மின்வாரியத்துக்கு ரூ.2.5 லட்சம் கோடி கடன் – அமைச்சர் நிர்மல்குமார் பரபரப்பு தகவல்
தமிழ்நாடு மின் வாரியத்துக்கு ரூ.2.5 லட்சம் கடன் இருப்பதாக மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல் குமார் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். மேலும் பேசிய அவர், முன்பு மின்துறையை நிர்வகித்தவர்கள் செய்த பணிகள் குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை, மே 21 : தமிழ்நாடு மின் வாரியத்துக்கு ரூ.2.5 லட்சம் கடன் இருப்பதாக மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல் குமார் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். இது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், தமிழ்நாடு மின்சாரவாரியம் ரூ.2.5 லட்சம் கோடி கடனில் உள்ளது. முன்பு மின்துறையை நிர்வகித்தவர்கள் செய்த பணிகள் குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். பல டெண்டர் முறைகேடுகள் நடைபெற்றுள்ளன. நிர்வாகத்தை சீரமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம். மின் வாரியத்தில் தவறுகள் நேர்ந்தால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உள்ளிட்டோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
மேலும் பேசிய அவர் மக்களின் புகார்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியிருக்கிறோம் என்றார். சென்னையின் சில பகுதிகளில் மே 20, 2026 நேற்றிரவு மன் தடை ஏற்பட்டதாக புகார்கள் எழுந்த நிலையில் இவர் இத்தகைய குற்றச்சாட்டுகளை வெளியிட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தயிருக்கிறது.