சென்னை, பிப்ரவரி 4, 2026: மக்களவையில் எட்டு எதிர்க்கட்சித் தலைமை உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடுமையாக கண்டித்துள்ளார். பிப்ரவரி 3, 2026 அன்று, முன்னாள் இராணுவத் தளபதி (ஓய்வு) மனோஜ் நரவானே எழுதிய வெளியிடப்படாத நினைவுக் குறிப்புகள் தொடர்பாக பேச அனுமதி மறுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மக்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் போது நடந்த “ஒழுங்கீன நடத்தை” காரணமாக, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஏழு எம்.பி.க்களும், சிபிஐ(எம்) கட்சியைச் சேர்ந்த ஒருவர் என மொத்தம் எட்டு பேர், பட்ஜெட் கூட்டத்தொடரின் மீதமுள்ள காலத்திற்கு இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
8 எம்.பிக்கள் இடைநீக்கம் – முதல்வர் ஸ்டாலின் கண்டனம்:
Why is the Union BJP Government fearing the questions raised by the Hon’ble Leader of Opposition & my brother, Thiru. @RahulGandhi?
The government must be prepared to answer the members of the House and provide clarity on matters of national security and economic interests.
I…
— M.K.Stalin – தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@mkstalin) February 4, 2026
இந்த இடைநீக்கத்தை உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தினார். தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்களில் பேசும் ஜனநாயக உரிமை மீண்டும் வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். எக்ஸ் (முன்னர் ட்விட்டர்) தளத்தில் வெளியிட்ட பதிவில், “ராகுல் காந்தி எழுப்பும் கேள்விகளை மத்திய பாஜக அரசு ஏன் அஞ்சுகிறது?” எனவும் கேள்வி எழுப்பினார். தேசிய பாதுகாப்பு மற்றும் பொருளாதார நலன் போன்ற விவகாரங்களில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மத்திய அரசு தெளிவான பதில் அளிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
மேலும் படிக்க: ஆன்லைன் விளையாட்டால் நேர்ந்த சோகம்.. 3 சறுமிகள் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம்.. நடந்தது என்ன?
இடைநீக்கத்திற்கு என்ன காரணம்?
மக்களவை மூன்று முறை ஒத்திவைக்கப்பட்ட பின்னர், நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் கிரண் ரிஜிஜு, மாலை 3 மணியளவில், தலைவர் மீது காகிதங்களை கிழித்து வீசியதாகக் கூறி, எட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்களை இடைநீக்கம் செய்யும் தீர்மானத்தை முன்வைத்தார். அந்த தீர்மானம் குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டது. இந்த அமர்வை அசாம் மாநிலத்தைச் சேர்ந்த பாஜக எம்.பி. திலீப் சைகியா தலைமை தாங்கினார்.
இடைநீக்கம் செய்யப்பட்டவர்கள் குர்ஜீத் சிங் அவ்ஜ்லா, ஹிபி ஈடன், சி.கிரண் குமார் ரெட்டி, அமரிந்தர் சிங் ராஜா வாரிங், மாணிக்கம் தாகூர், பிரஷாந்த் படோலே, டீன் குரியகோஸ் (காங்கிரஸ்) மற்றும் எஸ். வெங்கடேசன் (சிபிஐ-எம்) ஆகியோர் ஆவர்.
இதனைத் தொடர்ந்து, ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்திற்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவுக்கு ராகுல் காந்தி கடிதம் எழுதி, “தேசிய பாதுகாப்பு” தொடர்பான விவகாரத்தில் பேச அனுமதி மறுக்கப்பட்டது ஜனநாயகத்திற்கு அவமானம் என கடுமையாக கண்டித்தார். இந்த இடைநீக்கங்கள், பட்ஜெட் கூட்டத்தொடரின் மீதமுள்ள நாட்களில் அரசு–எதிர்க்கட்சி மோதலை மேலும் தீவிரப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.