AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

“வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயாராகும் தமிழகம்!”.. அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதல்வர் விஜய் நாளை அவசர ஆலோசனை!!

CM Vijay to Chair High-Level Meeting: தமிழகத்தில் வரவிருக்கும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, முதலமைச்சர் விஜய் நாளை (செப். 21) தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் உயர்நில ஆலோசனைக் கூட்டம் நடத்துகிறார். இதில் டெல்டா மற்றும் கடலோர மாவட்ட ஆட்சியர்கள் 14 பேர் காணொலி வாயிலாகப் பங்கேற்கவுள்ளனர்.

“வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயாராகும் தமிழகம்!”.. அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதல்வர் விஜய் நாளை அவசர ஆலோசனை!!
கோப்புப் படம்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 20 Sep 2026 10:12 AM IST

சென்னை, செப்டம்பர் 20: தமிழகத்தில் ஆண்டுதோறும் பெய்யக்கூடிய வடகிழக்கு பருவமழைக்காலம் நெருங்கி வரும் நிலையில், மழை மற்றும் வெள்ள பாதிப்புகளில் இருந்து பொதுமக்களைப் பாதுகாக்கவும், தடையற்ற அத்தியாவசிய சேவைகளை உறுதி செய்யவும் மாநில அரசு முன்கூட்டியே தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கடந்த கால அனுபவங்களைக் கருத்தில் கொண்டு, சென்னை உட்பட கடலோர மற்றும் உள் மாவட்டங்களில் வெள்ளத் தடுப்புப் பணிகளை விரைவுபடுத்துமாறு துறை சார்ந்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இச்சூழலில், வடகிழக்கு பருவமழை எதிர்கொள்வதற்கான ஒருங்கிணைந்த தயார்நிலை குறித்த உயர்நில ஆலோசனைக் கூட்டம், தமிழக முதலமைச்சர் விஜய் தலைமையில் நாளை தலைமைச் செயலகத்தில் நடைபெறவுள்ளது.

இதையும் படிக்க: “செலவு ரூ.1.38 லட்சம் கோடி.. வருவாய் பற்றாக்குறை ரூ.20,340 கோடி!”.. வெளியான தமிழக அரசின் நிதி நிலை அறிக்கை!!

ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்போர்:

நாளை நண்பகல் 12 மணி அளவில் நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில், தலைமைச் செயலாளர், பல்வேறு துறை அமைச்சர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் நேரடியாகப் பங்கேற்கின்றனர். மேலும், பருவமழையால் அதிக பாதிப்புக்கு உள்ளாகக்கூடிய டெல்டா மற்றும் கடலோர மாவட்டங்களைச் சேர்ந்த 14 மாவட்ட ஆட்சியர்கள் காணொலிக் காட்சி வாயிலாக இக்கூட்டத்தில் இணையவுள்ளனர். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, சுகாதாரத் துறை, மின்துறை, போக்குவரத்துத் துறை உள்ளிட்ட பல முக்கியத் துறைகள் இணைந்து எவ்வாறு ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்பது குறித்து இக்கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட உள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்:

இக்கூட்டத்தில், பாதிப்பு ஏற்படக்கூடிய உணர்திறன்மிக்க பகுதிகளில் மீட்புப் படைகளை முன்கூட்டியே நிலைநிறுத்துதல், நிவாரண முகாம்களைக் கண்டறிந்து அங்குத் தேவையான குடிநீர், மின்சாரம் மற்றும் மருத்துவ வசதிகளை உறுதி செய்தல் போன்ற முக்கிய முடிவுகள் எடுக்கப்படவுள்ளன. மேலும், நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி நீர்வரத்தைச் சீராக்குதல், பலவீனமாக உள்ள மின்கம்பங்கள் மற்றும் மின்கோபுரங்களை உடனடியாகப் பலப்படுத்துதல் போன்ற பணிகளை விரைவுபடுத்த முதலமைச்சர் உத்தரவிடவுள்ளார்.

இதையும் படிக்க: அதிமுகவில் துணைப்பொதுச்செயலாளர் பதவி கேட்டார் – ஆதவ் அர்ஜுனா குறித்து இபிஎஸ் கருத்து

முதல் கட்ட அறிக்கை வெளியீடு:

பருவமழைக் காலத்தில் வேளாண் நிலங்கள் மற்றும் பயிர்கள் மூழ்கி விவசாயிகள் பாதிப்படையாமல் தடுப்பது குறித்தும், வேளாண்மைச் சார்ந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் இதில் ஆலோசிக்கப்பட உள்ளது. இப்பாதிப்புகளைத் தடுப்பதற்காக ஏற்கனவே அமைக்கப்பட்டக் குழுவின் முதற்கட்ட அறிக்கை மற்றும் வழிகாட்டு நடைமுறைகளை நாளை முதலமைச்சர் விஜய் அதிகாரப்பூர்வமாக வெளியிடவுள்ளார். இதன் மூலம், அனைத்துத் துறைகளும் முழு வீச்சில் தயாராகி வடகிழக்கு பருவமழை பாதிப்புகளைச் பூஜ்ஜிய நிலைக்குக் கொண்டுவர இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Follow Us