Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

தமிழகத்தில் வெளுக்கும் மழை.. நீலகிரி, கோவைக்கு அலர்ட்.. சென்னையில் வானிலை எப்படி?

Tamil Nadu Weather Update : தமிழகத்தில் 2025 ஆகஸ்ட் 17ஆம் தேதியான இன்று நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், தென் மாவட்டங்கள், வட மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வெளுக்கும் மழை.. நீலகிரி, கோவைக்கு அலர்ட்.. சென்னையில் வானிலை எப்படி?
மழை
Umabarkavi K
Umabarkavi K | Published: 17 Aug 2025 06:15 AM

சென்னை, ஆகஸ்ட் 17 : தமிழகத்தில் அடுத்த சில தினங்களுக்கு கனமழை தொடரும் என வானிலை மையம் (Tamil Nadu Weather) தெரிவித்துள்ளது. 2025 ஆகஸ்ட் 17ஆம் தேதியான இன்று நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் கனமழை (Tamil Nadu Rains) பெய்யக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. 2025 ஜூலை மாதம் வெயில் வாட்டி வதைத்த நிலையில், ஆக்ஸ்ட் மாதத்தில் இருந்தே பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக, தென் மாவட்டங்கள், வட மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் முற்றிலுமாக வெப்பம் தணிந்துள்ளது. சென்னையை பொறுத்தவரை, அவ்வப்போது மழை பெய்து வருகிறது. குறிப்பாக, மாலை மற்றும் இரவு நேரங்களில் நல்ல மழை பெய்கிறது. இந்த நிலையில், அடுத்த சில தினங்களுக்கான வானிலை நிலவரத்தை பார்ப்போம்.

அதன்படி, 2025 ஆகஸ்ட் 18ஆம் தேதி வாக்கில் வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, 2025 ஆகஸ்ட் 17ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக் கூடும். குறிப்பாக, 2025 ஆகஸ்ட் 17ஆம் தேதியான இன்று வட தமிழகம், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக் கூடும்.

Also Read : அடுத்த 6 நாட்களுக்கு கொட்டப்போகும் மழை.. எங்கெங்கு தெரியுமா? வானிலை மையம் அலர்ட்!

நீலகிரி, கோவையில் கனமழை வெளுக்கும்

ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்தில் வீசக்கூடும். நீலகிரி மற்றும் கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது

Also Read : வங்கக்கடலில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.. 2 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை..

சென்னையை பொறுத்தவரை, 2025 ஆகஸ்ட் 17ஆம் தேதி (இன்று) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக் கூடும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33 முதல் 34 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 முதல் 27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.