Tamil Nadu News Live Updates: விடுதி உணவு சாப்பிட்ட மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம்
Tamil Nadu Breaking news Today 16 July 2025, Live Updates: தென்காசி மாவட்டத்தில் செயல்படும் அரசு பள்ளி விடுதியில் மதிய உணவு சாப்பிட்ட மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவுகிறது. இதுதொடர்பாக உரிய விசாரணை நடந்து வருகிறது.

LIVE NEWS & UPDATES
-
மருத்துவ கழிவுகளை கொட்டினால் குண்டர் சட்டம் – அரசிதழில் வெளியீடு
நீர் நிலைகள் மற்றும் பொது இடங்களில் மருத்துவ கழிவுகளை கொட்டினால் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற உத்தரவு தமிழ்நாடு அரசின் அரசிதழில் வெளியிடப்பட்டது. கடந்த ஏப்ரல் மாதம் சட்டப்பேரவையில் கொண்டு வரப்பட்ட மசோதா, ஜூலை 8ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
-
கும்மிடிப்பூண்டி செல்லும் ரயில் வராததால் ஆத்திரம் – பயணிகள் மறியல்
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி மார்க்கமாக செல்லும் புறநகர் ரயில்கள் ஒரு மணி நேரத்திற்கும் மேல் வராததால் விம்கோ நகர் ரயில் நிலையத்தில் காத்திருந்த பயணிகள் ஆத்திரமடைந்துள்ளனர். இதனால் சென்னை சென்ட்ரல் மார்க்கமாக செல்லும் ரயிலை மறித்து கோஷமிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
-
விடுதியில் மதிய உணவு சாப்பிட்ட மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம்
தென்காசி மாவட்டம் பண்பொழியில் உள்ள பெண்கள் மேல்நிலைப்பள்ளி விடுதியில் மதிய உணவு சாப்பிட்ட மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால் பதற்றம் நிலவுகிறது. 9 மாணவிகளுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ள நிலையில் அனைவரும் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிகப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
சளியால் பாதிக்கப்பட்ட 8 மாதக் குழந்தை தைலம் தேய்த்தால் உயிரிழப்பு
சென்னையில் சளியால் பாதிக்கப்பட்ட 8 மாதக் குழந்தைக்கு தைலம் மற்றும் கற்பூரம் அதிக அளவில் தேய்த்ததால் மூச்சுத்திணறல் மற்றும் உடல்நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து குழந்தைகள் நலன் சார்ந்த விஷயத்தில் பெற்றோர்கள் மிகுந்த அக்கறையுடனும், விழிப்புணர்வுடனும் செயல்பட வேண்டும் என மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
-
ரிதன்யா விவகாரம்: மாதர் சங்கம் பற்றி விமர்சித்த சீமான் மீது போலீசில் புகார்
திருப்பூரில் திருமணமான இரு மாதங்களிலேயே வரதட்சணை கொடுமை உள்ளிட்ட பிரச்னைகளால் தற்கொலை செய்துக் கொண்ட ரிதன்யா விவகாரத்தில் மாதர் சங்கம் பற்றி நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் காட்டமாக விமர்சித்திருந்தார். இந்நிலையில் அவர் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் புகார் தெரிவித்துள்ளனர்.
-
ஒரே நேரத்தில் 10 குட்டிகளை ஈன்ற அனகொண்டா பாம்பு
வண்டலூர் உயிரியல் பூங்காவில் பரமாரிக்கப்பட்டு வரும் அனகொண்டா பாம்பு 10 குட்டிகளை ஒரே நேரத்தில் ஈன்றுள்ளது. இதன் புகைப்படம் இணையத்தில் வைரலாகி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. மருத்துவ கண்காணிப்பில் உள்ள அனைத்து குட்டிகளும் விரைவில் மக்கள் பார்வைக்கு காட்சிப்படுத்தப்படும் என பூங்கா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
-
4 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் நாளை (ஜூலை 17) கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கோவை, நீலகிரி, தேனி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
-
கூட்டணிக்கு நாங்கள் தான் தலைமை.. நான் எடுப்பதுதான் முடிவு.. இபிஎஸ் திட்டவட்டம்
2026 தமிழக சட்டமன்ற தேர்தலில் கூட்டணிக்கு தேசிய ஜனநாயக கூட்டணியைப் பொறுத்தவரை நாங்கள் தான் (அதிமுக) தலைமை என எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மேலும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் என்றும், கூட்டணி ஆட்சி என அமித்ஷா கூறவில்லை, எங்கள் கூட்டணியே ஆட்சியமைக்கும் என அவர் தெரிவித்ததாகவும் விளக்கமளித்துள்ளார்.
-
அஜித்குமாரின் பிரேத பரிசோதனை அறிக்கை.. போலீசார் மீது புகார்
சிவகங்கை மாவட்டத்தில் போலீஸ் விசாரணையில் உயிரிழந்த மடப்புரம் கோயில் காவலாளி அஜித் குமாரின் பிரேத பரிசோதனை அறிக்கையின் நகலை தருவதில் தாமதம் செய்வதாக கூறி என தம்பி நவீன் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை அதிகாரிகளிடம் திருப்புவனம் காவல்துறையினர் மீது புகார் அளித்துள்ளார்.
-
திருவள்ளுவரை அவமதிக்கும் செயல்.. ஆளுநருக்கு ப.சிதம்பரம் கண்டனம்
காவி உடை போர்த்தப்பட்ட திருவள்ளுவர் சித்திரம் போல், இல்லாத பாடலை ‘திருக்குறள்’ என்று பரப்புவது திருவள்ளுவரை அவமதிக்கும் ஒரு மன்னிக்க முடியாத செயல் என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார். ஆளுநர் அளித்த விருதில் திருக்குறளில் இல்லாத குறள் இடம் பெற்றிருந்தது சர்ச்சையாகியிருந்தது.
தமிழகத்தில் அரசியல் சூழ்நிலை, வானிலை நிலவரம், போராட்டம், தமிழக அரசின் மக்கள் நலன் சார்ந்த அறிவிப்புகள் என பல முக்கிய அம்சங்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ளலாம். குறிப்பாக பாமகவில் (PMK Party) நிலவும் உட்கட்சி விவகாரம் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அண்ணாமலை பல்கலைக்கழக விழுப்புரம் முதுநிலை விரிவாக்க மையத்திற்கு மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பை உடனடியாக வெளியிட அரசை வலியுறுத்தி, அதிமுக சார்பில் வருகிற ஜூலை 17, 2025 அன்று போராட்டம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும் தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) அடுத்த திட்டங்கள் போன்ற அரசியல் சார்ந்த நிகழ்களை இந்தப் பக்கத்தில் உடனுக்குடன் வழங்கவுள்ளோம். அரசின் சேவைகள் மற்றும் நலத்திடங்கள் போன்ற பயனுள்ள தகவல்கள் இந்த பக்கத்தில் கிடைக்கும். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திருச்சி பஞ்சப்பூர் பேருந்து முனையத்தை ஜூலை 16, 2025 அன்று திறந்து வைக்கிறார். பேருந்து நிலையத்தில் செய்யப்பட்டுள்ள வசதிகள், பேருந்துகள் குறித்த விவரங்களை இந்த பகுதியில் பார்க்கலாம். மேலும் திறப்பு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் (MK Stalin) வெளியிடும் முக்கிய அறிவிப்புகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ளலாம். தமிழகத்தில் வானிலை மாற்றங்கள் கணிக்க முடியாததாக இருக்கிறது. சில இடங்களில் வெயில் கொளுத்தும் நிலையில், ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் வானிலை குறித்து தகவல்களை இந்தப் பக்கத்தில் உங்களால் தெரிந்துகொள்ள முடியும். அஜித் குமாரின் லாக் அப் மரணம் தொடர்பான வழக்கில் சிபிஐ விசாரணையை தொடங்கியிருக்கிறது. இந்த வழக்கு தொடர்பாக நாளுக்கு நாள் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி வருகிறது. அது தொடர்பான தகவல்களை விரைவாகவும் உண்மைக்கு நெருக்கமாகவும் இந்தப் பக்கத்தில் பார்க்கலாம். குற்றாலத்தின் சாரல் திருவிழா வருகிற 19 ஆம் தேதி துவங்கவிருக்கிறது. அதுகுறித்த அப்டேட்டுகளையும் உங்களுக்கு உடனுக்குடன் வழங்கவுள்ளோம்.
மேலும் தமிழ்நாடு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள க்ளிக் செய்க!
Published On - Jul 16,2025 7:03 AM