Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

இளம்பெண்ணை கொடூரமாக கொன்ற இளைஞர்.. கடைசியில் எடுத்த விபரீத முடிவு.. சென்னையில் அதிர்ச்சி!

Chennai Woman Murder : சென்னையில் இளம்பெண்ணை காதல் கொலை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பெண்ணை கொலை செய்துவிட்டு, இளைஞரம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். இருவருக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்ததை அடுத்து, இளம்பெண்ணை கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.

இளம்பெண்ணை கொடூரமாக கொன்ற இளைஞர்.. கடைசியில் எடுத்த விபரீத முடிவு.. சென்னையில் அதிர்ச்சி!
மாதிரிப்படம்
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 03 Jun 2025 13:41 PM

சென்னை,  ஜூன் 03 : சென்னையில் இளம்பெண்ணை கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெண்ணை கொலை செய்த இளைஞர், தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆகாஷ். அதே பகுதியைச் சேர்ந்தவர் அபிநயா (19). இவர்கள் இருவரும் விழுப்புரத்தில் உள்ள அறிஞர் அண்ணா கலைக் கல்லூரியில் படித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் காதலித்து வந்தாக தெரிகிறது. கோடை விடுமுறையில் பகுதி நேர வேலைக்காக இவர்கள் சென்னை செல்ல திட்டமிட்டனர். அதன்படியே , அவர்கள் சென்னைக்கு சென்றனர். ஆகாஷின் மூத்த சகோதரர் அவர்களுக்கு அங்கு உதவினார். அவர் இருவரையும் ஒரு வாடகை வீட்டில் தங்க வைத்தனர். இதனை அடுத்து, ஆகாஷ் மற்றும் அபிநயாவும் ராஜீவ் காந்தி நகரில் உள்ள ஒரு வீட்டிற்கு குடிபெயர்ந்தனர்.

இளம்பெண்ணை கொடூரமாக கொன்ற இளைஞர்

அங்கிருந்து இருவரும் வேலைக்கு சென்றுக் கொண்டிருந்தனர். அப்போது, இவர்களுக்கு இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. இதற்கிடையில், 2025 ஜூன் 2ஆம் தேதி இரவு 8 மணியளவில் ஆகாஷ் தூக்கில் தொங்கிய இருப்பதை அக்கம் பக்கத்தில் உள்ள ஒருவர் ஜன்னல் வழியாக பார்த்துள்ளார்.

இதனை அடுத்து, உடனே அக்கம் பக்கத்தின் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது, அபிநயா ரத்தக் காயங்களுடன் கிடந்துள்ளார். ஆகாஷ் தூக்கில் தொங்கியவாறு கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த மக்கள், உடனே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், பெண் அபிநயாவை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் அவர் உயிரிழந்துவிட்டதாக கூறினர். மேலும், ஆகாஷ் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

சென்னையில் அதிர்ச்சி

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் இருவருக்கு இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டடு வந்துள்ளது. சம்பவத்தன்றும் இருவருக்கும் சண்டை ஏற்பட்டதால், ஆத்திரத்தில் ஆகாஷ், அபிநயாவை கழுத்தறுத்து கொலை செய்துவிட்து, அவருக்கு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.

முன்னதாக, கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் வீடு புகுந்து கல்லூரி மாணவி கொலை செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஒருதலைக் காதலால், இளைஞர் ஒருவர் மாணவியை மார்பு, கழுத்து, முதுகில் குத்திக் கொடூரமாக கொலை செய்துவிட்டு, காவல்நிலையத்திற்கு சென்று சரணடைந்துள்ளார்.

இளம்பெண்  அஷ்விகாவை நீண்ட  நாட்காள ஒருதலைபட்சமாக காதலித்து வந்துள்ளார்.  ஆனால், இந்த காதலுக்கு அந்த பெண் மறுத்து வந்துள்ளார். இந்த நிலையில், சம்பவ இடத்திற்கு வீட்டில் தனியாக இருந்த பெண்ணை, கழுத்தறுத்து கொலை செய்துள்ளார்.

பெங்களூரு கூட்ட நெரிசலுக்கு காரணம் என்ன? கர்நாடக முதல்வர் பதில்
பெங்களூரு கூட்ட நெரிசலுக்கு காரணம் என்ன? கர்நாடக முதல்வர் பதில்...
இயக்குநர் பாலா எனக்கு ஹீரோ - புழந்து பேசிய இயக்குநர் மணிரத்னம்
இயக்குநர் பாலா எனக்கு ஹீரோ - புழந்து பேசிய இயக்குநர் மணிரத்னம்...
பள்ளிகளில் சாதி மோதல்கள்.. மாணவர்களுக்கு அதிரடி உத்தரவு
பள்ளிகளில் சாதி மோதல்கள்.. மாணவர்களுக்கு அதிரடி உத்தரவு...
டூரிஸ்ட் ஃபேமிலி படக்குழு மீது வழக்கு போட சொன்னாங்க, ஆனால்...
டூரிஸ்ட் ஃபேமிலி படக்குழு மீது வழக்கு போட சொன்னாங்க, ஆனால்......
2 நாட்களுக்கு பொளக்கும் வெயில்.. 3 டிகிரி வரை உயரும் வெப்பநிலை
2 நாட்களுக்கு பொளக்கும் வெயில்.. 3 டிகிரி வரை உயரும் வெப்பநிலை...
அட! காளான் சாப்பிடுவதால் உடலுக்கு இவ்வளவு நன்மைகளா?
அட! காளான் சாப்பிடுவதால் உடலுக்கு இவ்வளவு நன்மைகளா?...
Bengaluru Stampede: சின்னசாமி மைதானத்தில் உண்மையில் என்ன நடந்தது?
Bengaluru Stampede: சின்னசாமி மைதானத்தில் உண்மையில் என்ன நடந்தது?...
இந்தி சினிமாவிற்கு நோ சொன்ன காரணம் பற்றி நடிகை சிம்ரன் ஓபன் டாக்!
இந்தி சினிமாவிற்கு நோ சொன்ன காரணம் பற்றி நடிகை சிம்ரன் ஓபன் டாக்!...
'சிம்புதான் தக் லைஃப் படத்துக்கு பொருத்தமானவர்' - மணிரத்னம்!
'சிம்புதான் தக் லைஃப் படத்துக்கு பொருத்தமானவர்' - மணிரத்னம்!...
கோட் படத்தில் 'சிஎஸ்கே' காட்சி வைக்கக் காரணம் - வெங்கட் பிரபு!
கோட் படத்தில் 'சிஎஸ்கே' காட்சி வைக்கக் காரணம் - வெங்கட் பிரபு!...
ஆண்ட்ராய்டு மூலம் யூசர்களின் தகவல்களை திருடும் மெட்டா?
ஆண்ட்ராய்டு மூலம் யூசர்களின் தகவல்களை திருடும் மெட்டா?...