வெளுக்கப்போகுது… கனமழை லிஸ்டில் இந்த 7 மாவட்டங்கள்.. வானிலை மையம் கொடுத்த வெதர் அலெர்ட்!
Tamil Nadu Weather Update : தமிழகத்தில் இரண்டு தினங்களுக்கு கனமழை வெளுக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, நீலகிரி, கோவை, தேனி, ராமநாதபுரம், திருவாரூர், நாகை, தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் இரு தினங்களுக்கு மிதமான மழை பெய்யக் கூடும்.

சென்னை, செப்டம்பர் 04 : தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு (Tamil Nadu Weather) மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் (Chennai Weather) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் நகரின் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த சில தினங்களாகவே மழை பெய்து வருகிறது. தென் மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. சென்னையிலும் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு கூட, மேகவெடிப்பால் கனமழை பெய்தது. தற்போது சென்னையில் வெயில் அடித்து வருகிறது. இப்படியாக வானிலை மாறி மாறி வரும் நிலையில், அடுத்த சில தினங்களுக்கான வானிலை நிலவரத்தை பார்ப்போம்.




வடக்கு ஒடிசா கடலோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள வடமேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து, மாலை 5.30 மணியளவில் ஒரிசா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவி, மேலும் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று காலை 5.30 மணியளவில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுகுறைந்து, வடக்கு சட்டீஸ்கர் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவுகிறது. மேலும், மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகத்தில் 2025 செப்டம்பர் 4ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை தமிழகத்தில் மிதமான மழை பெய்யக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read : குறையும் மழை.. 100 டிகிரி பாரன்ஹீட் கடந்து பதிவாகும் வெப்பநிலை.. எச்சரிக்கும் வானிலை ரிப்போர்ட்..
இரண்டு நாட்களுக்கு வெளுக்கும் கனமழை
DAILY WEATHER REPORT FOR TAMILNADU, PUDUCHERRY & KARAIKAL AREAhttps://t.co/LOvDNF1kAH pic.twitter.com/KY9RqvPW6z
— IMD-Tamilnadu Weather (@ChennaiRmc) September 4, 2025
மேலும், 2025 செப்டம்பர் 8ஆம் தேதி ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. 2025 செப்டம்பர் 9ஆம் தேதி கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read : வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி.. அடுத்த 7 நாட்களுக்கு மழை இருக்குமா?
மேலும், தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக் கூடும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை, 2025 செப்டம்பர் 4,5ஆம் தேதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34 முதல் 35 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 முதல் 28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக் வடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.