Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

ஆடு, கோழிகளை திருட முயன்ற 2 பேர்.. அடித்தே கொன்ற கிராம மக்கள்.. சிவகங்கையில் அதிர்ச்சி

Sivaganga Double Murder : சிவகங்கையில் இரண்டு பேர் கிராம மக்களால் அடித்து கொலை செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆடு, கோழிகளை திருட முயன்றபோது, இரண்டு பேரை அப்பகுதி மக்கள் அடித்து கொலை செய்துள்ளது தெரியவந்துள்ளது. இந்த கொலை வழக்கு தொடர்பாக இதுவரை 13 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

ஆடு, கோழிகளை திருட முயன்ற 2 பேர்.. அடித்தே கொன்ற கிராம மக்கள்.. சிவகங்கையில் அதிர்ச்சி
மாதிரிப்படம்
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 04 Jun 2025 12:35 PM

சிவகங்கை, ஜூன் 04 : சிவகங்கையில் இரண்டு பேர் கிராம மக்களால் அடித்து கொலை செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆடு, கோழிகளை திருட முயன்றபோது, இரண்டு பேரை அப்பகுதி மக்கள் அடித்து கொலை செய்துள்ளது தெரியவந்துள்ளது. சிவகங்கை மாவட்டம் மதகுபட்டியில் அழகம்மா நகரி என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் ஆடு, மாடு, கோழிகளை வளர்த்து வருகின்றனர். இங்கு கடந்த சில நாட்களாக கோழி, ஆடுகள் காணாமல் போனதாக தெரிகிறது. இதனை திருடர்கள் எடுத்து செல்வது உள்ளூர் மக்களுக்கு தெரிந்தது. இந்த நிலையில், சம்பவத்தன்று கோயில் மாடு ஒன்று காணாமல் போனது. இதனை கண்டு பிடிப்பதற்காக உள்ளூர் மக்கள் காட்டு பகுதிக்கு சென்றனர்.

ஆடு, கோழிகளை திருட முயன்ற 2 பேர்

அங்கு 2025 ஜூன் 2ஆம் தேதி இரவு வீட்டுக்கு உள்ளூர் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக 5 பேர் மூட்டை முடிச்சுகளுடன் வந்து கொண்டிருந்தனர். கையில் சில ஆடுகளை கொண்டு வந்துள்ளதாக தெரிகிறது. இதனை பார்த்த உள்ளூர் மக்கள் அவர்களிடம் விசாரிக்க சென்றனர்.

உள்ளூர் மக்கள் பார்த்த அந்த கும்பல் ஓட்டம் பிடித்தனர். உடனே கிராமத்தினர் அவர்களை விரட்டி பிடித்தனர். 5 பேரின் 3 பேர் மட்டுமே பிடிபட்டனர். இவர்களில் 2 பேரை சரமாரியாக தாக்கி உள்ளன்ர. கம்பு, கட்டையால் கடுமையாக தாக்கி உள்ளனர். இதில் அவர்கள் இரண்டு பேரும் மயங்கி கீழே விழுந்தனர். ‘

பிறகு கிராம மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், படுகாயம் அடைந்த இருவரையும் மீட்டு சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களை பரிசோதனை செய்த மருத்துவர்கள், உயிரிழந்துவிட்டதாக கூறினர்.

அடித்தே கொன்ற கிராம மக்கள்

உயிரிழந்தவர்கள் கட்டானிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் (31) மற்றும் அவரது சகோதரர் சிவசங்கரன் (24) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். மேலும் விசாரணையில், சில ஆண்டுகளுக்கு முன்பு மதுரையில் இருவர் மீது மேலவலவு காவல்துறையினரால் இரண்டு திருட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பது தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இந்த இரட்டை கொலை தொடர்பாக 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  இந்த கொலை வழக்கு குறித்து தொடர் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

தமிழகத்தில்  தொடர் கொலை சம்பவங்கள் நடந்து வருவது குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டி வருகின்றன. முன்னதாக, தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் இரண்டு பேர் கொலை செய்யப்பட்டனர். பழிக்கு பழியாக அரை மணி நேரத்தில் அடுத்தடுத்து இரண்டு பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஊருக்கு போற பிளானா? சிறப்பு ரயில்கள் இயக்கம்
ஊருக்கு போற பிளானா? சிறப்பு ரயில்கள் இயக்கம்...
ஹோட்டலில் ஓசியா சாப்பிட இப்படி செய்வதா? பிரியாணியில் இருந்த பல்லி
ஹோட்டலில் ஓசியா சாப்பிட இப்படி செய்வதா? பிரியாணியில் இருந்த பல்லி...
வாகன ஓட்டிகளே அலர்ட்... சென்னையில் போக்குவரத்து மாற்றம்
வாகன ஓட்டிகளே அலர்ட்... சென்னையில் போக்குவரத்து மாற்றம்...
நிறைய டீ குடிப்பதால் ஃபேட்டி லிவர் பிரச்னை அதிகரிக்குமா?
நிறைய டீ குடிப்பதால் ஃபேட்டி லிவர் பிரச்னை அதிகரிக்குமா?...
எஸ்பிஐக்கு கொஞ்சம் கொடுங்க சார்... விஜய் மல்லையாவுக்கு விமர்சனம்
எஸ்பிஐக்கு கொஞ்சம் கொடுங்க சார்... விஜய் மல்லையாவுக்கு விமர்சனம்...
'சூர்யா 45' படத்திலிருந்து ரசிகர்களுக்குக் காத்திருக்கும் ட்ரீட்!
'சூர்யா 45' படத்திலிருந்து ரசிகர்களுக்குக் காத்திருக்கும் ட்ரீட்!...
இன்ஸ்டாகிராமின் புதிய 'எடிட்ஸ்' ஆப் - ஈஸியா வீடியோ எடிட் பண்ணலாம்
இன்ஸ்டாகிராமின் புதிய 'எடிட்ஸ்' ஆப் - ஈஸியா வீடியோ எடிட் பண்ணலாம்...
ஆர்சிபி மற்றும் கர்நாடக கிரிக்கெட் சங்கம் மீது வழக்குப் பதிவு
ஆர்சிபி மற்றும் கர்நாடக கிரிக்கெட் சங்கம் மீது வழக்குப் பதிவு...
அடேங்கப்பா விலை இவ்வளவா? புது ரேஸ் காரை வாங்கிய அஜித் குமார்!
அடேங்கப்பா விலை இவ்வளவா? புது ரேஸ் காரை வாங்கிய அஜித் குமார்!...
வெற்றிமாறனுடன் புதிய படத்தில் இணையும் பிரபல நடிகர்?
வெற்றிமாறனுடன் புதிய படத்தில் இணையும் பிரபல நடிகர்?...
லைக்காவுக்கு ரூ.21 கோடியை விஷால் தர வேண்டும் - உயர்நீதிமன்றம்
லைக்காவுக்கு ரூ.21 கோடியை விஷால் தர வேண்டும் - உயர்நீதிமன்றம்...