பாமக உட்கட்சி மோதல்… அன்புமணி ஆதரவாளர்கள் பதவி நீக்கம்…ராமதாஸ் அதிரடி
PMK Internal Conflict: பாமகவில் ராமதாஸ்-அன்புமணி இடையேயான உடன்பாடு இன்னும் ஏற்படவில்லை. சமரச முயற்சிகள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, ராமதாஸ் கட்சியில் இருந்து 20-க்கும் மேற்பட்ட நிர்வாகிகளை நீக்கியுள்ளார். இதில் சமூக நீதிப் பேரவைத் தலைவர் கே. பாலுவும் அடங்குவர். இந்த நடவடிக்கையால் கட்சியில் உள்ள குழப்பம் அதிகரித்துள்ளது.

விழுப்புரம் ஜூன் 11: பாட்டாளி மக்கள் கட்சியில் (Pattali Makkal Katchi) ராமதாஸ்-அன்புமணி (Ramadoss – Anbumani) இடையேயான உடன்பாடு இன்னும் ஏற்படாத நிலையில், கட்சியில் உள்ள குழப்பம் அதிகரித்துள்ளது. சமரசம் தோல்வியடைந்ததால், ராமதாஸ் நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளார். அன்புமணியின் ஆதரவாளரான சமூக நீதிப் பேரவை தலைவர் வழக்கறிஞர் கே. பாலு (Social Justice Council President Advocate K. Balu), 20 மாவட்ட நிர்வாகிகள் உட்பட கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர். பாலுவுக்கு பதிலாக வழக்கறிஞர் கோபு (Lawyer Gobu) நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்பே 45 நிர்வாகிகள் நீக்கப்பட்டிருந்தனர். கட்சித் தொற்றில் உள்ள குழப்பம் இன்னும் தொடரும் நிலைமை உள்ளது.
பாமக ஒற்றுமை சிக்கல்
பாமக தலைவர் அன்புமணி மற்றும் நிறுவனர் ராமதாஸ் இடையே உடன்பாடு ஏற்படாததால் கட்சியில் உள்ள உட்பிளவு மேலும் தீவிரமடைந்துள்ளது. சமரச முயற்சிகள் தோல்வியடைந்த நிலையில், ராமதாஸ் கடந்த சில நாட்களாக தனது நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டுள்ளார். இதன் தொடர்ச்சியாக, அன்புமணிக்கு ஆதரவாக உள்ளவர்களை தொடர்ந்து கட்சியில் இருந்து நீக்கி வருகிறார்.




சமரச முயற்சி தோல்வி?
தலைவர் அன்புமணி மற்றும் நிறுவனர் ராமதாஸ் ஆகியோருக்கு இடையே முழுமையான சமரசம் இன்னும் ஏற்படவில்லை. பலமுறை குடும்ப உறுப்பினர்கள் மற்றும் மூத்த நிர்வாகிகள் நடத்திய முயற்சிகளும் பலனளிக்காத நிலையில் சமரச முயற்சிகள் தோல்வியடைந்துள்ளன.
கடந்த 2025 ஜூன் 5ம் தேதி சென்னை சென்று, அன்புமணியை சந்தித்த ராமதாஸ், அவரது மகள் வீட்டில் மூன்று நாட்கள் தங்கியிருந்தார். இந்நிலையில் சமரச முயற்சி தோல்வியடைந்ததைத் தொடர்ந்து திண்டிவனம் அருகே உள்ள தைலாபுரத்திற்கு திரும்பிய ராமதாஸ், கட்சியில் தன் ஆதிக்கத்தை வலுப்படுத்தும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளார்.
அன்புமணி ஆதரவாளர்கள் 20 பேர் நீக்கம் – ராமதாஸ் நடவடிக்கை தீவிரம்
பாமகவில் ராமதாஸ்-அன்புமணி இடையேயான உடன்பாடு இன்னும் ஏற்படவில்லை. சமரச முயற்சிகள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, ராமதாஸ் கட்சியில் இருந்து 20-க்கும் மேற்பட்ட நிர்வாகிகளை நீக்கியுள்ளார். இதில் சமூக நீதிப் பேரவைத் தலைவர் கே. பாலுவும் அடங்குவர். இந்த நடவடிக்கையால் கட்சியில் உள்ள குழப்பம் அதிகரித்துள்ளது.
பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) இருந்து சமூக நீதிப் பேரவையின் தலைவர் வழக்கறிஞர் கே. பாலு மற்றும் 20க்கும் மேற்பட்ட மாவட்டத் தலைவர்கள், செயலாளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மேற்கொண்ட இந்த நடவடிக்கையால் பாமகவின் உள்நிலைப் பதற்றம் மேலும் தீவிரமாகியுள்ளது.
பா.ம.க. தலைமை நிலைய அறிவிப்பு
பா.ம.க. தலைமை நிலைய அறிவிப்பு
பா.ம.க. ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு:
முதல் கட்டமாக 10 மாவட்டங்களில்
மருத்துவர் அன்புமணி இராமதாஸ் பங்கேற்பு!பாட்டாளி மக்கள் கட்சியின் உறுப்பினர் சேர்க்கை, வாக்குச்சாவடி குழுக்கள் அமைப்பு, கட்சி வளர்ச்சிப் பணிகள் ஆகியவை குறித்து விவாதிப்பதற்காக… pic.twitter.com/cctsJemULe
— Dr ANBUMANI RAMADOSS (@draramadoss) June 10, 2025
மாநில பொருளாளர் திலகபாமா உள்ளிட்ட 45 பேர் நீக்கம்
இதற்கு முன்னதாகவே, அன்புமணி அணியினரான மாநில பொருளாளர் திலகபாமா உள்ளிட்ட 45 பேர் நீக்கப்பட்டிருந்த நிலையில், சமீபத்தில் அன்புமணி நடத்திய கூட்டத்தில் பங்கேற்ற வழக்கறிஞர் கே.பாலுவும் நேற்று நீக்கப்பட்டார். அவரது பதவிக்கு வழக்கறிஞர் கோபு நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், 20க்கும் மேற்பட்ட மாவட்டத் தலைவர் மற்றும் செயலாளர்களும் நீக்கப்பட்டு, புதியவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த செயல்கள் பாமக பிளவுப் பிரச்சனையை தீர்க்கும் முயற்சிக்குப் பதிலாக, குழப்பத்தை அதிகரிக்கும் வகையிலே காணப்படுகின்றன.
10 மாவட்டங்களில் பொதுக்குழு கூட்டங்கள்
மாவட்ட ரீதியில் அன்புமணி ராமதாஸ் ஆதரவாளர்கள் தொடர்ச்சியாக நீக்கப்படுவதால், பாமக அரசியல் சூழ்நிலை பரபரப்பாகி வருகிறது. இந்தச் சூழலில், அடுத்த கட்ட நடவடிக்கையை அன்புமணி ராமதாஸ் ஆரம்பித்துள்ளார். பாமக மாவட்ட ஒருங்கிணைந்த பொதுக்குழு கூட்டங்கள் தொடர்ந்து நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக, 10 மாவட்டங்களில் இந்த கூட்டங்கள் நடைபெற உள்ளன. வரும் 19ஆம் தேதி வரை திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, சேலம், தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் அன்புமணி தலைமையிலான கூட்டங்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.