AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Monsoon Vegetable: மழைக்காலத்தில் இந்த 4 காய்கறிகளா? ஏன் கவனம் தேவை?

Monsoon Vegetable Buying Tips: மழைக்காலம் நிச்சயமாக குளிர்ச்சியைக் கொண்டுவருகிறது, ஆனால் இந்தக் காலத்தில்தான் நமது உணவு மற்றும் பானங்கள் விஷயத்தில் நாம் குறிப்பாகக் கவனமாக இருக்க வேண்டும். ஈரப்பதம் அதிகரிப்பதால், காய்கறிகள் விரைவாகக் கெட்டுப்போகின்றன, இதனால் அவை பூஞ்சை, பாக்டீரியா மற்றும் பூச்சிகளால் எளிதில் பாதிக்கப்படுகின்றன. சில சமயங்களில், காய்கறிகள் வெளியில் பார்க்க நன்றாகத் தெரிந்தாலும், உள்ளே அழுகிப் போயிருக்கும். ஆகவே, மழைக்காலத்தில் முதலில் அழுகும் 4 காய்கறிகள் எவை என்று தெரிந்துகொள்வோம்.

Mukesh Kannan
Mukesh Kannan | Published: 07 Jul 2026 21:21 PM IST
மழைக்காலத்தில் கத்திரிக்காய்களில் பூச்சி வேகமாக தாக்கும். எனவே வாங்கும்போது, அதில் துளைகள் அல்லது விரிசல்கள் இருக்கிறதா என்பதை சோதனை செய்யவும். அவ்வாறு, இருந்தால், அவற்றை வாங்குவதை தவிர்க்கவும். காரணம், அவற்றில் பூச்சிகள் நிறைந்திருக்கலாம்.

மழைக்காலத்தில் கத்திரிக்காய்களில் பூச்சி வேகமாக தாக்கும். எனவே வாங்கும்போது, அதில் துளைகள் அல்லது விரிசல்கள் இருக்கிறதா என்பதை சோதனை செய்யவும். அவ்வாறு, இருந்தால், அவற்றை வாங்குவதை தவிர்க்கவும். காரணம், அவற்றில் பூச்சிகள் நிறைந்திருக்கலாம்.

1 / 5
வெண்டைக்காய வாங்குவதற்கு முன், அதன் நுனியை லேசாக உடைத்து பாருங்கள். அது எளிதில் உடைந்தால், பிரஷான வெண்டைக்காய். பிரஷான வெண்டைக்காயை சாப்பிட சுவையாக இருக்கும். அதன் நுனி எளிதொல் உடையாமல், வளைந்தால், அது பழையது என்று அர்த்தம். இவற்றை வாங்காமல் தவிர்க்கவும்.

வெண்டைக்காய வாங்குவதற்கு முன், அதன் நுனியை லேசாக உடைத்து பாருங்கள். அது எளிதில் உடைந்தால், பிரஷான வெண்டைக்காய். பிரஷான வெண்டைக்காயை சாப்பிட சுவையாக இருக்கும். அதன் நுனி எளிதொல் உடையாமல், வளைந்தால், அது பழையது என்று அர்த்தம். இவற்றை வாங்காமல் தவிர்க்கவும்.

2 / 5
வெங்காயத்தின் அடிப்பகுதியை அழுத்தும்போது எளிதாக உள்ளே சென்றாலோ அல்லது மென்மையாக இருந்தாலோ, அந்த வெங்காயம் கெட்டுப்போய் அழுகிக்கொண்டுள்ளது என்று அர்த்தம். வெங்காயம் பெரும்பாலும் அதிக அளவில் வாங்கப்படுவதால், வாங்குவதற்கு முன் அதை சரிபார்த்து கொள்வது முக்கியம்.

வெங்காயத்தின் அடிப்பகுதியை அழுத்தும்போது எளிதாக உள்ளே சென்றாலோ அல்லது மென்மையாக இருந்தாலோ, அந்த வெங்காயம் கெட்டுப்போய் அழுகிக்கொண்டுள்ளது என்று அர்த்தம். வெங்காயம் பெரும்பாலும் அதிக அளவில் வாங்கப்படுவதால், வாங்குவதற்கு முன் அதை சரிபார்த்து கொள்வது முக்கியம்.

3 / 5
சுரைக்காய்களை வாங்கும்போது, அவற்றின் எடையை கவனிப்பது முக்கியம். அதிக எடை கொண்ட சுரைக்காய்களின் விதைகள் பழுத்திருக்கலாம். அப்போது, இவற்றின் சுவை குறைந்துவிடும்.

சுரைக்காய்களை வாங்கும்போது, அவற்றின் எடையை கவனிப்பது முக்கியம். அதிக எடை கொண்ட சுரைக்காய்களின் விதைகள் பழுத்திருக்கலாம். அப்போது, இவற்றின் சுவை குறைந்துவிடும்.

4 / 5
ஈரப்பதமான சூழல்களில் காளான்கள் செழித்து வளர தொடங்கும். பருவமழை காலத்தில் பூஞ்சை தொற்றுகளின் அபாயம் அதிகரிக்கும். சில வகை காளான்கள் விஷத்தன்மை கொண்டவையாக இருக்கலாம். எனவே, இந்த பருவத்தில் காளான்களை வாங்கும்போதும் உண்ணும்போதும் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.

ஈரப்பதமான சூழல்களில் காளான்கள் செழித்து வளர தொடங்கும். பருவமழை காலத்தில் பூஞ்சை தொற்றுகளின் அபாயம் அதிகரிக்கும். சில வகை காளான்கள் விஷத்தன்மை கொண்டவையாக இருக்கலாம். எனவே, இந்த பருவத்தில் காளான்களை வாங்கும்போதும் உண்ணும்போதும் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.

5 / 5
Follow Us