AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

பல கோடி மதிப்பிலான நிலம் அபகரிப்பு.. முன்னாள் திமுக அமைச்சர் தாமோ.அன்பரசன் மீது பரபரப்பு புகார்..

குத்தகை காலம் முடிந்து நீண்ட நாட்களாகியும் சொத்து இன்னும் திருப்பித் தரப்படவில்லை என்றும், இதுவரை ஒரு ரூபாய் கூட வாடகையாக வழங்கப்படவில்லை என்றும் புகாரில் கூறப்பட்டுள்ளது. இதனால் சொத்தின் உரிமையாளருக்கு பெரும் நிதி இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்தப் புகாரின் பேரில் போலீசார் சி.எஸ்.ஆர் பதிவு செய்து முதற்கட்ட விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

பல கோடி மதிப்பிலான நிலம் அபகரிப்பு.. முன்னாள் திமுக அமைச்சர் தாமோ.அன்பரசன் மீது பரபரப்பு புகார்..
தாமோ.அன்பரசன்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 13 Jul 2026 11:34 AM IST

சென்னை, ஜூலை 13: திமுகவின் முன்னாள் அமைச்சர் தாமு அன்பரசன் மற்றும் அவரது தனிச் செயலாளர் மீது பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை மோசடி செய்து, ஆக்கிரமித்துக் கொண்டதாக சென்னை பரங்கிமலை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட நில உரிமையாளருக்கு கொலை மிரட்டல் விடுத்து, போலி முகவரியைக் காட்டி நிலத்தை அபகரித்துள்ளதாக அந்தப் புகாரில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதையும் படிக்க: மதுரையில் அதிகாலையில் நேர்ந்த கொடூரம்.. ஆம்னி பேருந்து, அரசுப் பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்து.. 5 பேர் பலி, 41 பேர் படுகாயம்!!

வழக்கின் பின்னணி:

சென்னை செயின்ட் தாமஸ் மவுண்ட் (பரங்கிமலை) பகுதியில் வசித்து வரும் ராஜேஷ் சோமசுந்தரம் என்பவர் இந்த புகாரை அளித்துள்ளார். ஆலந்தூர் பகுதியில் தனக்குச் சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்புள்ள 5,500 சதுர அடி நிலத்தை, முன்னாள் அமைச்சர் தாமு அன்பரசன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சட்டவிரோதமாக ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக அவர் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

மிரட்டி வாங்கப்பட்ட குத்தகை:

புகார்தாரர் ராஜேஷ் சோமசுந்தரம் தெரிவித்துள்ள விவரங்கள் வருமாறு, தேர்தல் அலுவலகம்: கடந்த 2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின் போது, இந்த இடத்தை திராவிட முன்னேற்றக் கழகத்தின் (திமுக) தேர்தல் அலுவலகமாகப் பயன்படுத்தத் தருமாறு கேட்டுள்ளனர். அதற்கு ராஜேஷ் மறுப்பு தெரிவித்துள்ளார்.

கட்டிடங்கள் இடிப்பு: இதனையடுத்து, முன்னாள் அமைச்சர் தாமு அன்பரசனின் தனிச் செயலாளர் என்று கூறிக்கொண்ட ஜெய்சங்கர் என்பவர் மூலம் ராஜேஷுக்கு தொடர் மிரட்டல்கள் விடுக்கப்பட்டுள்ளன. அதன்பிறகே அவர் ஒப்புக்கொண்டுள்ளார். பின்னர் அந்த நிலத்தில் இருந்த கட்டிடங்கள் புல்டோசர் மூலம் இடிக்கப்பட்டு, கட்சி அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது.

போலி முகவரி ஒப்பந்தம்: கடந்த 2024 மார்ச் 22 அன்று, தேர்தல் பணிக்காக மட்டும் 6 மாத காலத்திற்கு ஜெய்சங்கர் என்பவர் ராஜேஷை மிரட்டி குத்தகை ஒப்பந்தத்தில் கையெழுத்து வாங்கியுள்ளார்.

ஏமாற்றமும் அச்சுறுத்தலும்:

குத்தகை காலம் முடிந்து நீண்ட நாட்களாகியும் சொத்து இன்னும் திருப்பித் தரப்படவில்லை என்றும், இதுவரை ஒரு ரூபாய் கூட வாடகையாக வழங்கப்படவில்லை என்றும் புகாரில் கூறப்பட்டுள்ளது. இதனால் சொத்தின் உரிமையாளருக்கு பெரும் நிதி இழப்பு ஏற்பட்டுள்ளது.

ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டிருந்த முகவரிக்கு ராஜேஷ் நோட்டீஸ் அனுப்பிய போது, அது தவறான முகவரி என்பதும், அப்படி ஒரு நபர் அங்கு இல்லை என்பதும் தெரியவந்து தபால் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. இதனால் இதில் மோசடி நடந்திருக்கலாம் என அவர் சந்தேகிக்கிறார்.

முன்னாள் அமைச்சருடன் சந்திப்பு:

இது குறித்து பேசுவதற்காக முன்னாள் அமைச்சர் அன்பரசனை ராஜேஷ் நேரில் சந்தித்தபோது, அந்த சொத்தை தாங்களே வைத்துக் கொள்வதாகவும், அதற்குப் பணம் தருவதாகவும் அமைச்சர் தரப்பில் கூறப்பட்டுள்ளது. ஆனால், நிலத்தை விற்கும் எண்ணம் இல்லை என்றும், தனது நிலத்தைத் திருப்பித் தருமாறும் ராஜேஷ் கூறியுள்ளார். அதற்கு ஒரு வாரம் அவகாசம் கேட்ட முன்னாள் அமைச்சர் தரப்பு, அதன் பின்னரும் நிலத்தைத் திருப்பித் தராமல் தொடர்ந்து மிரட்டல் விடுத்து வருவதாகப் புகார் மனுவில் விவரிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : எதிர்க்கட்சி தூண்டுதலில் டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம் – அமைச்சர் விக்னேஷ் பரபரப்பு குற்றச்சாட்டு

போலீஸ் நடவடிக்கை:

ஏற்கனவே முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு புகார் அனுப்பியிருந்த நிலையில், தற்போது பரங்கிமலை காவல் நிலையத்தில் ராஜேஷ் சோமசுந்தரம் புகார் அளித்துள்ளார். இந்தப் புகாரின் பேரில் போலீசார் சி.எஸ்.ஆர் (CSR) பதிவு செய்து முதற்கட்ட விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

Follow Us