AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

திமுக MLA மார்க்கண்டேயனுக்கு கடும் நிபந்தனைகளுடன் ஜாமீன்.. சட்டமன்றக் கூட்டத்தொடரில் பங்கேற்க விலக்கு!!

முதலமைச்சர் விஜய் குறித்து மேடையில் அவதூறாகப் பேசிய வழக்கில் கைதான விளாத்திகுளம் திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயனுக்கு, "இனிமேல் அவதூறாகப் பேசமாட்டேன்" என்ற எழுத்துப்பூர்வ உத்தரவாதத்துடன் கூடிய நிபந்தனை ஜாமீனைச் சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ளது. கூட்டத்தொடர் நடைபெறும் நாட்களில் மட்டும் காவல் நிலையத்தில் ஆஜராகிக் கையெழுத்திடுவதிலிருந்து அவருக்குச் சிறப்பு விலக்கு அளிக்கப்படுகிறது.

திமுக MLA மார்க்கண்டேயனுக்கு கடும் நிபந்தனைகளுடன் ஜாமீன்.. சட்டமன்றக் கூட்டத்தொடரில் பங்கேற்க விலக்கு!!
திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 03 Aug 2026 12:28 PM IST

சென்னை, ஆகஸ்ட் 03: தமிழக முதலமைச்சர் விஜய் குறித்து மேடையில் அவதூறாகவும் ஆபாசமாகவும் பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயனுக்குக் கடுமையான நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் இன்று அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதையும் படிக்க: கபினி அணையில் இருந்து உபரி நீர் திறப்பு 27,000 கன அடி அதிகரிப்பு.. இன்று தமிழக எல்லைக்கு வந்து சேரும் என எதிர்பார்ப்பு!!

எம்எல்ஏ அதிரடி கைது நடவடிக்கை:

விளாத்திகுளம் தொகுதி திமுக எம்.எல்.ஏ-வாக இருந்து வரும் மார்க்கண்டேயன், சமீபத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் உரையாற்றும்போது தமிழக முதலமைச்சர் விஜய் அவர்களைப் பற்றி அவதூறாகவும், ஏளனமாகவும் பேசியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்டக் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, அவரை அதிரடியாகக் கைது செய்தனர். கைதை தொடர்ந்து அவர் திருநெல்வேலியில் உள்ள பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு:

சிறையில் அடைக்கப்பட்டிருந்த மார்க்கண்டேயன், ஜாமீன் கோரி தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். ஆனால், முதலமைச்சர் குறித்துப் பொறுப்பற்ற முறையில் அவதூறாகப் பேசியதைக் சுட்டிக்காட்டி, அவரது ஜாமீன் மனுவைத் தூத்துக்குடி நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து, ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மார்க்கண்டேயன் தரப்பில் மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.கே. இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மார்க்கண்டேயன் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், “மனுதாரர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் ஆவார். விரைவில் சட்டமன்றக் கூட்டத்தொடர் தொடங்கவுள்ளதால், அதில் பங்கேற்க வேண்டிய சட்டரீதியான கடமை அவருக்கு உள்ளது. எனவே அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும்” என்று வாதிட்டார்.

அதற்கு அரசு மற்றும் காவல்துறை தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதுடன், முதலமைச்சர் குறித்து அவதூறாகப் பேசியவர் இனிமேல் இதுபோன்று பேச மாட்டேன் என்று எழுத்துப்பூர்வமாக உறுதியளித்தால் மட்டுமே ஜாமீன் வழங்குவது குறித்துப் பரிசீலிக்கலாம் என்ற காரசாரமான வாதங்கள் முன்வைக்கப்பட்டன. அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.

உயர்நீதிமன்றத்தின் நிபந்தனை ஜாமீன்:

வழக்கின் தீர்ப்பை இன்று வாசித்த நீதிபதி ஜி.கே. இளந்திரையன், திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயனுக்குப் பின்வரும் கடுமையான நிபந்தனைகளுடன் கூடிய ஜாமீனை வழங்கி உத்தரவிட்டார்:

எழுத்துப்பூர்வ உத்தரவாதம்: “இனிமேல் முதலமைச்சர் விஜய் குறித்தோ அல்லது வேறு யாரைப் பற்றியோ இதுபோன்று அவதூறாகவோ அல்லது ஆபாசமாகவோ பேச மாட்டேன்” என்று தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் மார்க்கண்டேயன் முறைப்படி எழுத்துப்பூர்வமான உத்தரவாதச் சான்றிதழைத் தாக்கல் செய்ய வேண்டும்.

காவல் நிலையத்தில் ஆஜர்: ஜாமீனில் வெளிவந்த பிறகு, தொடர்ந்து இரண்டு வாரங்களுக்குத் தூத்துக்குடி மாவட்டக் காவல் நிலையத்தில் தினமும் நேரில் ஆஜராகிக் கையெழுத்திட வேண்டும்.

இதையும் படிக்க : தமிழகத்தில் தீவிரமடையும் நாய்க்கடி அவலம்.. இந்த ஆண்டில் இதுவரை 4.68 லட்சம் பேர் பாதிப்பு; 24 பேர் உயிரிழந்த சோகம்!

சட்டமன்றக் கூட்டத்தொடர் விலக்கு:

வரும் ஆகஸ்ட் 5-ஆம் தேதி முதல் சட்டமன்றக் கூட்டத்தொடர் தொடங்கவுள்ளதால், கூட்டத்தொடர் நடைபெறும் நாட்களில் மட்டும் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகிக் கையெழுத்திடுவதிலிருந்து அவருக்கு விதிவிலக்கு அளிக்கப்படுகிறது. உயர்நீதிமன்றம் விதித்துள்ள இந்த நிபந்தனைகளின்படி, தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் உரியப் பிணைத் தொகையையும் “இனி அவதூறாகப் பேசமாட்டேன்” என்ற உத்தரவாதத்தையும் தாக்கல் செய்த பிறகே, மார்க்கண்டேயன் பாளையங்கோட்டைச் சிறையிலிருந்து விடுவிக்கப்படுவார் எனத் தெரிகிறது.

Follow Us