Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

குமரியில் அவலம்: சூறாவளிக்காற்றில் சாய்ந்த 150-க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள்…

Kanyakumari Rains: கடந்த வாரம் கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை மற்றும் சூறாவளி காற்று கடுமையாகப் பெய்து வருகிறது. கடல் சீற்றம் அதிகரித்துள்ளதால் மீனவர்கள் கடலுக்குச் செல்லக் கூடாது என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்ததால் பல இடங்களில் மின் தடை ஏற்பட்டுள்ளது. தீயணைப்புத் துறையும் மின்வாரியமும் சேதத்தைச் சரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

குமரியில் அவலம்: சூறாவளிக்காற்றில் சாய்ந்த 150-க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள்…
சூறாவளிக்காற்றில் சாய்ந்த 150-க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள்Image Source: x
sivasankari-bose
Sivasankari Bose | Updated On: 30 May 2025 19:36 PM

நாகர்கோவில் மே 30: குமரி (Kanniyakumari) மாவட்டத்தில் கடந்த வாரமாக கனமழையுடன் (Heavy Rain) சூறைக்காற்று அதிகரித்து வருகிறது. கடற்கரை கிராமங்களில் கடல் சீற்றம் காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் முறிந்து விழுந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் 90-க்கும் மேற்பட்ட இடங்களில் மரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். 150-க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சேதமடைந்துள்ளன. தொடரும் மழையால் ஆறுகள், குளங்களில் வெள்ள அபாயம் உருவாகி வருகிறது.

மாவட்டம் முழுவதும் கடந்த ஒரு வாரமாக கனமழை

கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் கடந்த ஒரு வாரமாக கனமழையுடன் சூறைக்காற்றும் இடையில்லாமல் உள்ளடக்கமாய் பெய்து வருகிறது. குறிப்பாக கடற்கரை கிராமங்களில் கடல் சீற்றம் அதிகரித்து வருகிறது. ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரையிலான பகுதிகளில் கடல் பேரலை ஏற்படக்கூடும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளதால், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும், சுற்றுலாப் பயணிகள் கடற்கரைக்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சூறைக்காற்றில் மரங்கள் முறிந்தன

இந்தநிலையில் இன்று கடலில் ராட்சத அலைகள் எழுந்தன. மீனவர்கள் தங்களது படகுகளை பாதுகாப்பாக நிறுத்தியிருந்தனர். தொடர்ந்து பெய்த கனமழையுடன் சூறைக்காற்றும் வீசியதால், பல கடற்கரை பகுதிகளில் மரக்கிளைகள் முறிந்து வீழ்ந்தன.

மரங்கள் முறிந்தன

மின் இணைப்புக்கு பாதிப்பு: மக்கள் அவதி

நாகர்கோவில் நகர பகுதிகளில் மரங்கள் முறிந்து விழுந்ததால் மின்கம்பங்கள் சேதமடைந்தன. மீனாட்சிபுரம் பகுதியில் நேற்று இரவு முதல் மின்சாரம் தடைபட்டது. இறச்சகுளம், நாவல்காடு, ஆசாரிப்பள்ளம், ஈத்தாமொழி பகுதிகளிலும் மரங்கள் மின்கம்பங்களில் விழுந்ததால் மின்வயர்கள் துண்டிக்கப்பட்டன. இதனால் பல கிராமங்கள் இருளில் மூழ்கின.

வீட்டின் மீது மரம் விழுந்ததால் தம்பதிக்கு பாதிப்பு

ஈத்தாமொழி அருகே சுண்டபற்றிவிளை பிலா விளை பகுதியில் 2 மரங்கள் ஒரு வீட்டின் மீது முறிந்து விழுந்தன. வீட்டில் இருந்த கணவன்-மனைவி வெளியே வர முடியாமல் தவித்தனர். தகவலறிந்த நாகர்கோவில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று மரங்களை வெட்டி, இருவரையும் பாதுகாப்பாக மீட்டனர்.

தீயணைப்பு வீரர்கள் விரைந்த செயல்பாடு

நாகர்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மட்டும் 40-க்கும் மேற்பட்ட இடங்களில் மரங்களை வெட்டி அகற்றியுள்ளனர். குலசேகரம், குழித்துறை, குளச்சல், தக்கலை, கன்னியாகுமரி தீயணைப்பு வீரர்களும் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் செயல்பட்டுள்ளனர்.

டிரான்ஸ்பார்மர் சேதம் – 10 கிராமங்கள் மின்வெட்டு

கொட்டாரம் அருகே சந்தையடி பகுதியில் மரம் விழுந்ததில் டிரான்ஸ்பார்மர் சேதமடைந்தது. இதனால் 10-க்கும் மேற்பட்ட கிராமங்கள் மின்விளக்கின்றி இருந்தன. மின்வாரிய ஊழியர்கள் நடவடிக்கை எடுத்ததில், இரவு 10 மணி அளவில் மின்சாரம் வழங்கப்பட்டது.

 150-க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் உடைப்பு

முழு மாவட்டத்திலும் வீசிய சூறைக்காற்றால் 150-க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் உடைந்து சேதமடைந்துள்ளன. தக்கலை, குழித்துறை, இரணியல் உள்ளிட்ட பகுதிகளில் மின்கம்பங்கள் முறிந்தன. சென்னித்தோட்டம் பகுதியில் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த மரம் வேரோடு சாய்ந்தது.

மரம்சாய்வு மற்றும் மின் இணைப்பு பாதிப்பு

திருவட்டார் அருகே ஆற்றூர் பேரூராட்சி பகுதியில் 2 அயனிமரங்கள், 1 பனைமரம் முறிந்து விழுந்தன. போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து தீயணைப்பு வீரர்கள் நடவடிக்கை எடுத்து மரங்களை அகற்றி போக்குவரத்தை இயல்புநிலைக்கு கொண்டு வந்தனர். மின் இணைப்பு துண்டிக்கப்பட்ட இடங்களில் மின்வாரிய ஊழியர்கள் துரிதமாக புதிய மின்கம்பங்களை அமைத்து மின்சாரம் வழங்கி வருகின்றனர்.

மழை தொடரும் நிலையில் வெள்ள அபாயம்

தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் ஆறுகள், குளங்கள் நீரால் நிரம்பி வருகின்றன. இதனால் வெள்ள அபாயம் ஏற்படக்கூடும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அதிரடியாக குறைந்த கேஸ் சிலிண்டர் விலை.. எவ்வளவு தெரியுமா?
அதிரடியாக குறைந்த கேஸ் சிலிண்டர் விலை.. எவ்வளவு தெரியுமா?...
தமிழகத்தில் ஒரு வாரத்திற்கு கொட்டும் மழை.. சென்னையில் எப்படி?
தமிழகத்தில் ஒரு வாரத்திற்கு கொட்டும் மழை.. சென்னையில் எப்படி?...
உங்கள் ஸ்மார்ட்போன் ஸ்லோவாக உள்ளதா? - இத பண்ணுங்க!
உங்கள் ஸ்மார்ட்போன் ஸ்லோவாக உள்ளதா? - இத பண்ணுங்க!...
உலக அழகி பட்டத்தை வென்ற தாய்லாந்தை சேர்ந்த ஓபல் சுசதா!
உலக அழகி பட்டத்தை வென்ற தாய்லாந்தை சேர்ந்த ஓபல் சுசதா!...
தக் லைஃப் படத்தின் டிக்கெட் முன்பதிவு.. எப்போது ஆரம்பம் தெரியுமா?
தக் லைஃப் படத்தின் டிக்கெட் முன்பதிவு.. எப்போது ஆரம்பம் தெரியுமா?...
கோலிவுட் சினிமா.. ஜூன் மாதத்தில் இத்தனை படங்கள் ரிலீஸா?
கோலிவுட் சினிமா.. ஜூன் மாதத்தில் இத்தனை படங்கள் ரிலீஸா?...
அருணாச்சல பிரதேசத்தில் அதிர்ச்சி! நிலச்சரிவில் 7 பேர் உயிரிழப்பு!
அருணாச்சல பிரதேசத்தில் அதிர்ச்சி! நிலச்சரிவில் 7 பேர் உயிரிழப்பு!...
யூடியூப் ஷார்ட்ஸில் கூகுள் லென்ஸ் வசதி: ஈஸியா தகவல்களைப் பெறலாம்!
யூடியூப் ஷார்ட்ஸில் கூகுள் லென்ஸ் வசதி: ஈஸியா தகவல்களைப் பெறலாம்!...
பான் கார்டு குறித்து பலருக்கும் தெரியாத விஷயங்கள்!
பான் கார்டு குறித்து பலருக்கும் தெரியாத விஷயங்கள்!...
உப்புமாவுக்கு பதில் பொங்கல்! CM காலை உணவு மெனுவில் மாற்றம்..!
உப்புமாவுக்கு பதில் பொங்கல்! CM காலை உணவு மெனுவில் மாற்றம்..!...
மகனின் பட்டமளிப்பு விழாவிற்காக ஒன்று சேர்ந்த தனுஷ் - ஐஸ்வர்யா
மகனின் பட்டமளிப்பு விழாவிற்காக ஒன்று சேர்ந்த தனுஷ் - ஐஸ்வர்யா...