திருமண நிகழ்ச்சியில் நடனமாடிய இளைஞர்.. சுருண்டு விழுந்து பலி.. சென்னையில் ஷாக்!
Chennai Youth Dies While Dance in Wedding : சென்னையில் திருமண நிகழ்ச்சியில் நடமானடிக் கொண்டிருந்த இளைஞர் திடீரென சுருண்டு விழுந்து உயிரிழந்துள்ளார். மதுபோதையில் நடமாடிய இளைஞர், மாரடைப்பால் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தண்டையார்பேட்டையில் நடந்து உள்ளது. உயிரிழந்த இளைஞரின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

சென்னை, மே 29 : சென்னையில் திருமண நிகழ்ச்சியில் நடனமாடிக் கொண்டிருக்கும்போது இளைஞர் ஒருவர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மது போதையில் நடமானடிக் கொண்டிருந்தபோது, திடீரென மயக்கமடைந்து உயிரிழந்தார். இவர் மாரடைப்பால் உயிரிழந்ததாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். அண்மைக் காலமாக திடீர் மாரடைப்பால் பலரும் உயிரிழந்து வருகின்றனர். நடனமாடும் போதோ, எதாவது ஒரு வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போதோ இளைஞர்கள் பலரும் உயிரிழந்து வருகின்றனர். இதற்கு பல காரணங்கள் சொல்லப்பட்டாலும், முக்கிய காரணம் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை. மதுபானம், புகைபிடித்தால் உள்ளிட்ட காரணங்களால் திடீர் மாரடைப்பு ஏற்படுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
திருமண நிகழ்ச்சியில் நடனமாடிய இளைஞர்
அதோடு, தீவிர உடற்பயிற்சி, மன உளைச்சல், மனச்சோர்வு உள்ளிட்ட காரணங்களாலும் திடீர் மாரடைப்பு இளைஞர்களுக்கு ஏற்படுவதாக கூறுகின்றனர். இதனால், நாட்டில் பலரும் உயிரிழந்து வருகின்றனர். அப்படி ஒரு சம்பவம் தான் சென்னையில் நடந்துள்ளது.
திருமண நிகழ்ச்சியில் நடனமாடிக் கொண்டிருந்த இளைஞர், திடீரென உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் 27 வயதான சுபாஷ் சந்திரபோஸ். இவர் புதுவண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர். பட்டப்படிப்பை முடித்த இவர், மின்வாரியத்தில் ஒப்பந்த ஊழியராக பணிபுரிந்து வந்தார்.
இந்த நிலையில், 2025 மே 28ஆம் தேதியான நேற்று, தனது நண்பரின் திருமண நிகழ்ச்சிக்கு சென்றிருந்தார். தண்டையார்பேட்டையில் நடந்த தனது நண்பரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு சென்றிருக்கிறார். அப்போது, அந்நிகழ்ச்சியில் சுபாஷ் சந்திரபோஷ் தனது நண்பர்களுடன் சேர்ந்த உற்சாகமாக நடமாடி இருக்கிறார்.
சுருண்டு விழுந்து பலி
அப்போது, அவர் திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது நண்பர்களும், உறவினர்களும் அவரை மீட்டு அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்தவர்கள் பரிசோதனை செய்ததில், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.
இவர் நடனமாடும் போது மதுபோதையில் இருந்துள்ளதாக கூறப்படுகிறது. இவர் மாரடைப்பால் உயிரிழந்திருக்கலாம் எனவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதுபோன்று நடப்பது முதல்முறையல்ல. திண்டுக்கல் மாவட்டத்தில் தனியார் பேருந்தை ஒட்டிச் சென்ற ஓட்டுநர் திடீரென மாரடைப்பால் உயிரிழந்தார். உயிரிழந்தவர் பிரபு என அடையாளம் காணப்பட்டுள்ளது.
இவர் தனியார் பேருந்தில் ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில், இவர் சம்பவத்தன்று, கணக்கம்பட்டி அருகே பேருந்து சென்றுக் கொண்டிருந்தபோது, ஓட்டுநர் மாரடைப்பால் உயிரிழந்தனார். நல்வாய்ப்பாக பயணிகளுக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படவில்லை.
ஓட்டுநர் மயங்கி விழுந்ததை அடுத்து, நடத்துனர் சாமர்த்தியமாக பிரேக்கை கையால் அழுத்தி சாலையின் ஓரமாக பேருந்தை நிறுத்தினார். முன்னதாக, கர்நாடக மாநிலத்தில் திருமணத்தின்போது மணமகன் திடீரென மயங்கி உயிரிழந்தார். மணமகளுக்கு தாலி கட்டிய அடுத்த சில நிமிடங்களிலேயே, அவர் மயங்கி உயிரிழந்தார். அவர் மாரடைப்பால் உயிரிழந்ததாக மருத்துவர்கள் கூறினர்.