AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

புதுச்சேரியில் கனமழையால் 15 அடி உயர சுவர் இடிந்து விழுந்து விபத்து.. ஒருவர் பலி.. 2 பெண்கள் உயிருடன் மீட்பு, மேலும் பலர் சிக்கியிருக்கலாம் என அச்சம்!!

Puducherry Wall Collapse: புதுச்சேரியில் பெய்த கனமழையின் காரணமாக மேட்டுப்பாளையம் லாரி பணிமனை அருகே இருந்த 15 அடி உயர பிரம்மாண்ட மதில் சுவர் திடீரென இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்தச் சம்பவத்தில் சுவரொட்டிப் பகுதியில் கடை வைத்திருந்த வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் இடுபாடுகளுக்குள் சிக்கிய நிலையில், முதியவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

புதுச்சேரியில் கனமழையால் 15 அடி உயர சுவர் இடிந்து விழுந்து விபத்து.. ஒருவர் பலி.. 2 பெண்கள் உயிருடன் மீட்பு, மேலும் பலர் சிக்கியிருக்கலாம் என அச்சம்!!
சுவர் இடிந்து விபத்து
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 07 Aug 2026 06:37 AM IST

புதுச்சேரி, ஆகஸ்ட் 07: புதுச்சேரியில் பெய்த கனமழையின் காரணமாக லாரி பணிமனை அருகே இருந்த 15 அடி உயர பிரம்மாண்ட சுவர் இடிந்து விழுந்ததில், சாலையோரக் கடைகளில் இருந்த வியாபாரிகள் மற்றும் வாடிக்கையாளர்கள் பலர் இடுபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டனர். இதில் முதியவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், இரு பெண்கள் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.

இதையும் படிக்க : மீண்டும் மீண்டுமா… உதயநிதி காரில் ஏற சென்ற எடப்பாடி.. சட்டப்பேரவையில் நிகழ்ந்த நிகழ்வு!

விபத்து நடந்த விதம்:

புதுச்சேரியில் இரவு 7 மணி முதல் பலத்த கனமழை பெய்யத் தொடங்கியது. இதன் காரணமாக, புதுச்சேரி மேட்டுப்பாளையம் லாரி பணிமனை அருகே இருந்த சுமார் 25 அடி நீளமும் 15 அடி உயரமும் கொண்ட பெரிய மதில் சுவர், மழையின் ஈரப்பதத்தைத் தாங்க முடியாமல் திடீரென இடிந்து விழுந்தது. இதில், அந்த சுவரை ஒட்டிய பகுதியில் சிறு கடைகள் வைத்திருந்த வியாபாரிகள் மற்றும் அங்குப் பொருட்கள் வாங்க வந்த வாடிக்கையாளர்கள் பலர் எதிர்பாராத விதமாகச் சுவரின் இடுபாடுகளுக்குள் சிக்கி உயிருக்குப் போராடினர்.

துரிதப்படுத்தப்பட்ட மீட்புப் பணிகள்:

தீயணைப்பு மற்றும் மீட்புக் குழு: விபத்தைக் கண்ட அருகில் இருந்த பொதுமக்கள் உடனடியாகத் தீயணைப்புத் துறை மற்றும் காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் தீயணைப்புத் துறை வீரர்கள், பொதுப்பணித்துறை ஊழியர்கள் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இடிபாடுகளை அகற்றத் தீயணைப்பு வாகனங்கள், ஆம்புலன்ஸ்கள் மற்றும் ஜே.சி.பி பொக்லைன் இயந்திரங்கள் உடனடியாகக் களமிறக்கப்பட்டுத் தீவிர மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இரண்டு பெண்கள் மீட்பு:

இடுபாடுகளில் சிக்கி உயிருக்குப் போராடிய இரண்டு பெண்கள் தீயணைப்புத் துறையினரால் பத்திரமாக உயிருடன் மீட்கப்பட்டனர். அவர்கள் உடனடியாக மேலதிகச் சிகிச்சைக்காகப் புதுச்சேரி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். துரதிர்ஷ்டவசமாக, இடுபாடுகளில் சிக்கியிருந்த முதியவர் ஒருவர் மீட்கப்படும் முன்னே பரிதாபமாக உயிரிழந்தார். சுவரின் பிரம்மாண்ட அளவின் காரணமாக இடுபாடுகளுக்குள் இன்னும் சிலர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதனால் தொடர்ந்து மீட்புப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.

இதையும் படிக்க : திமுக திட்டங்கள் மீது ஒட்டப்பட்ட வெற்றி லேபிள் – மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்

அதிகாரிகள் நேரில் ஆய்வு:

சம்பவம் நடந்த இடத்திற்குப் புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் குலசுந்தன், அப்பகுதி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் நேரில் வந்து மீட்புப் பணிகளைப் பார்வையிட்டு, முடுக்கிவிட்டனர். தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாலும், பொதுமக்கள் அப்பகுதியில் திரண்டுள்ளதாலும் மேட்டுப்பாளையம் பகுதியில் பதற்றமான சூழல் நிலவுகிறது. அசம்பாவிதங்களைத் தடுக்கக் காவல்துறையினர் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.

Follow Us