AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

“தப்புனா தப்புதான்.. மிரட்டலுக்கு அஞ்ச மாட்டோம்!”.. டாஸ்மாக் விவகாரத்தில் அமைச்சர் விக்னேஷ் அதிரடி!!

Minister Vignesh Warning on Tasmac Misconduct: பாட்டில் திரும்பப் பெறும் திட்டம் (Bottle Buy-Back Scheme) தொடர்பான டெண்டர்கள் திறக்கப்பட்டு விட்டதாகவும், டாஸ்மாக் கடைகளில் நிர்ணயிக்கப்பட்ட தொகையை விடக் கூடுதலாகப் பணம் வசூலித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், எந்தவொரு மிரட்டலுக்கும் அரசு பணியாது எனவும் அமைச்சர் விக்னேஷ் பொள்ளாச்சியில் அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.

“தப்புனா தப்புதான்.. மிரட்டலுக்கு அஞ்ச மாட்டோம்!”.. டாஸ்மாக் விவகாரத்தில் அமைச்சர் விக்னேஷ் அதிரடி!!
அமைச்சர் விக்னேஷ்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 05 Sep 2026 13:28 PM IST

கோவை, செப்டம்பர் 05: டாஸ்மாக் துறையில் சீர்திருத்தங்கள் மேற்கொள்வது மற்றும் ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது குறித்து அமைச்சர் விக்னேஷ், ப் விரிவாக விளக்கமளித்துள்ளார். இதுகுறித்து கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், டாஸ்மாக் துறையில் நிலவும் முறைகேடுகளைக் சுட்டிக்காட்டியதுடன், அத்துறையைச் சீரமைப்பது என்பது பல படிகளைக் கடந்து செல்ல வேண்டிய ஒரு சவாலான பணி எனக் குறிப்பிட்டார். மேலும், டாஸ்மாக் பணியாளர்களின் நல்வாழ்வுக்காக அரசு பல்வேறு நன்மைகளைச் செய்துள்ள நிலையில், சில்லறை விற்பனையில் கூடுதல் கட்டணம் வசூலிப்பது போன்ற தவறு செய்யும் ஊழியர்கள் மீது தயவுதாட்சண்யமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், எவ்வித மிரட்டல்களுக்கும் அரசு பணியாது என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

இதையும் படிக்க: “யாரும் ஓடிவிட வேண்டாம் என்பதா?.. கையில் அருவா கம்போடு வரப் போகிறாரா?”.. நயினார் நாகேந்திரன் விளாசல்!!

தொழிலாளர்களுக்கு அரசு வழங்கிய சலுகைகள்:

செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த அமைச்சர் விக்னேஷ், “வெறும் தண்டனைகள் மூலமாக மட்டுமே எதையும் மாற்றிவிட முடியாது என்பதே முதலமைச்சர் நமக்குக் கற்றுக்கொடுத்த பாடமாகும். எனவேதான் தொழிலாளர்களின் தேவைகளை அறிந்து, அவர்களுக்கான ஊதிய உயர்வை அரசு வழங்கியுள்ளது” என்று கூறினார். தொடர்ந்து பேசிய அவர், டாஸ்மாக் கடைகளின் பராமரிப்புச் செலவுக்காக மாதம் ரூ.5,000, ஆடை தையல் கூலியாக ஆண்டுக்கு ரூ.6,000, பொங்கல் முன்பணமாக ரூ.20,000 மற்றும் தீபாவளி போனஸாக ரூ.15,000 வரை வழங்கப்பட்டு வருவதாகப் பட்டியலிட்டார். மேலும், பாட்டில் திரும்பப் பெறும் திட்டம் (Bottle Buy-Back Scheme) தொடர்பான டெண்டர்கள் திறக்கப்பட்டு விட்டதாகவும், இன்னும் 25 நாட்களில் இத்திட்டம் அமலுக்கு வரும் என்றும் உறுதி அளித்தார்.

கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை:

கோவை, மதுரை உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகளில் கடைகள் சீராக இயங்கி வருவதாகவும், எம்.ஆர்.பி (MRP) விலையிலேயே மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் சுட்டிக்காட்டிய அமைச்சர், சில இடங்களில் தவறான வழிகாட்டுதல்கள் காரணமாகவே தொழிலாளர்கள் கூடுதலாகப் பணம் வாங்கும் தவறுகளில் ஈடுபடுவதாகத் தெரிவித்தார். “யார் தவறு செய்தாலும், அது தவறுதான். கூடுதல் பணம் வாங்கும் ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்படுவார்கள். போராட்டம் அல்லது மிரட்டல் மூலமாக அரசைப் பணிய வைக்க நினைத்தால், அதற்கு அரசு ஒருபோதும் அஞ்சாது அல்லது பணியாது” என்று அமைச்சர் விக்னேஷ் மிகக் கடுமையான எச்சரிக்கையை விடுத்தார்.

இதையும் படிக்க: கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை.. சென்னை, திருச்சியில் 10 இடங்களில் தீவிர ஆய்வு!

துறை ரீதியான சீர்திருத்தங்கள்:

கடந்த காலங்களில் டாஸ்மாக் ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட குறைந்தபட்ச ஊதியம் மற்றும் அடிப்படை வசதிகளின்மையே இத்தகைய முறைகேடுகளுக்குக் காரணமாக அமைந்ததாகச் சுட்டிக்காட்டிய அமைச்சர், தற்போதைய அரசு ஊழியர்களின் கோரிக்கைகளுக்கு முன்னுரிமை அளித்து ஊதியத்தை உயர்த்தி உள்ளதை நினைவுபடுத்தினார். ஊழியர்களின் நலனைப் பாதுகாக்கும் அதே வேளையில், நுகர்வோர் பாதிக்கப்படுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்பதில் அரசு உறுதியாக உள்ளது. இதற்காகக் கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு, அனைத்துக் கடைகளிலும் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதுடன், தடையற்ற மற்றும் வெளிப்படையான முறையில் டாஸ்மாக் நிர்வாகத்தைச் சீரமைக்கத் தேவையான அனைத்துத் தொழில்நுட்ப மற்றும் நிர்வாக நடவடிக்கைகளும் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

Follow Us