Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

திருச்சி பஞ்சப்பூர் பேருந்து முனையத்திலிருந்து எந்த ஊருக்கு பேருந்துகள் இயங்கும்..? விவரம் உள்ளே..!

Panchapur Integrated Bus Stand: திருச்சியில் ரூ.480 கோடி மதிப்பில் கட்டப்பட்ட புதிய பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் ஜூலை 16 முதல் முழுமையாக செயல்படத் தொடங்கியுள்ளது. மத்திய பேருந்து நிலையத்திலிருந்து பெரும்பாலான பஸ்கள் இங்கு மாற்றப்பட்டுள்ளன. நகர்ப்புற பஸ்கள் மட்டும் மத்திய நிலையத்தில் இயங்கும்.

திருச்சி பஞ்சப்பூர் பேருந்து முனையத்திலிருந்து எந்த ஊருக்கு பேருந்துகள் இயங்கும்..? விவரம் உள்ளே..!
பஞ்சப்பூர் பஸ் ஸ்டாண்டுImage Source: x
Sivasankari Bose
Sivasankari Bose | Updated On: 16 Jul 2025 07:25 AM

திருச்சி ஜூலை 16: திருச்சி (Trichy) நகரில் போக்குவரத்து நெருக்கடி மற்றும் எதிர்கால வளர்ச்சி தேவைகளை கருத்தில் கொண்டு, பஞ்சப்பூர் (Panchapur bus stand) பகுதியில் ரூ.480 கோடி மதிப்பில் புதிய ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் (New Integrated Bus Station) கட்டப்பட்டுள்ளது. இப்பேருந்து நிலையம் ‘முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி ஒருங்கிணைந்த பேருந்து நிலையம்’ என பெயரிடப்பட்டுள்ளது. கடந்த 2025 மே 9-ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதனை திறந்து வைத்தார். நிர்வாக கட்டுப்பாடுகள் மற்றும் கடை ஏலங்கள் காரணமாக இதுவரை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரவில்லை. இந்த நிலையில் இன்று ஜூலை 16-ஆம் தேதி முதல் இப்பேருந்து முனையம் பயன்பாட்டுக்கு வரவுள்ளது.

இன்று ஜூலை 16-ஆம் தேதி முதல் புதிய பஞ்சப்பூர் பேருந்து நிலையம்

இந்நிலையில், இன்று ஜூலை 16-ஆம் தேதி முதல் புதிய பஞ்சப்பூர் பேருந்து நிலையம் முழுமையாக செயல்பாட்டுக்கு வருவதாக மாவட்ட ஆட்சியர் வே.சரவணன் தெரிவித்தார். இதற்கமைய, திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து புறநகர் மற்றும் தூரநகர் பஸ்கள் இயக்கப்படாமல், அனைத்தும் பஞ்சப்பூர் புதிய பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும். மத்திய நிலையத்தில் நகர்பயண பஸ்கள் மட்டும் இயங்கும். சத்திரம் பஸ் நிலையத்தில் இருந்து பெரம்பலூர், அரியலூர், கடலூர் மற்றும் ஜெயங்கொண்டம் பஸ்கள் வழக்கம்போல் இயக்கப்படும்.

புதுப்பேட்டை பேருந்து நிலையத்தில் 20 தேநீர் கடைகள், 12 உணவகங்கள் மற்றும் 10 ஸ்நாக்ஸ் கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. நிரந்தர காவல் நிலையம் அமைக்கவும் அனுமதி கோரப்பட்டுள்ளது. மத்திய பஸ் நிலையத்துடன் இணைக்கும் வகையில் நகரப் பேருந்துகள் இயக்கப்படும்.

வழித்தட மாற்றங்கள்:

பெரும்பாலான மாவட்டங்கள் மற்றும் நகரங்களில் இருந்து திருச்சி நோக்கி வரும் அனைத்து அரசு மற்றும் தனியார் பஸ்கள் பஞ்சப்பூர் பஸ் நிலையத்தை மட்டுமே அடைய வேண்டும். அதற்கான முக்கிய வழித்தடங்கள் பின்வருமாறு:

  • சென்னை, திருப்பதி, விழுப்புரம், புதுச்சேரி: நெ.1 டோல்கேட் வழியாக.
  • தஞ்சாவூர், கும்பகோணம், காரைக்கால்: துவாக்குடி, திருவெறும்பூர் வழியாக.
  • சேலம், நாமக்கல், பெங்களூரு: பழைய பால்பண்ணை, மன்னார்புரம் வழியாக.
  • புதுக்கோட்டை, அறந்தாங்கி, ராமேசுவரம்: விமான நிலையம், டி.வி.எஸ் டோல்கேட் வழியாக.
  • கரூர், கோவை: சாஸ்திரி சாலை, மாவட்ட நீதிமன்றம் வழியாக.
  • மணப்பாறை, திண்டுக்கல்: கருமண்டபம் வழியாக.
  • மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி: தேசிய நெடுஞ்சாலை வழியாக.

Also Read: குரூப் 4 தேர்வை ரத்து செய்யுங்கள்… தமிழக அரசுக்கு சீமான் வலியுறுத்தல்

ஆம்னி பஸ்களுக்கு தனி இடம்:

தற்காலிகமாக ஒதுக்கப்பட்ட இடங்களில் ஆம்னி பஸ்கள் பயணிகளை ஏற்றி இறக்க வேண்டும். மத்திய பஸ் நிலையம் சுற்றுப்பகுதிகளில் இவை நிறுத்தப்பட அனுமதியில்லை.

பாதுகாப்பு ஏற்பாடுகள்:

பஸ்கள் பஞ்சப்பூர் நிலையத்தில் சென்று வரும்போது காவல் சோதனை சாவடி மூலம் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் மட்டும் செல்ல வேண்டும். அனைத்து வெளிச்செல்லும் பஸ்களும் யூ-டர்ன் எடுத்து மீண்டும் தேசிய நெடுஞ்சாலை வழியாக செல்ல வேண்டும்.

சமூகத்தின் கவனத்திற்கு:

பொதுமக்கள் புதிய பஸ் நிலைய அமைவிடம் மற்றும் இயக்க திட்டங்களை கவனித்து, வழித்தடங்களில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப பயணத்தை திட்டமிட்டு பயணிக்க வேண்டும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.