தூத்துக்குடியை அதிர வைத்த இரட்டை கொலை.. அரை மணி நேரத்தில் நடந்த சம்பவம்!
Thoothukudi Double Murder : தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அரை மணி நேரத்தில் இரண்டு பேர் அடுத்தடுத்து கொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பழிக்கு பழியாக இரண்டு கொலைகள் நடந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக 9 பேர் கைது செய்யப்பட்டனர்.

தூத்துக்குடி, ஜூன் 03 : தூத்துக்குடியில் இரண்டு பேர் அரை மணி நேரத்தில் அடுத்தடுத்து இரண்டு பேர் கொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்ததாக போலீசார் கூறியுள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பிரகதீஸ்வரன் (20). இவர் கடலையூர் சாலையில் உள்ள டாஸ்காக் கடை அருகே வெட்டிக் கொலை செய்யப்ட்டார். இவர் அப்பகுதியில் 5 பேர் கொண்ட கும்பலுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தார். வாக்குவாதம் நீடித்த நிலையில், அந்த கும்பல் அவரை சதீஷ் மற்றும் அவரது கூட்டாளிகள் கொலை செய்துள்ளனர். கொலை செய்யப்பட்ட பிரகதீஸ்வரனுக்கும், சதீஷுககும் இடையே தகராறு இருந்துள்ளது.
தூத்துக்குடியை அதிர வைத்த இரட்டை கொலை
இந்த நிலையில், சம்பவத்தன்று, இருவரும் சண்டை போட்டுக் கொண்டதை அடுத்து, பிரகதீஸ்வரனை சதீஷ் மற்றும் அவரது கூட்டாளிகள் சரமாரியாக வெட்டிக் கொலை செய்தது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் நடந்த அரை மணி நேரத்திற்குள் பழிக்கு பழி மற்றொரு கொலை நடந்துள்ளது.
சதீஷை தேடி, ஒரு கும்பல் அவரது வீட்டிற்கு சென்றுள்ளது. அப்போது, சதீஷின் தாய் கஸ்தூரி வீட்டில் இருந்துள்ளார். சதீஷ் வீட்டில் இல்லாததை அடுத்து, தாய் கஸ்தூரியை சரமாரியாக அந்த கும்பல் வெட்டிக் கொலை செய்துள்ளார்.




இதனை தடுக்க வந்த அவரது மகன் செண்பகராஜையும் அவர்கள் வெட்டியுள்ளனர். இதில் அவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். பெண் கஸ்தூரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அரை மணி நேரத்தில் நடந்த இரண்டு கொலைகள் தூத்துக்குடியை அலற வைத்துள்ளது.
9 பேர் கைது
கோவில்பட்டி கிழக்கு போலீசார் இந்த கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், கொலை செய்யப்பட்ட இரண்டு பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். ரகதீஸ்வரனின் உடல் விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும், கஸ்தூரியின் உடல் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்டது. இரு குடும்பங்களுக்கிடையே நீண்டகாலமாக நிலவி வந்த பகையே கொலைகளுக்குக் காரணம் என்று முதற்கட்ட விசாரணைகள் தெரிவிக்கின்றன.
இரட்டைக் கொலை தொடர்பாக ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து தூத்துக்குடி காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் கூறுகையில், “90 போலீசார் கொண்ட குழு சம்பவ இடத்தை பார்வையிட்டது. கோவில்பட்டி டிஎஸ்பி மற்றும் குழுவினர் சம்பவங்கள் நடந்த சில நிமிடங்களில் நான்கு பேரை பிடித்தனர். இந்த கொலை வழக்கில் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்” என்று அவர் கூறினார். தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரே இரவில் இரண்டு பேர் அடுத்தடுத்து கொலை செய்ய்ப்பட்டது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.