AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

நெல்லை இளைஞர் கவின் கொலை வழக்கில் அதிரடி திருப்பம்.. சுர்ஜித்தின் தாய் கைது!

தலைமறைவாக இருந்த தந்தை ஏற்கனவே கைது செய்யப்பட்டிருந்த நிலையில், சுர்ஜித்தின் தாயாரான காவல் உதவி ஆய்வாளர் கிருஷ்ணகுமாரி மட்டும் கைது செய்யப்படாமல் இருந்தார். இந்நிலையில், இச்சம்பவம் நடந்து கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்குப் பிறகு, இந்த ஆணவப்படுகொலையில் கிருஷ்ணகுமாரிக்கும் நேரடித் தொடர்பு இருப்பது சிபிசிஐடி போலீசாரின் தீவிர விசாரணையில் தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.

நெல்லை இளைஞர் கவின் கொலை வழக்கில் அதிரடி திருப்பம்.. சுர்ஜித்தின் தாய் கைது!
கைதான சுர்ஜித், கொலை செய்யப்பட்ட கவின்
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 29 May 2026 11:47 AM IST

தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நெல்லை இளைஞர் கவின் ஆணவப்படுகொலை வழக்கில், முக்கிய திருப்பமாக முதன்மைக் குற்றவாளியான சுர்ஜித்தின் தாயாரும், காவல் உதவி ஆய்வாளருமான (SI) கிருஷ்ணகுமாரி சிபிசிஐடி (CB-CID) போலீசாரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தக் கொடூரக் கொலை வழக்கு மற்றும் தற்போதைய கைது நடவடிக்கை குறித்த விரிவான விவரங்களை இக்கட்டுரையில் காணலாம்.

இதையும் படிக்க: வேளச்சேரியில் பயங்கரம்.. நடைப்பயிற்சி சென்ற 61 வயது மூதாட்டி பாலியல் வன்கொடுமை.. இருவர் கைது!

ஆணவப்படுகொலை செய்யப்பட்ட கவின்:

திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த 27 வயதான கவின் செல்வ கணேஷ் என்ற ஐடி (IT) ஊழியர், கடந்த ஜூலை மாதம் கொடூரமான முறையில் ஆணவப்படுகொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் தொடர்பாகத் தமிழக அரசு உத்தரவின் பேரில் சிபிசிஐடி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, கடந்த பல மாதங்களாகத் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

ஏற்கனவே நடந்த கைதுகள்:

இந்தக் கொலை விவகாரத்தில் ஏற்கனவே சுர்ஜித், அவரது தந்தை மற்றும் உறவினர் என மூன்று பேர் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இக்கொலையில் தொடர்புடைய சுர்ஜித்தின் தாய் மற்றும் தந்தை இருவருமே காவல் துறையில் பணியாற்றி வந்தவர்கள் என்பதும், இச்சம்பவத்திற்குப் பிறகு அவர்கள் இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆறு மாதங்களுக்குப் பின் அதிரடி திருப்பம்:

தலைமறைவாக இருந்த தந்தை ஏற்கனவே கைது செய்யப்பட்டிருந்த நிலையில், சுர்ஜித்தின் தாயாரான காவல் உதவி ஆய்வாளர் கிருஷ்ணகுமாரி மட்டும் கைது செய்யப்படாமல் இருந்தார். இந்நிலையில், இச்சம்பவம் நடந்து கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்குப் பிறகு, இந்த ஆணவப்படுகொலையில் கிருஷ்ணகுமாரிக்கும் நேரடித் தொடர்பு இருப்பது சிபிசிஐடி போலீசாரின் தீவிர விசாரணையில் தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் சிபிசிஐடி போலீசார் இன்று அவரை அதிரடியாகக் கைது செய்தனர்.

நீதிமன்றத்தில் ஆஜர்:

கைது செய்யப்பட்ட உதவி ஆய்வாளர் கிருஷ்ணகுமாரியை, சிபிசிஐடி போலீசார் நெல்லை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திச் சிறையில் அடைப்பதற்கான அடுத்தகட்ட சட்டப்பூர்வ பணிகளைத் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். இந்தக் கொலை விவகாரத்தில் தற்போது வரை ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மகன், தந்தை, தாய் மற்றும் உறவினர் என மொத்தம் நான்கு பேர் சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளது நெல்லை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க: “தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீரழிவு”.. முதல்வர் விஜய்க்கு இபிஎஸ், உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!

Follow Us