5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை.. வெப்பநிலை எப்படி இருக்கும்?
Tamil Nadu Weather Alert: தமிழ்நாட்டில் ஆகஸ்ட் 11, 2025 தேதியான இன்று, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வானிலை நிலவரம், ஆகஸ்ட் 11, 2025: வடக்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதேபோல் வருகின்ற 2025 ஆகஸ்ட் 13ஆம் தேதி வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக 2025 ஆகஸ்ட் 11ஆம் தேதி அதாவது இன்று விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் 12 2025 தேதியான நாளை திருவள்ளூர், ராணிப்பேட்டை, மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பதிவான மழை:
அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் மணல்மேடு (மயிலாடுதுறை) தலா 10, தழுதலை (பெரம்பலூர்), ஊத்துக்கோட்டை (திருவள்ளூர்) தலா 9, புள்ளம்பாடி (திருச்சிராப்பள்ளி), தஞ்சை பாபநாசம் (தஞ்சாவூர்), திருத்துறைப்பூண்டி (திருவாரூர்), கொள்ளிடம் (மயிலாடுதுறை) தலா 8, தலைஞாயிறு (நாகப்பட்டினம்), பண்ருட்டி (கடலூர்), தாலுகா அலுவலகம் திருப்பத்தூர் (திருப்பத்தூர்), திருவாரூர் (திருவாரூர்), தேவிமங்கலம் (திருச்சிராப்பள்ளி), திருவாரூர் AWS (திருவாரூர்), வேளாங்கண்ணி (நாகப்பட்டினம்), புவனகிரி (கடலூர்), கே.எம்.கோயில் (கடலூர்), உத்திரமேரூர் (காஞ்சிபுரம்), அரூர் (தர்மபுரி), லால்பேட்டை (கடலூர்) தலா 7 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
மேலும் படிக்க: சிறுநீரகம் திருடப்பட்டதை உறுதி செய்த விசாரணை குழு.. பரிந்துரைகள் என்னென்ன?
எத்தனை நாட்களுக்கு மழை நீடிக்கும்?
மேலும் ஆகஸ்ட் 13 2025 அன்று வேலூர், திருப்பத்தூர் மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஆகஸ்ட் 14 2025 முதல் ஆகஸ்ட் 17 2025 வரை தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: இலங்கை கடற்படை அட்டூழியத்திற்கு எதிர்ப்பு.. இராமேஸ்வரம் மீனவர்கள் வேலைநிறுத்த போராட்டம்!
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும் நகரின் ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை என்பது 35 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்க கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.