CM MK Stalin : சேலத்தில் முதலமைச்சர் இரண்டு நாட்கள் கள ஆய்வு.. எந்த எந்த தேதிகளில்?
CM MK Stalin Two Days Salem Visit | தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சேலத்தில் இரண்டு நாட்கள் கள ஆய்வு மேற்கொள்ள உள்ளார். இந்த இரண்டு நாட்கள் பயணத்தின் போது நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைப்பது, கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொள்வது உள்ளிட்டவற்றை முதலமைச்சர் மேற்கொள்ள உள்ளார்.

சேலம், ஜூன் 10 : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் (Tamil Nadu Chief Minister MK Stalin) சேலத்தில் இரண்டு நாட்கள் கள ஆய்வு மேற்கொள்ள உள்ளார். ஜூன் 11, 2025 மற்றும் ஜூன் 12, 2025 ஆகிய தேதிகளில் அவர் ஆய்வு மேற்கொள்ள உள்ளார். நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைக்கும் விழா, கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக அவர் இரண்டு நாட்கள் சேலம் செல்கிறார். இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சேலம் கள ஆய்வின் முக்கியத்துவம் மற்றும் அதன் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.
சேலத்தில் இரண்டு நாட்கள் கள ஆய்வு மேற்கொள்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜூன் 11, 2025 காலை 10 மணிக்கு சென்னையில் இருந்து விமான மூலமாக சேலம் புறப்படுகிறார். அதன்படி காலை 11 மணிக்கு கோவை விமான நிலையம் சென்றடையும் முதலமைச்சர், அங்கிருந்து சாலை மார்க்கமாக ஈரோடு மாவட்டம் பெருந்துறைக்கு செல்ல உள்ளார். அங்கு நடைபெறும் வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கத்தை தொடங்கி வைத்து, 50 ஆயிரம் விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார். அதனை தொடர்ந்து மாலையில் சேலம் செல்லும் முதலமைச்சர், மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், முதலமைச்சரின் இந்த ஆலோசனை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.




முதலமைச்சரின் சேலம் பயணம் குறித்து விளக்கிய அமைச்சர்
Salem, Tamil Nadu: Minister R. Rajendran said Opposition Leader Edappadi K. Palaniswami criticizes the government just to remain relevant. He detailed CM Stalin’s Salem visit, including an 11-km roadshow, Mettur Dam water release, and welfare aid distribution to one lakh… pic.twitter.com/h3Xej04UlE
— IANS (@ians_india) June 9, 2025
மேட்டூர் அணையை திறந்து வைக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
கள ஆய்வின் இரண்டாவது நாளான ஜூன் 12, 2025 அன்று காலை 9 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேட்டூர் அணையை திறந்து வைக்கிறார். பிறகு சேலம் மாவட்டம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ள முதலமைச்சர், அந்த நிகழ்வில் சுமார் ஒரு லட்சம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார். மேலும் முடிவற்ற சில திட்ட பணிகளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்த வைக்க உள்ளார் என கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.