AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

காற்றில் கரைந்த குரல்… பாடகி எஸ்.ஜானகிக்கு அரசு மரியாதையுடன் இறுதிசடங்கு – ஆயிரக்கணக்கான ரசிகர்கள் பங்கேற்பு

பழம்பெரும் பாடகி எஸ். ஜானகி உடல்நலக்குறைவால் காலமானார், அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்த லட்சக்கணக்கான மக்கள் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். தமிழ் உட்பட பிற மொழித் திரைப்படத் துறையைச் சேர்ந்த பிரபலங்களும், மாநிலத்தின் முக்கிய அரசியல் தலைவர்களும் அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.

காற்றில் கரைந்த குரல்… பாடகி எஸ்.ஜானகிக்கு அரசு மரியாதையுடன் இறுதிசடங்கு – ஆயிரக்கணக்கான ரசிகர்கள் பங்கேற்பு
மறைந்த பாடகி எஸ்.ஜானகி
Karthikeyan S
Karthikeyan S | Published: 12 Jul 2026 17:39 PM IST

பெரும்பாலான இந்திய மொழிகளில் சுமார் 50,000க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடி ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் எஸ். ஜானகி. கடந்த சில நாட்களாக உடல் நிலை பாதிக்கப்பட்டிருந்தவர் ஜூலை 11, 2026 நேற்று மைசூரில் இவ்வுலகை விட்டு மறைந்தார். அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்த நேற்று இரவு முதல் லட்சக்கணக்கான மக்கள் திரண்டு வருகின்றனர். தமிழ் உட்பட பிற மொழித் திரைப்படத் துறையைச் சேர்ந்த பிரபலங்களும், மாநிலத்தின் முக்கிய அரசியல் தலைவர்களும் அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.

பாடகி எஸ்.ஜானகிக்கு அரசு மரியாதையுடன் இறுதிசடங்கு

இந்த நிலையில் அவரது ஜானகியின் இறுதிச் சடங்குகள் முழு அரசு மரியாதையுடன் நடைபெறும் என்று முதல்வர் டி.கே. சிவகுமார் தெரிவித்தார். தெலுங்கை தாய்மொழியாக கொண்ட எஸ். ஜானகி, பிரிக்கப்படாத ஆந்திரப் பிரதேசத்தின் குண்டூரில் பிறந்தவர். ஆனால், அவர் தனது வாழ்நாளின் இறுதிப் பகுதியை கர்நாடகாவின் மைசூரில் கழித்தார். கர்நாடகாவில் பெரும் ரசிகர் பட்டாளத்தைக் கொண்ட ஜானகிக்கு, மைசூர் மீது மிகுந்த பற்று இருந்தது. அவர் தனது இறுதி நாட்களை மைசூரில் கழித்தது மட்டுமல்லாமல், அங்கேயே தகனம் செய்யப்படவும் விரும்பினார். அவரது விருப்பப்படியே, தற்போது மைசூரில் அவரது இறுதிச் சடங்குகள் நடைபெற்று வருகின்றன.

மைசூர் மாவட்டம், எச்.டி. கோட்டை தாலுகாவில் உள்ள கனியான ஹுண்டி என்ற இடத்தில் எஸ். ஜானகியின் இறுதிச் சடங்குகள் நடைபெற்றது. இங்கு தகனம் செய்யப்பட வேண்டும் என்பதே எஸ். ஜானகியின் விருப்பமாகவும் இருந்தது. உள்ளாட்சி நிர்வாகம் ஏற்கனவே அந்த இடத்திற்குச் சென்று இறுதிச் சடங்குகளுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது. அப்பகுதி சுத்தம் செய்யப்பட்டு, இறுதிச் சடங்கிற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

எஸ். ஜானகியின் பேத்தி அப்சரா இறுதிச் சடங்குகளைச் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கு முறைப்படி இறுதிச் சடங்குகள் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து காவல்துறை மரியாதை அளிக்கப்படும். பின்னர், எஸ். ஜானகியின் உடல் பஞ்சபூதங்களில் கலக்கப்படும். மைசூரில் உள்ள மகாராஜா கல்லூரியில் இறுதி அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்பட்டது; ஜானகியின் உடலை எடுத்துச் செல்லும் ஊர்வலம் ஏற்கனவே தொடங்கிவிட்டது. அவரது உடல் மைசூரிலிருந்து எச்.டி. கோட்டை (HD Kote) தாலுகாவில் உள்ள கனியான ஹுண்டிக்குக் கொண்டு செல்லப்படவுள்ளது. பின்னர், மாலை 6 மணி முதல் 6:30 மணிக்குள் அவரது இறுதிச் சடங்குகள் நடைபெறும்.

Follow Us