வைரக் கம்மல், ஊக்கத்தொகை.. மாணவர்களுக்கு வழங்கிய விஜய்.. மேடையில் நெகிழ்ச்சி
TVK Vijay Education Award Function : சென்னை மாமல்லபுரத்தில் 10,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழக வெற்றிக் கழகம் சார்பில் விருது வழங்கும் விழா நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் 10,12ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு வைரல் மோதிரம், கம்மல், தங்க நாணயம் உள்ளிட்டவற்றை பரிசாக விஜய் வழங்கி உள்ளார்.

சென்னை, மே 30 : சென்னை மாமல்லபுரத்தில் 10,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழக வெற்றிக் கழகம் (tvk education award) சார்பில் விருது வழங்கும் விழா நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் 88 தொகுதிகளில் 600க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டுள்ளனர். இதில் குறிப்பாக, 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 600க்கு 599 மதிப்பெண்கள் பெற்ற மாணவி ஓவியாஞ்சலிக்கு வைர தோடு ஒன்றை விஜய் பரிசளித்துள்ளார். மேலும், ஊக்கத்தொகையும் வழங்கியதாக தெரிகிறது. ஒவ்வொரு ஆண்டும் 10,12ஆம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண்களை பெறும் மாணவர்களுக்கு தமிழக வெற்றிக் கழகம் சார்பில் விருது வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை இரண்டு முறை விருது வழங்கும் விழா நடைபெற்றது.
மாணவர்களுக்கு பரிசு வழங்கிய விஜய்
இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மூன்றாவது கல்வி விருது விழா 2025 மே 30ஆம் தேதியான இன்று நடைபெற்று வருகிறது. சென்னை மாமல்லபுரத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் இந்த விழா நடந்தது. இந்த விருது விழாவில் 600க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில், சென்னை, அரியலூர், கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, திருவள்ளூர், தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி, நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் 88 தொகுதிகைளைச் சேர்ந்த 10,12ஆம் வகுப்பு மாணவர்கள் கலந்து கொண்டனர்.




இந்த விழா சரியாக காலை 9 மணியளவில் தொடங்கிய நிலையில், விழா அரங்கிற்கு வந்த தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் மாணவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். மேலும், மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு மேடையில் இருந்து இறங்கி வந்து சால்வை அணிவித்து பரிசுகளை வழங்கினார்.
வைரக் கம்மல், ஊக்கத்தொகை
Piryamudan vijay ✍️😍 #VIJAYHonorsStudentspic.twitter.com/rf1jYtRXQP
— தமிழக வெற்றிக் கழகம் IT WING (@Tvk_ITWING_) May 30, 2025
மேலும், அவர்களுடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டனர். இதன்பின், 12,10ஆம் வகுப்பில் மாநில அளவில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவிகளுக்கு பரிசுகளையும் சான்றிதழ்களையும் வழங்கினர். அதன்படி, 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 600க்கு 599 மதிப்பெண்கள் பெற்ற மாணவி ஓவியாஞ்சலிக்கு வைர தோடு ஒன்றை விஜய் பரிசளித்துள்ளார்.
மேலும், ஊக்கத்தொகையும் வழங்கியதாக தெரிகிறது. அதைத் தொடர்ந்து, மாணவர்களுக்கு தங்க நாணயம், பரிசுத் தொகையும் வழங்கி இருக்கிறார். விழாவுக்கு வருகை தந்த மாணவர்களுக்கு 21 அறுவை சுவை உணவுகளை விஜய் வழங்குகிறார். முன்னதாக, இந்நிகழ்ச்சியில் பேசிய விஜய், நீட் தேர்வு உள்ளிட்ட விஷயங்கள் குறித்து அறிவுறுத்தியுள்ளார்.
அதாவது, நீட் மட்டும் தான் உலகமா. நீட்டை தாண்டி பல விஷயங்கள் உள்ளன என்று தெரிவித்துள்ளார். மேலும், சாதி மதத்தையும் தூரம் ஒதுக்குவது நல்லது. அண்மையில், பெரியாருக்கே சாதி சாயம் பூச முயற்சிக்கின்றனர். மத்திய சிவில் சிர்விஸ் தேர்விலும் கூட, சாதி சாயம் பூசுகின்ற மாதிரி ஒரு கேள்வியை கேட்டுள்ளனர். இதனை வன்மையாக கண்டிக்கிறேன் என்றும் பேசியுள்ளார்.