முன்னாள் அமைச்சர் ஏ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளன – லஞ்ச ஒழிப்புத்துறை
திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் ஜூன் 25, 2026 இன்று லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தியது. இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள், டிஜிட்டல் ஆதாரங்கள் சிக்கியுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இந்த கட்டுரையில் அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
எ.வ.வேலு
சென்னை, ஜூன் 25 : திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் ஜூன் 25, 2026 அன்று நடந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள், டிஜிட்டல் ஆதாரங்கள் சிக்கியுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2022 ஆம் ஆண்டு கரூரில் சாலைப்பணியை சங்கரானந்த் இன்ஃப்ரா நிறுவனத்திற்கு வழங்கியதில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த புகாரில் சென்னை, திருவண்ணாமலை, கரூர், திண்டுக்கல், கோவை என 20 இடங்களில் சோதனை நடைபெற்றது. இந்த நிலையில் இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Follow Us