Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்வீடியோ

சட்டமன்ற தேர்தலில் திமுகவிடம் வி.சி.க.வும் அதிக தொகுதிகளை கோரும் – திருமாவளவன்

Thirumavalavan on 2026 TN Assembly Elections: அரியலூரில் செய்தியாளர்களைச் சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையின் அடிப்படையில் முடிவு செய்யப்படும் எனத் தெரிவித்தார். பாஜக-அதிமுக கூட்டணி இன்னும் முழுமையாக உருவாகவில்லை என விமர்சித்தார்.

சட்டமன்ற தேர்தலில் திமுகவிடம் வி.சி.க.வும் அதிக தொகுதிகளை கோரும் – திருமாவளவன்
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்Image Source: x
sivasankari-bose
Sivasankari Bose | Updated On: 13 Jun 2025 09:38 AM

அரியலூர் ஜூன் 11: அரியலூரில் (Ariyalur) செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன் (Thirumavalavan), 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் (2025 Assembly Election) திராவிட முன்னேற்ற கழக (Dravida Munnetra Kazhagam) கூட்டணியில் அதிக தொகுதிகள் கேட்பது வழக்கமானது என்றும், பேச்சுவார்த்தையின் சூழ்நிலைப்படி முடிவெடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். கூட்டணி கட்சிகள் அனைத்தையும் இணைத்து செல்ல வேண்டிய பொறுப்பு கூட்டணி தலைவர்களுக்குள்ளது என்றும் கூறினார். மதுக்கடைகள் குறித்த திமுக நிலைப்பாட்டில் தெளிவான தீர்மானம் தேவை என்றார். பாரதிய ஜனதா கட்சி – அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் கூட்டணி இன்னும் முழுமையாக உருவாகவில்லை என்றும், அவர்களின் ஆட்சி கனவு வெறும் பில்ட்அப்பாகவே இருப்பதாக விமர்சித்தார். தேசிய முற்போக்கு திராவிட முன்னேற்ற கழகம், பாட்டாளி மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் பாஜகவுடன் இணைவதில் ஆர்வம் காட்டவில்லை என்றார். திமுக வாக்குறுதிகள் 100% நிறைவேற வேண்டும் எனவும், உடனடியாக செயல்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

‘அ.தி.மு.க – பா.ஜ.க. கூட்டணியின் ஆட்சி கனவு பில்ட்அப் மாதிரியே’

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், அரியலூரில் 2025 ஜூன் 10 அன்று செய்தியாளர்களை சந்தித்தார். அந்த நேரத்தில் 2026 சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் சண்முகம் கூறிய “மேலும் அதிக தொகுதிகளை கேட்போம்” என்ற கருத்து குறித்து அவரிடம் கேள்வி எழுந்தது. அதற்கு பதிலளித்த திருமாவளவன், ஒவ்வொரு கட்சியும் தேர்தலில் அதிக தொகுதிகளை கோருவது வழக்கமானது என்றும், அது திமுக கூட்டணியானாலோ அதிமுக கூட்டணியானாலோ மாறாது என்றும் கூறினார்.

தொகுதி பங்கீட்டில் வாதங்கள் தேவைப்படும்: திருமா

தேர்தல் நேரத்தில் பேச்சுவார்த்தைகளில் நிலவும் சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு இறுதி முடிவுகள் எடுக்கப்படும். கூட்டணிக் கட்சிகள் எல்லோரையும் இணைத்துக்கொண்டு செல்லும் பொறுப்பு கூட்டணி தலைவர்களுக்கு உண்டு. அதே சமயம், மதுக்கடைகள் குறித்த திமுகவின் நிலைப்பாட்டில் தெளிவான முடிவுகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

செய்தியாளர் சந்திப்பில் திருமா

பா.ஜ.க. – அதிமுக கூட்டணியில் குழப்பம்

பாஜக – அதிமுக கூட்டணி குறித்து கருத்து தெரிவித்த அவர், “திமுக கூட்டணி கட்டுப்பாடுடன் உள்ளது; அதிமுக கூட்டணி இன்னும் முழுமையாக உருவாகவே இல்லை. அமித்ஷா வருகை செய்தாலும், தேமுதிக மற்றும் பாமக போன்ற கட்சிகள் கூட அவரை சந்திக்க விரும்பவில்லை. எனவே, இந்த கட்டத்தில் அ.தி.மு.க – பா.ஜ.க. கூட்டணி ஆட்சி அமைக்கும் என கூறுவது வெறும் பில்ட்அப்பாகத்தான் தெரிகிறது” என்றார்.

வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், அரியலூரில் 2025 ஜூன் 10 அன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தொடர்ந்து பேசிய அவர், அதிமுகவின் தேர்தல் அறிக்கையிலுள்ள வாக்குறுதிகளை 100% நிறைவேற்ற வேண்டும் எனவும், நிறைவேறாதவைகளை உடனடியாக செயல்படுத்த வேண்டிய தேவை இருப்பதாகவும் திருமாவளவன் வலியுறுத்தினார்.

2025-ல் உயிர்வாழ தகுதியான நகரங்கள் - முதல் இடத்தில் எந்த நகரம்?
2025-ல் உயிர்வாழ தகுதியான நகரங்கள் - முதல் இடத்தில் எந்த நகரம்?...
நினைத்தது நிறைவேறும்.. உறையூர் வெக்காளியம்மன் கோயில் சிறப்புகள்!
நினைத்தது நிறைவேறும்.. உறையூர் வெக்காளியம்மன் கோயில் சிறப்புகள்!...
அந்த மாதிரியான காட்சிகளில் நடிப்பது எனக்குஅசௌகரியமாக இருக்கும்...
அந்த மாதிரியான காட்சிகளில் நடிப்பது எனக்குஅசௌகரியமாக இருக்கும்......
அமெரிக்காவிற்கு சென்ற ஏர் இந்தியா விமான கருப்பு பெட்டி.. ஏன்?
அமெரிக்காவிற்கு சென்ற ஏர் இந்தியா விமான கருப்பு பெட்டி.. ஏன்?...
சஷ்டி விரதம் இருப்பவர்கள் கவனிக்க வேண்டிய விஷயம்!
சஷ்டி விரதம் இருப்பவர்கள் கவனிக்க வேண்டிய விஷயம்!...
விராட் கோலி இடத்தில் யார் இறங்குவார்கள்..? ஓபனாக சொன்ன பண்ட்!
விராட் கோலி இடத்தில் யார் இறங்குவார்கள்..? ஓபனாக சொன்ன பண்ட்!...
தமிழக மீனவர் வலையில் சிக்கிய டூம்ஸ்டே மீன்..
தமிழக மீனவர் வலையில் சிக்கிய டூம்ஸ்டே மீன்.....
இனி ஏடிஎம் மையங்களில் ரூ.100, ரூ.200 தான் அதிகம் இருக்கும்!
இனி ஏடிஎம் மையங்களில் ரூ.100, ரூ.200 தான் அதிகம் இருக்கும்!...
ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 படத்தில் கேமியோ பண்ணும் பாலிவுட் நடிகர்?
ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 படத்தில் கேமியோ பண்ணும் பாலிவுட் நடிகர்?...
கோவை வெடி விபத்து.. என்.ஐ.ஏ நடத்திய விசாரணையில் 4 பேர் கைது..
கோவை வெடி விபத்து.. என்.ஐ.ஏ நடத்திய விசாரணையில் 4 பேர் கைது.....
கார்போஹைட்ரேட்டுகள் அதிகம் சாப்பிட்டால் என்ன ஆகும்? எச்சரிக்கை..!
கார்போஹைட்ரேட்டுகள் அதிகம் சாப்பிட்டால் என்ன ஆகும்? எச்சரிக்கை..!...