Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

நெல்லையில் பயங்கரம்.. கணவன் மீது கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிய மனைவி.. நடந்தது என்ன?

Tirunelveli Crime News : திருநெல்வேலியில் கணவர் மீது மனைவி கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றி சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனை அடுத்து, அவருக்கு நெல்லை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், பெண் முத்துலட்சுமியை கைது செய்துள்ளனர்.

நெல்லையில் பயங்கரம்.. கணவன் மீது கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிய மனைவி.. நடந்தது என்ன?
மாதிரிப்படம்Image Source: Pinterest
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 31 May 2025 08:11 AM

திருநெல்வேலி, மே 31 : திருநெல்வேலி மாவட்டத்தில் கணவன் மீது மனைவி கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில், படுகாயம் அடைந்த நபருக்கு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. திருநெல்வேலி மாவட்டம் கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (42). இவர் ஆட்டோ ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி முத்துலட்சுமி (34). இந்த தம்பதிக்கு 3 மகள்கள், ஒரு மகனும் உள்ளனர். இந்த தம்பதிக்கு இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளதாக தெரிகிறது. கணவன் மீது சந்தேகம் அடைந்த மனைவி, பாலசுப்பிரமணியனிடம் தொடர்ந்து தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. 25 நாட்களுக்கு முன்பு கூட, முத்துலட்சுமி சண்டை போட்டுக் கொண்டு தனது தாய் வீட்டிற்கு சென்றதாக தெரிகிறது.

கணவன் மீது கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிய மனைவி

இது தொடர்பாக நெல்லை மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதனை அடுத்து, இருவரையும் அழைத்து போலீசார், சமரசம் பேசு அனுப்பி வைத்தனர். இதனை அடுத்து, முத்துலட்சுமி நான்கு நாட்களுக்கு முன்பு கணவர் வீட்டிற்கு சென்றிருந்தார்.

அப்போது, மீண்டும் இருவருக்கும் இடையே மீண்டும் சண்டை ஏற்பட்டது. இந்த நிலையில், 2025 மே 30ஆம் தேதியான நேற்று காலை தூக்கிக் கொண்டிருந்த பாலசுப்பிரமணியன் மீது தண்ணீரை ஊற்றி முத்துலட்சுமி எழுப்பி உள்ளதாக தெரிகிறது.

இதனை அடுத்து, இருவருக்கு மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரத்தில் முத்துலட்சுமி கணவர் மீது கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றி இருக்கிறார். இதனால், வலியால் துடித்து அலறிய பாலசுப்பிமணியனை அக்கம் பக்கத்தினர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

நடந்தது என்ன?

அங்கு அவருக்கு தீவிர சிசிக்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து சிவந்திபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்துலட்சுமியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், பாலசுப்பிரமணியின் வேறொரு பெண்ணுடன் உறவில் இருப்பதாக முத்துலட்சுமி சந்தேகப்பட்டுள்ளார்.

இதன் காரணமாகவே, இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில், சம்பவத்தன்று மீண்டும் ஏற்பட்ட தகராறில் கொதிக்கும் எண்ணெய்யை பாலசுப்பிரமணியன் மீது முத்துலட்சுமி ஊற்றியுள்ளது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து, முத்துலட்சுமி கைது செய்யப்பட்டு, விசாரிக்கப்பட்டு வருகிறார்.

முன்னதாக 2025 மார்ச் மாதம், கேரளாவில் பெரும்பாவூர் பகுதியில் கணவன் மீது மனைவி கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றி இருக்கிறார். இதில், அந்த நபரின் அந்தரங்க பகுதியிலும், உடல் முழுவதும் பலத்த தீக்காயங்கள் ஏற்பட்டது. முன்னாள் காதலியுடன் தனது கணவர் இருக்கும் புகைப்படத்தை பார்த்த மனைவி, இந்த கொடூர செயலை செய்துள்ளது விசாரணையில் தெரியவந்தள்ளது. கணவரின் புகாரின் அடிப்படையில் அந்தப் பெண் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர் குறிப்பிடத்தக்கது.

மகிழ்ச்சி பெருக வேண்டுமா? வீட்டில் கவனிக்க வேண்டிய வாஸ்து
மகிழ்ச்சி பெருக வேண்டுமா? வீட்டில் கவனிக்க வேண்டிய வாஸ்து...
தக் லைஃப் படம் பார்த்து நடிகர் கமல்ஹாசன் கொடுத்த ரிவியூ!
தக் லைஃப் படம் பார்த்து நடிகர் கமல்ஹாசன் கொடுத்த ரிவியூ!...
சூப்பர் ஹிட் அடித்த மாமன் படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது?
சூப்பர் ஹிட் அடித்த மாமன் படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது?...
குறைந்தபட்ச இருப்புத் தொகை விதி நீக்கம் - கனரா வங்கி
குறைந்தபட்ச இருப்புத் தொகை விதி நீக்கம் - கனரா வங்கி...
அகமதாபாத்தில் வெற்றிக்காக போராடும் MI.. இன்று PBKS-ஐ வீழ்த்துமா?
அகமதாபாத்தில் வெற்றிக்காக போராடும் MI.. இன்று PBKS-ஐ வீழ்த்துமா?...
எண்ணூர் பேருந்து நிலையம்: நிழற்குடை இல்லை, கழிப்பறை இல்லை..!
எண்ணூர் பேருந்து நிலையம்: நிழற்குடை இல்லை, கழிப்பறை இல்லை..!...
சிறுவனுடன் கால்பந்து விளையாடும் காகம் - வைரல் வீடியோ!
சிறுவனுடன் கால்பந்து விளையாடும் காகம் - வைரல் வீடியோ!...
திடீர் வெயில்.. திடீர் மழை.. உடல்நிலையை பாதிக்கும் சில நோய்கள்!
திடீர் வெயில்.. திடீர் மழை.. உடல்நிலையை பாதிக்கும் சில நோய்கள்!...
ஜெயிலர் 2 ஷூட்டிங்கில் ரஜினிகாந்த் செய்த செயல் - யோகி பாபு பேச்சு
ஜெயிலர் 2 ஷூட்டிங்கில் ரஜினிகாந்த் செய்த செயல் - யோகி பாபு பேச்சு...
தமிழகத்தில் இடியுடன் மழை பெய்ய வாய்ப்பு.. எத்தனை நாள் தெரியுமா?
தமிழகத்தில் இடியுடன் மழை பெய்ய வாய்ப்பு.. எத்தனை நாள் தெரியுமா?...
சர்ச்சை பேச்சு.. வருத்தம் தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!
சர்ச்சை பேச்சு.. வருத்தம் தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!...