எதிர்க்கட்சி தூண்டுதலில் டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம் – அமைச்சர் விக்னேஷ் பரபரப்பு குற்றச்சாட்டு
கடந்த சில நாட்களாக கோயம்புத்தூர், நீலகிரி, காஞ்சிபுரம், மதுரை, சேலம், திருவண்ணாமலையில் டாஸ்மாக் ஊழியர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் அமைச்சர் விக்னேஷ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், எதிர்க்கட்சி தூண்டுதலில் டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம் நடத்துகின்றனர் என்றார்.
சென்னை, ஜூலை 12 : கடந்த சில நாட்களாக கோயம்புத்தூர், நீலகிரி, காஞ்சிபுரம், மதுரை, சேலம், திருவண்ணாமலையில் டாஸ்மாக் ஊழியர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் அமைச்சர் விக்னேஷ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், எதிர்க்கட்சி தூண்டுதலில் டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம் நடத்துகின்றனர். சூழ்ச்சிக்கு பலியாக வேண்டாம்.
தற்போதுள்ள நிதிச் சூழலை புரிந்துகொண்டு அரசின் சீரமைப்பு முயற்சிக்கு தொழிலாளர்கள் வரவேற்பு அளிக்கின்றனர் என்றார்.
அமைச்சர் விக்னேஷ் பரபரப்பு குற்றச்சாட்டு
மேலும் பேசிய அவர், டாஸ்மாக் தொழிலாளர்களுடன் நேரடியாக பேசினேன். தொழிலாளர்கள் அரசு மீது நம்பிக்கை வைத்துள்ளனர்ய பின்விளைவுகளை ஏற்படுத்தும் போராட்டங்களை கைவிட்டு அரசுக்கு தொழிலாளர்கள் ஒத்துழைக்க வேண்டும். டாஸ்மாக் தொழிலாளர்களுக்கு மருத்துவ காப்பீட்டு வசதியை வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார் என்று தெரிவித்தார்.
இதையும் படிக்க : “முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறு பேச்சு!” – திமுக எம்பி ஆ.ராசா மீது பாய்ந்த பரபரப்பு புகார்!
பணி நிரந்தரம், ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த சில நாட்களாக டாஸ்மாக் ஊழியர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மதுபாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக வாங்குவதால், எங்களை திருடன் என கூறுவதை ஏற்க முடியாது என்றும், முறையான கட்டமைப்பை உருவாக்கி கொடுத்தால், எம்ஆர்பி விலைக்கே மதுபாட்டில் விற்க தயார் என்றும் ஊழியர்கள் தெரிவித்தனர்.
இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் விக்னேஷ், எதிர்கட்சி தூண்டுதலில் டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம் நடத்துகின்றனர் எனவும் சூழ்ச்சிக்கு பலியாக வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டார்.
இதையும் படிக்க : “கோர்ட் அதிரடி உத்தரவு”.. சிங்கப்பூர் சிகிச்சையை பாதியில் முடித்துவிட்டு சென்னை திரும்பும் எ.வ.வேலு!!
கடந்த சில நாட்களுக்கு முன் டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25 சதவீதம் ஊதிய உயர்வு வழங்கப்படுவதாகவும், இனி கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் விக்னேஷ் தெரிவித்திருந்தார். மேலும் இதுவரை டாஸ்மாக் ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட ஊதிய உயர்வு அதிகபட்சமாக ரூ.2,000 மட்டுமே இருந்தது. ஆனால், இந்த முறை முதல்வர் ஊழியர்களின் கோரிக்கையை பரிசீலித்து 25 சதவீத ஊதிய உயர்வை வழங்க உத்தரவிட்டுள்ளார என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பேசிய அவர், இனி எம்ஆர்பிக்கு மேல் மதுபானம் விற்கக்கூடாது. அரசு நிர்ணயித்த விலைக்கே மதுபானங்கள் விற்கப்பட வேண்டும். முன்னதாக கூடுதல் தொகை வசூலித்தவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. தற்போது இடைநீக்கம் செய்யப்படுகிறது. அதே குற்றத்தை மீண்டும் செய்தால் பணிநீக்கம் வரை நடவடிக்கை எடுக்கப்படும். எனினும், ஊதிய உயர்வுக்காக மதுபான விலை உயர்த்தப்படாது. ஊதிய உயர்வு ஆகஸ்ட் மாதம் முதல் அமலுக்கு வரும் என்று தெரிவித்தார்.