AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

வெறும் வயிற்றில் தேனில் ஊறிய பூண்டு: வியக்க வைக்கும் 5 ஆரோக்கிய நன்மைகள்!

Eating Honey-Soaked Garlic: தேனில் ஊறவைத்த பூண்டை தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவதால், அதில் நிறைந்துள்ள 'அலிசின்' என்ற ஆன்டிஆக்சிடண்ட் உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியைப் பல மடங்கு அதிகரித்து காய்ச்சல், இருமல் மற்றும் தொற்று நோய்களிலிருந்து நம்மைப் பாதுகாக்கிறது.

Sivasankari Bose
Sivasankari Bose | Published: 09 Jul 2026 13:06 PM IST
தேனில் ஊறவைத்த பூண்டை தினமும் காலையில் வெறும் வயிற்றில் அரை ஸ்பூன் அளவுக்குச் சாப்பிட்டு வர வேண்டும். இதனால் பாக்டீரியா மற்றும் வைரஸ் கிருமிகள் மூலம் நமக்கு எளிதாகப் பரவக்கூடிய காய்ச்சல் வராமல் தடுக்கப்படும். மேலும் இருமல், தொற்று நோய்கள் மற்றும் உடலில் ஏற்படும் காயங்கள் போன்றவற்றைக் குணப்படுத்த இது பெரிதும் உதவுகிறது.

தேனில் ஊறவைத்த பூண்டை தினமும் காலையில் வெறும் வயிற்றில் அரை ஸ்பூன் அளவுக்குச் சாப்பிட்டு வர வேண்டும். இதனால் பாக்டீரியா மற்றும் வைரஸ் கிருமிகள் மூலம் நமக்கு எளிதாகப் பரவக்கூடிய காய்ச்சல் வராமல் தடுக்கப்படும். மேலும் இருமல், தொற்று நோய்கள் மற்றும் உடலில் ஏற்படும் காயங்கள் போன்றவற்றைக் குணப்படுத்த இது பெரிதும் உதவுகிறது.

1 / 5
தேனில் ஊறவைத்த பூண்டில் உடலுக்கு நன்மை தரும் 'அலிசின்' என்ற மிக முக்கியமான ஆன்டிஆக்சிடண்ட் சத்து நிறைந்துள்ளது. இந்த ஆன்டிஆக்சிடண்ட் சத்தானது நமது உடலில் இயல்பாகவே இருக்கும் நோய் எதிர்ப்புச் சக்தியைப் பல மடங்கு அதிகரிக்கச் செய்கிறது. மேலும், சிலருக்கு உடலில் ஏற்படும் அதிகப்படியான வறட்சியினாலோ அல்லது உடல் சூட்டினாலோ தொடர்ச்சியாக இருமல் வரக்கூடும்.

தேனில் ஊறவைத்த பூண்டில் உடலுக்கு நன்மை தரும் 'அலிசின்' என்ற மிக முக்கியமான ஆன்டிஆக்சிடண்ட் சத்து நிறைந்துள்ளது. இந்த ஆன்டிஆக்சிடண்ட் சத்தானது நமது உடலில் இயல்பாகவே இருக்கும் நோய் எதிர்ப்புச் சக்தியைப் பல மடங்கு அதிகரிக்கச் செய்கிறது. மேலும், சிலருக்கு உடலில் ஏற்படும் அதிகப்படியான வறட்சியினாலோ அல்லது உடல் சூட்டினாலோ தொடர்ச்சியாக இருமல் வரக்கூடும்.

2 / 5
சர்க்கரை நோயால் அவதிப்படுபவர்கள் தேனில் ஊறவைத்த பூண்டை எந்தவித பயமும் இன்றித் தாராளமாகத் தங்கள் உணவில் எடுத்துக் கொள்ளலாம். ஏனெனில், இந்தத் தேன் மற்றும் பூண்டு கலவையானது நமது உடலுக்குத் தேவையான இன்சுலின் சுரப்பை இயற்கையாகவே அதிகரிக்கச் செய்கிறது. இரத்தத்தில் உள்ள தேவையற்ற சர்க்கரையின் அளவைச் சீராக வைத்துக் கொள்ள இது நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் உதவுகிறது.

சர்க்கரை நோயால் அவதிப்படுபவர்கள் தேனில் ஊறவைத்த பூண்டை எந்தவித பயமும் இன்றித் தாராளமாகத் தங்கள் உணவில் எடுத்துக் கொள்ளலாம். ஏனெனில், இந்தத் தேன் மற்றும் பூண்டு கலவையானது நமது உடலுக்குத் தேவையான இன்சுலின் சுரப்பை இயற்கையாகவே அதிகரிக்கச் செய்கிறது. இரத்தத்தில் உள்ள தேவையற்ற சர்க்கரையின் அளவைச் சீராக வைத்துக் கொள்ள இது நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் உதவுகிறது.

3 / 5
நமது இரத்தத்தில் தேங்கியிருக்கும் கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைப்பதில் பூண்டு எப்போதும் முதன்மையான ஒரு பொருளாக விளங்குகிறது. அதேபோல், தேன் மற்றும் பூண்டு ஆகிய இரண்டிலுமே நமது உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பைக் கரைக்கக்கூடிய அரிய ஆற்றல் இருக்கிறது. இதனைத் தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவதால், அதில் இருக்கும் என்சைம்கள் உடலுக்குள் சென்று கொழுப்பை விரைவாகக் கரைத்திடும்.

நமது இரத்தத்தில் தேங்கியிருக்கும் கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைப்பதில் பூண்டு எப்போதும் முதன்மையான ஒரு பொருளாக விளங்குகிறது. அதேபோல், தேன் மற்றும் பூண்டு ஆகிய இரண்டிலுமே நமது உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பைக் கரைக்கக்கூடிய அரிய ஆற்றல் இருக்கிறது. இதனைத் தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவதால், அதில் இருக்கும் என்சைம்கள் உடலுக்குள் சென்று கொழுப்பை விரைவாகக் கரைத்திடும்.

4 / 5
நமது உடலில் போதுமான அளவு இரத்தம் இல்லாமல் இரத்த சோகையினால் அவதிப்படுபவர்களுக்குத் தேனில் ஊறவைத்த பூண்டு ஒரு வரப்பிரசாதமாகும். இதில் சேர்க்கப்படும் சுத்தமான தேன் நமது உடலில் புதிய இரத்தம் உற்பத்தியாவதை அல்லது இரத்தம் விருத்தியடைவதைச் செய்கிறது. தினமும் வெறும் வயிற்றில் தேனில் ஊறிய பூண்டினைத் தவறாமல் சாப்பிடுவதால் உடலுக்கு இரட்டிப்பு ஆரோக்கிய பலன்கள் கிடைக்கிறது.

நமது உடலில் போதுமான அளவு இரத்தம் இல்லாமல் இரத்த சோகையினால் அவதிப்படுபவர்களுக்குத் தேனில் ஊறவைத்த பூண்டு ஒரு வரப்பிரசாதமாகும். இதில் சேர்க்கப்படும் சுத்தமான தேன் நமது உடலில் புதிய இரத்தம் உற்பத்தியாவதை அல்லது இரத்தம் விருத்தியடைவதைச் செய்கிறது. தினமும் வெறும் வயிற்றில் தேனில் ஊறிய பூண்டினைத் தவறாமல் சாப்பிடுவதால் உடலுக்கு இரட்டிப்பு ஆரோக்கிய பலன்கள் கிடைக்கிறது.

5 / 5
Follow Us