் குழந்தையை தாய் கொலை செய்ததது (chennai infant murder) பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெண் குழந்தையை பெற்ற தாயே மாடியில் இருந்து தூக்கி வீசி கொலை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. சென்னை நீலாங்கரையில் முட்புதரில் ஒரு பையில் இருந்து இரண்டு மாத குழந்தை சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து நீலாங்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அப்போது, சில அதிர்ச்சியூட்டு தகவல்கள் வெளியாகி உள்ளது. அதாவது, சென்னை கிழக்கு கடற்கரை சாலை ஈஞ்சம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் அருண் (34). இவர் அப்பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். இவர் கார் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி பாரதி. இந்த தம்பதிக்கு ஒரு மாதத்திற்கு முன்பு தான் இரட்டை குழந்தை பிறந்துள்ளது.

முட்புதரில் சடலமாக கிடந்த பச்சிளம் குழந்தை

இரண்டு பெண்கள் குழந்தைகள் பிறந்தன. இந்த நிலையில், சம்பவத்தன்று பாரதி தனது இரு குழந்தைகளை அறையில் உறங்க வைத்திருந்தார். அதன்பிறகு, திடீரென ஒரு குழந்தைகள் காணவில்லை என கூச்சலிட்டிருக்கிறார். இதனை அறிந்த, அவரது கணவர் மற்றும் மாமியார் என்னவென்று கேட்டிருக்கின்றனர்.

அப்போது, சமையலறையில் இருந்து வெளியே வந்து பார்த்தபோது ஒரு குழந்தை காணவில்லை என பாரதி கூறியிருக்கிறார். இதனால் பதறிய அவர்கள் உடனே நீலாங்கரை காவல் நிலையத்தில் குழந்தை காணவில்லை என புகார் கொடுத்துள்ளனர்.

இந்த புகாரை அடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது, குழந்தையை பாரதி கொலை செய்தது தெரியவந்துள்ளது. மேலும், இரட்டை குழந்தை பிறந்ததால் , இரண்டு குழந்தைகளையும் ஒரே நேரத்தில் பார்த்துக்கொள்ள முடியாததால் பாரதி மன உளைச்சலில் இருந்துள்ளார்.

தாய் செய்த கொடூரம்

மேலும், ஒரு குழந்தைக்கு உடல் நிலை சரியில்லாததால் கவனிக்க முடியாத நிலையும் இருந்துள்ளது. இதனால், கடந்த சில நாட்களாகவே பாரதி மன உளைச்சலில் இருந்துள்ளார். இதனை அடுத்து, யாரும் இல்லாத நேரத்தில், பிறந்து 43 நாட்களே ஆன பெண் குழந்தையை பையில் முட்புதரில் போட்டுவிட்டு சென்றது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனை அடுத்து, போலீசார் குழந்தையின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். மேலும், தாய் பாரதி மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பெற்ற தாயே குழந்தையை கொலை செய்தது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. முன்னதாக, தூத்துக்குடி மாவட்டத்தில் 3 வயது சிறுமியை தாய் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். மனநலம் பாதிக்கப்பட்ட அந்த பெண், குழந்தையை கழுத்தை நெரித்து கொலை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

நீர்வீழ்ச்சியில் மது அருந்திய இளைஞர்கள் - ஷாக்கிங் வீடியோ!
நீர்வீழ்ச்சியில் மது அருந்திய இளைஞர்கள் - ஷாக்கிங் வீடியோ!...
ரவி மோகனின் ப்ரோ கோட் படத்தில் இத்தனை ஹீரோயின்களா?
ரவி மோகனின் ப்ரோ கோட் படத்தில் இத்தனை ஹீரோயின்களா?...
தரையில் விழுந்து நொருங்கிய விமானம்.. தலைவர்கள் இரங்கல்
தரையில் விழுந்து நொருங்கிய விமானம்.. தலைவர்கள் இரங்கல்...
நியூயார்க்கில் ஒரு குட்டி இந்தியா - இணையத்தில் வைரலாகும் வீடியோ!
நியூயார்க்கில் ஒரு குட்டி இந்தியா - இணையத்தில் வைரலாகும் வீடியோ!...
விமானத்தில் பயணித்த அனைவரும் உயிரிழப்பு - அகமதாபாத் காவல்துறை
விமானத்தில் பயணித்த அனைவரும் உயிரிழப்பு - அகமதாபாத் காவல்துறை...
'சூர்யா 45 பட டீசர்' குறித்துச் சாய் அபயங்கர் கொடுத்த அப்டேட்!
'சூர்யா 45 பட டீசர்' குறித்துச் சாய் அபயங்கர் கொடுத்த அப்டேட்!...
மேத்யூ தாமஸின் நைட் ரைடர்ஸ் படத்தின் ஃபர்ஸ் லுக் போஸ்டர் இதோ
மேத்யூ தாமஸின் நைட் ரைடர்ஸ் படத்தின் ஃபர்ஸ் லுக் போஸ்டர் இதோ...
169 இந்தியர்கள்.. ஏர் இந்திய விமானத்தில் பயணித்த பயணிகள் லிஸ்ட்!
169 இந்தியர்கள்.. ஏர் இந்திய விமானத்தில் பயணித்த பயணிகள் லிஸ்ட்!...
'நான் ரஜினியின் பெரிய ரசிகன்' - நடிகர் ஆமீர்கான் பெருமிதம்!
'நான் ரஜினியின் பெரிய ரசிகன்' - நடிகர் ஆமீர்கான் பெருமிதம்!...
அஜித்தின் '64வது' படத்தில் அவருக்கு ஜோடியாக இந்த நடிகையா?
அஜித்தின் '64வது' படத்தில் அவருக்கு ஜோடியாக இந்த நடிகையா?...
மருத்துவ கல்லூரி விடுதியில் மோதிய விமானம்..! 20 மாணவர்கள் பலி?
மருத்துவ கல்லூரி விடுதியில் மோதிய விமானம்..! 20 மாணவர்கள் பலி?...