Tamil Nadu Weather Update: தமிழ்நாட்டில் அடுத்த 2 நாட்கள் மழையா? வெயிலா..? லேட்டஸ்ட் வானிலை அப்டேட்!
Tamil Nadu Rain Forecast: தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் கனமழை பெய்துள்ளது. ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இராமநாதபுரம், சிவகங்கை போன்ற மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யும்.

சென்னை, ஆகஸ்ட் 10: தமிழ்நாட்டில் நேற்று அதாவது 2025 ஆகஸ்ட் 9ம் தேதி மாலை நேரங்களில் தென்மாவட்டங்களில் பல பகுதிகளில் மழையானது கிட்டத்தட்ட 2 மணிநேரத்திற்கு மேலாக வெளுத்து வாங்கியது. இந்தநிலையில், 2025 ஆகஸ்ட் 10ம் தேதியான இன்றும் ராணிப்பேட்டை, திருவண்ணாமலை (Tiruvannamalai), கள்ளக்குறிச்சி, திருப்பூர், பெரம்பலூர், கடலூர், அரியலூர் மற்றும் சிவகங்கை ஆகிய மாவட்டங்களின் ஓரிரு பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் (IMD-Tamilnadu Weather) தகவல் தெரிவித்துள்ளது. தொடர்ந்து, இராமநாதபுரம், சிவகங்கை, தஞ்சாவூர், புதுக்கோட்டை, தேனி, மதுரை, புதுச்சேரி மற்றும் திண்டுக்கல் (Dindigul) ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இனி வரும் நாட்களில் எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு..?
— IMD-Tamilnadu Weather (@ChennaiRmc) August 10, 2025
2025 ஆகஸ்ட் 11ம் தேதி முதல் 2025 ஆகஸ்ட் 16ம் தேதி வரை தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை இன்று அதாவது 2025 ஆகஸ்ட் 10ம் தேதி வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.




ALSO READ: இனி தப்ப முடியாது.. சென்னையில் 169 இடங்களில் ஏ.என்.பி.ஆர் கேமிரா.. 10 நொடியில் நோட்டீஸ்..
அதிகபட்ச வெப்பநிலையாக சென்னையில் 36 டிகிரி செல்சியஸாக இருக்கும் என்றும், குறைந்த பட்ச வெப்பநிலையாக 26 டிகிரி செல்சியஸாகவும் ஒட்டியும் இருக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2025 ஆகஸ்ட் 11ம் தேதியான நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒருசில பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலையாக 36 டிகிரி செல்சியஸாகவும், 37 டிகிரி செல்ஸியஸாகவும் இருக்கும் என்றும், குறைந்தபட்ச வெப்பநிலையாக 27 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் ஒருக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
2025 ஆகஸ்ட் 10ம் தேதி முதல் 2025 ஆகஸ்ட் 14ம் தேதியான வரை தென் தமிழ்நாட்டின் கடலோரப்பகுதிகளில், மன்னார் வளைகுடா மற்று குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையில் 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ALSO READ: சென்ட்ரல் டூ அரக்கோணம்.. வருகிறது ஏசி மின்சார ரயில் சேவை.. எப்போது முதல் தெரியுமா?
வங்கக்கடல் பகுதிகளை பொறுத்தவரை இன்று 2025 ஆகஸ்ட் 10ம் தேதி தென்மேற்கு வங்கக்கடலின் சில பகுதிகள், தெற்கு ஆந்திரா கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிலான கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.