Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

தமிழகத்திற்கு வரும் பிரதமர் மோடி.. பயணத் திட்டம் இதுதான்.. முழு விவரம்!

PM Modi Tamil Nadu Visit : அரசு முறைப் பயணமாக பிரதமர் மோடி 2025 ஜூலை 26,27ஆம் தேதிகளில் தமிழகத்திற்கு வருகை தர உள்ளார். தமிழகத்தில் இரண்டு நாட்கள் இருக்கும் அவர், பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். இந்த நிலையில், அதற்கான பயணத் திட்டம் வெளியாகி உள்ளது. சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்களே உள்ள நிலையில், பிரதமர் மோடியின் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

தமிழகத்திற்கு வரும் பிரதமர் மோடி.. பயணத் திட்டம் இதுதான்.. முழு விவரம்!
பிரதமர் மோடி
Umabarkavi K
Umabarkavi K | Updated On: 22 Jul 2025 20:22 PM

சென்னை, ஜூலை 22 : இரண்டு நாட்கள் பயணமாக பிரதமர் மோடி (PM Modi Tamil Nadu Visit) தமிழகத்திற்கு வருகை தர உள்ளார். 2025 ஜூலை 26,27ஆம் தேதிகளில் தமிழகத்தில் இருக்கும் பிரதமர் மோடி, பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். இந்த நிலையில், பிரதமர் மோடியின் இரு நாட்கள் பயணத் திட்டம் வெளியாகி உள்ளது. தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்களே உள்ளது. இதனால் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. அனைத்து கட்சிகளும் தீவிர பணியாற்றி வருகின்றனர். அண்மையில் தான், அதிமுக பாஜக கூட்டணி அமைத்துள்ளது. இந்த சூழலில், பிரதமர் மோடி தமிழகத்திற்கு வருகை தர உள்ளார். 2025 ஜூலை 26ஆம் தேதி கேரளாவில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு, அன்றைய தினம் தமிழகத்திற்கு வருகை தருகிறார். தொடர்ந்து, 2025 ஜூலை 27,28ஆம் தேதிகளில் தமிழக்ததில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.

இந்த நிலையில், பிரதமர் மோடியின் பயணத் திட்டம் வெளியாகி உள்ளது. அதன்படி,  கேரளாவில் இருந்து புறப்படும் பிரதமர் மோடி, 2025 ஜூலை 26ஆம் தேதி இரவு 7.50 மணியளவில் தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வருகை தருகிறார். அதைத் தொடர்ந்து, இரவு 8.30 மணி முதல் 9.30 மணி வரை விமான தூத்துக்குடி விமான நிலைய புதிய முனைய திறப்பு விழாவில் அவர் கலந்து கொள்கிறார். அங்கு உரையாற்றுவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read : ‘ஏழை குடும்பத்தில் பிறந்த எனக்கு கிடைத்த வாய்ப்பு’ நமீபியா நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உருக்கம்!

பிரதமர் மோடியின் பயணத் திட்டம்

தொடர்ந்து, இரவு 10.30 மணிக்கு தூத்துக்குடியில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு, திருச்சி விமான நிலையத்தில் தரையிறங்குகிறார். அங்கு ஒரு ஹோட்டலில் தங்குகிறார். மறுநாள் 2025 ஜூலை 27ஆம் தேதி காலை 11 மணியளவில் ஹெலிகாப்டரில் புறப்பட்டு, 12 மணிக்கு கங்கை கொண்ட சோழபுரம் கோவிலில் வழிபாடு செய்ய உள்ளார். இதனை அடுத்து, அங்கு நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு, மதியம் 2.25 மணிக்கு திருச்சி விமான நிலையத்தில் இருந்து புறப்படுகிறார்.

தூத்துக்குடி விமான நிலையம் ரூ.350 கோடி மதிப்பில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. சர்வதேச தரத்தில் அதிநவீன தரத்துடன் இந்த விமானம் நிலையம் கட்டப்பட்டுள்ளது. தற்போது தூத்துக்குடி விமான நிலையத்தில் 2 விமான நிறுவனங்கள் மூலம் சென்னை, பெங்களூருவுக்கு மட்டும் விமான சேவை உள்ளது. இந்த நிலையில், சர்வதேச தரத்தில் புதுப்பிக்கப்பட்டவுடன் இரவு நேர விமான சேவையும் தொடங்கப்படும்.

Also Read : நெருங்கும் தேர்தல்.. வரும் ஜூலை 27 தமிழகம் வரும் பிரதமர் மோடி..

ஒரே நேரத்தில் 5 விமானங்கள் நிறுத்தும் வகையிலும் புதுப்பிக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து, பல்வேறு நலத்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட உள்ளார். தொடர்ந்து, மறுநாள் 2025 ஜூலை 27ஆம் தேதி அரியலூர் மாவட்டம் கங்கை கொண்ட சோழபுரம் செல்கிறார். அங்கு நடைபெறும் ராஜேந்திர சோழ மன்னனின் திருவாதிரை பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்கிறார். தொடர்ந்து, ராஜேந்திர சோழனின் நினைவு நாணயத்தை வெளியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.